உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு மாதம் குறைவான பென்சன்: சுப்ரீம் கோர்ட் அதிர்ச்சி

ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு மாதம் குறைவான பென்சன்: சுப்ரீம் கோர்ட் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு மாதம் ஆறு ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பென்சன் வழங்கப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.உ.பி., மாநிலம் அலகாபாத் ஐகோர்ட்டில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: 13 ஆண்டுகள் மாவட்ட நீதிமன்றத்தில் நீதித்துறை அதிகாரியாக பணியாற்றினேன். பிறகு ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டேன். ஆனால், ஓய்விற்கு பிறகு நீதித்துறை அதிகாரி பதவிக்காலத்தை கணக்கில் கொள்ள அதிகாரிகள் மறுத்துவிட்டனர். பென்சனாக ரூ.15 ஆயிரம் மட்டும் வழங்கப்படுகிறது. எனக்கூறியிருந்தார்.இதனை நீதிபதிகள் பிஆர்கவாய், பிகே மிஸ்ரா மற்றும் கேவி விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது அவர்கள் கூறியதாவது: எங்களுக்கு முன் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற ஒருவர் மாதம் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் பென்சன் தான் வாங்குகிறார் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. அது எப்படி நடக்கும் என்றனர்.நீதிபதி கவாய் கூறுகையில், ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கான பலன்கள் என்பது ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடுகிறது. சில மாநிலங்கள் நல்ல பலன்களை அளிக்கின்றன என்றார். தொடர்ந்து விசாரணை நவ.,27 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Manon
நவ 09, 2024 12:38

Retired PSU utives and workmen are getting very poor pension from Rs.1000 to 3000 only even after 35 years of continuous service. Various cases were pending in almost all the high courts in India. Is it not known to Judges. When it comes to them it is blood, to others Tomato chutney?


swam nithi
நவ 08, 2024 21:20

Law and order must to all..


swam nithi
நவ 08, 2024 21:19

All Govt employees need pension .if not pls avoid all govt employees . Don’t give only for retired judges…


V RAMASWAMY
நவ 08, 2024 19:14

மத்திய மாநில அரசு ஊழியர்கள் பெறும் சம்பளமே அவர்களுக்கு பென்ஷன் மாதிரிதான், இது தவிர கிம்பளம் வேறு, அதுவும் ரயில்வே ஊழியர்களென்றால் கேட்கவே வேண்டாம், அவர்களுக்கு ஆயுட்காலம் வரை குடும்ப இலவச ரயில் பிரயாணம், போனஸ் , இறப்புக்குப் பின் உயிருடன் இருக்கும் துணைவருக்கு இலவச ரயில் பிரயாணம், பென்ஷன் இவை.வியர்வை சிந்தி உழைக்கும் தனியார் ஊழியர்களுக்கு இவை எதுவும் கிடையாது, ஆனால் அவர்கள் கொடுக்கும் வரிப்பணம் இவர்களுக்கு. ஏனிந்த பாரபக்ஷம் ?


VS BALASUBRAMANIAN
நவ 08, 2024 18:00

இவங்க பென்ஷன் கேஸ் சுப்ரீம் கோர்ட்டில்விசாரணை க்கு பதில் ஹைகோர்ட்டில் 10 /15 வருடம் ஒத்தி வச்சு விசாரிக்க வேண்டும்


அப்பாவி
நவ 08, 2024 06:34

பாக்கி வெச்சுருக்கிற கேசுங்களுக்கு இந்த பென்சனே அதிகம்.


Jagannathan Narayanan
நவ 08, 2024 06:34

It is not enough


Kasimani Baskaran
நவ 08, 2024 05:43

எத்தனையோ கோடி தனியார் வேலை செய்பவர்களுக்கு பென்சன் கிடையாதே... அதையெல்லாம் இவர்கள் கணக்கில் கொள்வார்களா?


Ganapathy
நவ 08, 2024 04:34

இவனுங்களே நீதிபதிகளை நியமிச்சுக்கிட்டு இவனுங்களே சம்பளமும் பென்ஷனும் நியமிச்சுகிட்டு...இடதுசாரி தீவிரவாத மக்கள்விரோத ஏகாதிபத்திய ஆணவப்போக்கு கொண்ட கொலீஜியம் முறை அறவே ஒழிக்கப்படவேண்டும்.


Visu
நவ 08, 2024 03:47

2 லட்சம் காசோலை ரிட்டன் கேஸ் 5 வருசமா நடக்குது ஏமாத்துனவன் கோர்டுகே வருவதில்லை அவன்மேல் எந்த நடவடிக்கையும் இல்லை சம்பளம் கொடுப்பதே வீண் செலவு


புதிய வீடியோ