உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யமுனையின் சாபத்தால் ஆம் ஆத்மி தோல்வி: அதிஷியிடம் கூறிய கவர்னர்!

யமுனையின் சாபத்தால் ஆம் ஆத்மி தோல்வி: அதிஷியிடம் கூறிய கவர்னர்!

புதுடில்லி: டில்லியில் ஆம் ஆத்மியின் தோல்விக்கு யமுனை அன்னையின் சாபமே காரணம், என முன்னாள் முதல்வர் அதிஷியிடம், கவர்னர் சக்சேனா கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.யமுனை நதி கடும் மாசுபாடு அடைந்துள்ளது. இதனை புதுப்பிப்பது தொடர்பான நடவடிக்கை எடுக்க டில்லி கவர்னர் தலைமையில் குழு அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்து இருந்தது. இதற்கு முதலில் வரவேற்பு தெரிவித்த கெஜ்ரிவால் அரசு, பிறகு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. கடந்த 2015ல் யமுனை நதியை சுத்தம் செய்வோம் என கெஜ்ரிவால் உறுதி அளித்து இருந்தார். தற்போது, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை செயல்படுத்தினால், ஆம் ஆத்மிக்கு நற்பெயர் கிடைக்காது என்ற பயத்தில் கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததாக தகவல் வெளியானது.தேர்தல் பிரசாரத்தின் போது இதனையே சுட்டிக்காட்டி பா.ஜ., தீவிர பிரசாரம் செய்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தூய்மைபடுத்துவோம். அதில், சாத் பூஜையின் போது பக்தர்கள் புனித நீராடலாம் எனக்கூறியது. இதனால், இப்பண்டிகையின் போது, பீஹார், ஜார்க்கண்ட், உ.பி.,யைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர், இந்த நதிக்கரையில் வழிபடுவது வழக்கம். டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., 48 இடங்களில் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மிக்கு 22 இடங்கள் மட்டுமே கிடைத்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில், மேற்கண்ட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர் பா.ஜ.,வுக்கு ஓட்டுப்போட்டுள்ளது தெரியவந்துள்ளது. பதவி பறிபோனதால், நேற்று முதல்வராக இருந்த அதிஷி, கவர்னர் சக்சேனாவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார். அப்போது, சக்சேனா, யமுனை நதியை சுத்தம் செய்வதற்கு இடையூறு செய்தீர்கள். இதனால், யமுனை அன்னையின் சாபத்தால், உங்களுக்கு தோல்வி ஏற்பட்டது எனக்கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு அதிஷி எந்த பதிலும் அளிக்காமல் கிளம்பியதாக டில்லி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

Kanns
பிப் 11, 2025 10:51

Another Cheap Politician BJP Biased Governor Planning to Purchase AAP Ministers-MLAs. Must be Sacked With Complete Bar On Any Public Appointments


venugopal s
பிப் 10, 2025 19:14

கோமியம் குடிக்காததால் தான் தோற்று விட்டார்கள் என்று சொல்ல வேண்டியதுதானே!


Raj S
பிப் 10, 2025 22:41

அப்படி ஒன்னு இருந்தா திருட்டு திராவிட கும்பல் அத குடிக்க கொஞ்சமும் தயங்க மாட்டார்கள்... தேர்தலுக்கு முன்னால அப்பாவும், மகனும் வேல் தூக்கினவங்க தான... என்ன நான் சொல்றது


Anbuselvan
பிப் 10, 2025 16:05

ஊகத்தின் அடிப்படையிலான செய்தி இது. ஒருவேளை உண்மையாக இருக்கும் பட்சத்தில் இப்படி பேசியது தவறு. தனிப்பட்ட கருத்தை தனக்குள்ளேயே வைத்து இருக்க வேண்டும்.


Bellie Nanja Gowder
பிப் 10, 2025 19:16

அவர் சொன்னது ஒன்றும் தவறில்லை. ஆறுகளை தெய்வங்களாக வழிபடுவது நமது பாரத மக்களின் நற்பண்பு, மற்றும் நமது கலாச்சாரம். அவர்களுக்கு உரைக்கும் வகையில் சொன்னது சரியானது தான்.


karupanasamy
பிப் 10, 2025 15:48

தாயுடன், சகோதரியுடன், மகளுடன் உடலுறவு பகுத்தறிவிற்கு ஏற்புடையது என்று சொன்னவனை தூக்கிப்போட்டு மிதிக்காமல் தந்தை என்று பட்டம் கொடுத்து மகிழ்ந்த கூட்டம், நீர்நிலைகளை அழித்தொழித்து மணலையும் மலையையும் சுரண்டி விழுங்கி, சாராயத்தையும் போதை பொருளையும் தாராளமயமாக்கி எதிர் கால சந்ததியினரை அழித்தொழிக்கும் பகுத்தறிவு மாடல் ஆட்சி உலகின் தலைசிறந்த ஆட்சியில் நெம்பர் ஒண்ணாம். என்னத்த சொல்ல


T.sthivinayagam
பிப் 10, 2025 15:30

நாடளுமன்ற தேர்தலில் பாஜக மைனாரிட்டி ஆனதற்கு கங்கையின் சாபம் தான் காரணமா இருக்குமோ என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது


Laddoo
பிப் 10, 2025 13:57

அவர் உண்மையைத்தான் உவமையோடு சுட்டிக் காட்டினார். சாராய வியாபாரிகளுக்கு இதெல்லாம் உரைக்காது. அவர்கள் எருமை தோலர்கள்


Nellai Ravi
பிப் 10, 2025 12:55

அதிதி கிரிஸ்துவர்... அதனால் யமுனை யின் புனித நீராடலை பற்றி அவருக்கு கவலை இல்லை


AMLA ASOKAN
பிப் 10, 2025 12:02

இவர் RN ரவியின் சித்தப்பா மகன்


guna
பிப் 10, 2025 17:30

இப்படிக்கு திராவிட கொத்தடிமை..ஹி..ஹி


Ramesh Sargam
பிப் 10, 2025 11:39

இது போன்ற பேச்சுக்களால் பொதுவாக பாஜக அணிக்கும், குறிப்பாக பிரதமர் மோடிக்கும் அவப்பெயர். கவர்னர் அவர் பதவிக்கு தகுந்தவாறு பேசவேண்டும். அதில் அரசியல் வாடை இருக்கவே கூடாது.


Varuvel Devadas
பிப் 10, 2025 11:31

It is the grea stupidity.


சமீபத்திய செய்தி