உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேற்கு வங்கத்தில் இருந்து வெளியேறின 6,688 நிறுவனங்கள்!: மம்தாவின் சொதப்பலால் பிடித்தன ஓட்டம்

மேற்கு வங்கத்தில் இருந்து வெளியேறின 6,688 நிறுவனங்கள்!: மம்தாவின் சொதப்பலால் பிடித்தன ஓட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கடந்த, 14 ஆண்டுகளில் மேற்கு வங்கத்தில் இருந்து, 6,688 நிறுவனங்கள் நாட்டின் பிற மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக கார்ப்பரேட் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. 'இதற்கு, ஆளும் திரிணமுல் காங்கிரஸ் அரசின் நிர்வாக சீர்கேடே காரணம்' என, பா.ஜ., குற்றஞ்சாட்டியுள்ளது. மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கடந்த, 2011 முதல் அக்கட்சி ஆட்சியில் நீடித்து வரும் சூழலில், தொடர்ந்து 14 ஆண்டுகளாக மம்தா முதல்வராக உள்ளார். 'சாரதா சிட்பண்ட்' ஊழல், நிலக்கரி முறைகேடு, கால்நடை கடத்தல், பொது வினியோக திட்ட குளறுபடி என ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டாலும், 'ஹாட்ரிக்' முதல்வராக அவர் தொடர்கிறார். கண்டனம் இந்நிலையில், பார்லிமென்டின் ராஜ்யசபாவில் நேற்று முன்தினம் மத்திய கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சகம் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த, 2011, ஏப்ரல் 1 - 2025, மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில், மேற்கு வங்கத்திலிருந்து நாட்டின் பிற மாநிலங்களுக்கு 6,688 பெரு நிறுவனங்கள் தங்கள் இருப்பிடத்தை மாற்றியுள்ளன. இவற்றில், 1,308 நிறுவனங்கள் மஹாராஷ்டிராவிற்கு மாறியுள்ளன. 1,297 நிறுவனங்கள் டில்லிக்கும், 879 உத்தர பிரதேசத்திற்கும், 511 சத்தீஸ்கருக்கும், 423 குஜராத்துக்கும் இடம்பெயர்ந்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில், 14 ஆண்டுகளில் 6,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வெளியேறியதற்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் 'தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் அமித் மாளவியா தன் சமூக வலைதளத்தில் கண்டனம் தெரிவித்ததுடன், மாநில அரசையும் குற்றஞ்சாட்டியுள்ளார். அதன் விபரம்: மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றது முதல் தற்போது வரை, 6,688 தொழில் நிறுவனங்கள், தங்கள் பதிவு செய்யப்பட்ட அலுவலகங்களை மேற்கு வங்கத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு மாற்றியுள்ளன. அக்கட்சியின் ஆட்சியில், மாநிலத்தின் தொழில்துறை மோசமான சூழலில் இருப்பதையே இது உணர்த்துகிறது. விரட்டியடிப்பு ஒரு காலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான மையமாக மேற்கு வங்கம் இருந்தது. மோசமான நிர்வாகம், உறுதியற்ற கொள்கை, முதலீட்டாளர்களின் நம்பிக்கையின்மை போன்ற காரணங்களால், அங்கிருந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் விரட் டியடிக்கப்பட்டுள்ளன. கடந்த, 2015 - 16ம் நிதியாண்டில், 869 நிறுவனங்களும், அதைத் தொடர்ந்து 2016 - 17ல், 918 நிறுவனங்களும் வெளியேறியுள்ளன. 2017 - 18ல் 1,027 நிறுவனங்கள் வெளியேறின. மஹாராஷ்டிரா, டில்லியைத் தவிர, ராஜஸ்தான், அசாம், ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்திய பிரதேசம், தமிழகம் மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களுக்கு நுாற்றுக்கணக்கான நிறுவனங்கள் இடம்மாறியுள்ளன. இவை அனைத்தும் வெறும் எண்கள் அல்ல; வேலை இழப்பு, பொருளாதார சரிவு போன்ற பிரச்னைகளை மாநிலத்தில் ஏற்படுத்தும். அரசின் தவறான கொள்கைகளும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறாமல் போனதும், இதற்கு முக்கிய காரணம். இதனால், பொருளதார ரீதியாக மேற்கு வங்கம் பின்தங்கியுள்ளதற்கு ஆளும் திரிணமுல் காங்கிரஸ் அரசே பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மேற்கு வங்கத்தில், அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்த பிரச்னை அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Sundar Pas
ஜூலை 24, 2025 18:56

இந்த பெண் மம்தாவின் பூர்விகத்தை தீர விசாரிக்கவேண்டும்.கூட்டிக்கழித்து பார்க்கும் போது பாகிஸ்தானின் அல்லது பங்களாதேஷின் மர்ம மதத்தின் உளவாளியாகவும் அமெரிக்க ஏஜென்டாகவும் இருக்கவேண்டும். பிராமண பெண்ணாக இருந்துகொண்டு இப்படி அரக்கமனம் துர் நடத்தையும் பெற்ற தேசப்பற்று அற்றவராக இருப்பது வாய்ப்பே இல்லை.


SUBBU,MADURAI
ஜூலை 24, 2025 13:59

6688 Companies Left West Bengal in the last 14 Years Where did the companies go? Maharashtra 1308, Delhi 129, Uttar Pradesh 879, Chhattisgarh 511, Gujarat 423, Rajasthan 333. This represents lost jobs and economic decline in West Bengal.


vbs manian
ஜூலை 24, 2025 09:29

மேற்கு வங்கத்தில் வன்முறை பெண் கொடுமை தவிர வேறு ஒன்றும் இல்லை. கம்யூனிஸ்ட் ஆட்சி பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு மோசமாகி விட்டது. மம்தா வாய்ச்சொல் வீரர். பெங்காலி பெருமை மட்டும் பேசி முன்னேற்றம் தொழில் வளர்ச்சி கொண்டு வர முடியுமா. தமிழகம் போல் உணர்ச்சி அரசியல். ஊழல் பரவி கிடக்கிறது.


திகழ் ஓவியன், AJAX, ONTARIO
ஜூலை 24, 2025 08:21

சீனாவின் துயரம் மஞ்சள் ஆறு. வங்காளத்தின் துயரம் ...பதவி வெறி கள்ள குடியேறி களின் ஓட்டு...


sridhar
ஜூலை 24, 2025 07:48

அந்த வரிசையில் அடுத்தது தமிழகம் தான். மக்களுக்கு இலவசம், மீடியாவுக்கு கவனிப்பு, சினிமா நம் கையில். இது போதும் ஆட்சியை பிடிக்க வளர்ச்சி யாருக்கு வேண்டும்.


Appan
ஜூலை 24, 2025 07:06

இந்த அம்மா ரயில்வே அமைச்சராக இருந்த பொது ரயிலில் வேகம் எதற்கு அதகரிக்கணும் என்று சொல்லி அதிவேக புல்லட் ரயில் ப்ரொஜெக்ட்டை நிறுத்தி விட்டார். ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அந்த நாட்டின் producivity முக்கியம் என்று இவருக்கு தெரியாது. நாட்டை ஏழ்மை, வறுமையில் வைத்து அதிகாரத்தில் இருக்கணும் என்ற சித்தாந்தத்தில் இருப்பவர். மேற்கு வங்கத்தை சுடுகாடு ஆக்கி ஆள்பவர் மம்தா. ஒரு காலத்தில் நாட்டில் இருந்த பெரும்பாலான சிந்தனையாளர்கள் வங்காளிகள். இப்போ வறுமையில் வாழ்ந்து சிந்தனை திறனை இழந்து விட்டார்கள்..


சுந்தர்
ஜூலை 24, 2025 06:59

இதனால் வேலை இழந்தவர்களும், பங்களாதேஷ் குடியேறிகளும் சமூகத்தில் தீய செயல்களை செய்ய ஏதுவாக அமையும். மம்தாவுக்கு உடனே மக்கள் கொடுக்க வேண்டும் கல்தா.


chennai sivakumar
ஜூலை 24, 2025 05:44

West Bengal once theecame waste bengal in TMC ruling is a clear proof.


கோபாலன்
ஜூலை 24, 2025 05:15

வறுமை, பயம், வேற்றுமையை உருவாக்கி பிளவுகள் உண்டாக்கும், ஆகியவை கால்டுவெல் அவர்களின் இந்திய கோட்பாடுகள். இவற்றை மம்தா பானர்ஜி சிறப்பாக செய்து வருகிறார்


c.mohanraj raj
ஜூலை 24, 2025 04:12

முண்டங்கள் ஆண்டாள் மூழ்கித்தான் போகும் மாநிலம் அதற்கு மம்தாவே உதாரணம்


சமீபத்திய செய்தி