வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பொது இடம் டாஸ்மாக் பார்களில் மாஸ்க் அணிந்து தான் குடிக்கணுமா
பயம் வாணாம். பீதி வாணாம். இன்னும்.கொஞ்ச நாள் இருக்கு. அப்புறமேட்டி, நாங்க அப்பவே எச்சரிச்சோம்நு ஒன்றிய அரசு மாநில அரசுகள் மேலே பழிபோட்டுரலாம்.
புதுடில்லி: இந்தியாவில் இதுவரை 4,302 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் பலியாகி இருக்கின்றனர்.கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவி வருகிறது. குறிப்பாக கேரளா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் அதிகம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டு உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் மஹாராஷ்டிராவில் 4 பேரும், டில்லி, தமிழகம், குஜராத்தில் தலா ஒருவரும் என மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.அதேபோல், 276 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 4,302 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை நாடு முழுவதும் மொத்தம் 44 பேர் உயிரிழந்துள்ளனர். மாஸ்க் அணியுங்கள்!
இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: முதியோர், கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள் பொது இடங்களுக்குச் செல்லும் போது மாஸ்க் அணிய வேண்டும். கொரோனா பரவலால் பதற்றப்படத் தேவையில்லை. மத்திய அரசு கூறிய அறிவுறுத்தல்களையே நாங்களும் கூறி வருகிறோம், என்றார்.
பொது இடம் டாஸ்மாக் பார்களில் மாஸ்க் அணிந்து தான் குடிக்கணுமா
பயம் வாணாம். பீதி வாணாம். இன்னும்.கொஞ்ச நாள் இருக்கு. அப்புறமேட்டி, நாங்க அப்பவே எச்சரிச்சோம்நு ஒன்றிய அரசு மாநில அரசுகள் மேலே பழிபோட்டுரலாம்.