உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாணவிகளை சீரழித்த குற்றவாளி சுட்டுக்கொலை : போலீசில் பிடியில் தப்ப முயன்ற போது சம்பவம்

மாணவிகளை சீரழித்த குற்றவாளி சுட்டுக்கொலை : போலீசில் பிடியில் தப்ப முயன்ற போது சம்பவம்

தானே: மும்பையில் நர்சரி பள்ளி மாணவிகள் இருவர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி போலீசில் பிடியில் இருந்து தப்பியோட முயன்ற போது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.மஹாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூரில் ஒரு தனியார் பள்ளியில் இரு பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்ட்டதாக புகார் எழுந்ததையடுத்து மாநிலம் முழுதும் போராட்டங்கள் வெடித்தன. ரயில் நிலையங்களில் நடந்த போராட்டத்தால் உள்ளூர் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக பள்ளியில் துப்புரவு பணியாளர் அக்சய் ஷிண்டே என்பவரை கடந்த ஆக.17-ம் தேதியன்று போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கடந்த ஆக.01-ம் தேதியன்று அக்சய் ஷிண்டே பள்ளி கழிவறையில் வைத்து இரு மாணவிகளையும் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.இந்நிலையில் தலோஜா சிறையிலிருந்து விசாரணைக்காக இன்று மாலை அக்சய் ஷிண்டேயை போலீசார் வேனில் அழைத்துச்சென்றனர். அப்போது போலீசில் பிடியிலிருந்து தப்பியோட முயன்றதாகவும், அப்போது ஒரு போலீசாரிடமிருந்த துப்பாக்கியை பறித்து போலீசாரை சுட முயன்றதாகவும் கூறப்படுகிறது.அப்போது தற்காப்புக்காக சக போலீஸ்காரர் அக்சய் ஷிண்டேயை சுட்டதில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் இரு போலீசார் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.**********************


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Nagarajan D
செப் 24, 2024 17:51

சரியான தண்டனை... நம்ம நீதியற்ற நீதிமன்றங்கள் 50 வருடம் கழித்து தண்டனை தருமோ அல்லது அப்பவும் வாய்தா தருமோ...


Indian
செப் 24, 2024 13:36

நாட்டில் சட்டங்கள் எவ்வளவு மோசமாக உள்ளது ??


Kasimani Baskaran
செப் 24, 2024 05:37

நீதித்துறை மீது காவல்துறைக்கே கூட நம்பிக்கை இல்லை போல தெரிகிறது.


அப்பாவி
செப் 24, 2024 02:51

சபாஷ்... இது தாண்டா நீதி. கோர்ட்டு, கேசுன்னு போனா மூவாயிரம் வருஷம் ஆகும்.


Sivak
செப் 23, 2024 23:21

அதெப்படி பெண்களுக்கு என்றால் மட்டும் எல்லாருக்கும் நரம்பு புடைக்குது ...???? . ஒரு வாரம் முன்னாடி தான் ஒரு 4 வயது குழந்தையை கொலை செய்து வாஷிங் மெஷின் உள்ளே போட்ட ஒரு பெண் .... பூவரசி வழக்கு சிறு குழந்தையை கொன்று பெட்டிக்குள் போட்ட பெண் ... கொடைக்கானல் வித்யா ... கணவரை தேனிலவில் கொன்ற பெண் ... அப்போல்லாம் நரம்பு யாருக்கும் புடைக்கவில்லையா? என்னடா இது ...


ramesh
செப் 23, 2024 22:14

இந்தியா முழுவதும் பெண்களின் மீது பாலியல் குற்றம் செய்யும் அனைவருக்கும் என்கவுண்டர் தான் சரியான தண்டனை


theruvasagan
செப் 23, 2024 21:50

கைது விசாரணை தீரப்பு எலலாம் சூட்டோட சூடாக நடந்தால்தான் நீதிக்கு மரியாதை.


NARASIMHAN
செப் 23, 2024 21:12

பொள்ளாச்சி குற்றவாளிகள் இது போன்று எப்போது தண்டிக்கப்படுவார்கள் ?


ஜெய்ஹிந்த்புரம்
செப் 24, 2024 04:12

அண்ணாமலை போராட்டம் நடத்துவாரா?


Ramesh Sargam
செப் 23, 2024 20:52

என்கவுண்டர் டெத். இதுதான் சரியான தீர்ப்பு பாலியல் குற்றம் புரிபவர்களுக்கு. குற்றவாளியை பிடிப்பது, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது, அந்த வழக்கு பல வருடம் நீதிமன்றங்களில் நடப்பது, கடைசியில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது உள்ள குற்றம் சரியாக நிரூபிக்கப்படாததால் இந்த நீதிமன்றம் குற்றவாளியை விடுதலை செய்கிறது என்று தீர்ப்பு வழங்கும் பல வருடங்களுக்கு பிறகு. அதெல்லாம் வேண்டாம். என்கவுண்டர், சரியான தீர்ப்பு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை