உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விபத்தில் 3 வாலிபர் பலி 

விபத்தில் 3 வாலிபர் பலி 

கலபுரகி: கலபுரகி, சித்தாபூர் குருஜிதாண்டா கிராமத்தில் வசித்தவர்கள் அர்ஜூன் ரத்தோட், 22, ரோகித், 22, கிருஷ்ணா, 21. மூன்று பேரும் நண்பர்கள். நேற்று முன்தினம் இரவு, லட்லாபூர் கிராமத்தில் நடந்த, திருவிழாவுக்கு பைக்கில் சென்றனர். நேற்று அதிகாலை 3:00 மணிக்கு கிராமத்திற்கு திரும்பி வந்தனர்.சித்தாபூர் அருகே ஹலகர்த்தி கிராம பகுதியில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த பைக், தறிகெட்டு ஓடி சாலையோரம் நின்ற, டிராக்டரின் பின்பக்கம் மோதியது. பைக்கில் இருந்து துாக்கி வீசப்பட்ட, மூன்று பேரும் பரிதாபமாக இறந்தனர். ஹெல்மெட் அணியாததாலும், பைக்கை வேகமாக ஓட்டி வந்ததாலும், மூன்று பேரும் இறந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை