| ADDED : மே 21, 2025 06:45 AM
புதுடில்லி: நாட்டின் 76 சதவீத மக்கள், அதிகம் முதல், மிக அதிக வெப்ப அபாயத்தில் உள்ளதாக, டில்லியை சேர்ந்த சி.இ.இ.டபிள்யூ., எனப்படும் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் சிந்தனைக்குழாமின் ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
அதன் விபரம்:
* கடந்த 10 ஆண்டுகளில் அதிக வெப்பமான பகலை விட, அதிக வெப்பம் நிறைந்த இரவுகள் அதிகரித்துள்ளன.* டில்லி, சண்டிகர், ஜெய்ப்பூர், லக்னோவில் அதிகாலை வெப்பம் 6 - 9 சதவீதம் உயர்ந்துள்ளது.* அதீத வெப்பமுள்ள இரவுகள் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது.* இந்த அதீத வெப்பத்தால், 3.50 கோடி நிரந்தர வேலை மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவீதத்தை, 2030ல் நம் நாடு இழக்கும் அபாயம் உள்ளது.* இரவு நேர வெப்பம் நீடிப்பது, நகர்ப்புறங்களிலேயே அதிகம்.அதீத வெப்ப அபாயத்தில் உள்ள 10 மாநிலங்கள்:
1. தமிழகம்2. டில்லி3. கோவா4. கேரளா5. மஹாராஷ்டிரா6. குஜராத்7. ராஜஸ்தான்8. ஆந்திரா9. மத்திய பிரதேசம்10. உத்திர பிரதேசம்