உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2 மணி நேரம் துடிக்காத இதயம்; உயிர்ப்பித்த எய்ம்ஸ் மருத்துவர்கள்; ராணுவ வீரருக்கு மறுவாழ்வு!

2 மணி நேரம் துடிக்காத இதயம்; உயிர்ப்பித்த எய்ம்ஸ் மருத்துவர்கள்; ராணுவ வீரருக்கு மறுவாழ்வு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வர்: இதயத்துடிப்பு நின்று 2 மணி நேரம் ஆன ராணுவ வீரரை மீண்டும் உயிர்ப்பித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.ஒடிசா மாநிலம் நாயகர் மாவட்டத்தில் உள்ள ஒடபாலா கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சுபகந்த். மாரடைப்பு வருவது போன்ற அறிகுறிகள் தென்பட்டதால் உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதித்த மருத்துவர்கள் அவரை, புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவு நிபுணரான டாக்டர் ஸ்ரீகாந்த் சிகிச்சை அளித்த நிலையில் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. இதயத்துடிப்பு செயலிழந்த நிலையில் இருந்த அவரை, நீண்ட நேரம் போராடி அவரை டாக்டர்கள் காப்பாற்றினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kuka41ed&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவருக்கு சிகிச்சை அளித்த, டாக்டர் ஸ்ரீகாந்த் கூறியதாவது: சுபகந்த் இதய துடிப்பு நின்றுவிட்டது. எங்கள் முன் இரண்டு வழிகள்தான் இருந்தன. ஒன்று, அவர் இறந்துவிட்டார் என்று அறிவிப்பது; இன்னொன்று, eCPR எனப்படும் முறையில் முயற்சித்துப் பார்ப்பது.வேறு வழியில்லாத சூழலில், எக்ஸ்ட்ரா கார்போரல் கார்டியோபுல்மோனரி ரெசசிட்டேஷன் எனப்படும் eCPR முறை சிகிச்சை அளித்தோம்.30 நிமிடம் கழித்து, அவரது இதய செயல்பாடு மேம்பட்டது. ஏறக்குறைய இரண்டு மணி நேரம் துடிப்பே இல்லாமல் இருந்த அவரது இதயம் மீண்டும் செயல்பட தொடங்கியது. சுபகந்த் இதய துடிப்பு 96 மணி நேரத்தில், சீரானது. கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

டாக்டர்கள் நமக்கு கடவுள்

நோயாளியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரும் டாக்டர்களை பாராட்டினர். 'இது ஒரு அதிசயம் ஒன்றும் இல்லை. நாங்கள் டாக்டர்களுக்கு எல்லாம் கடமைப்பட்டுள்ளோம். அவர்கள் உண்மையில் என்ன நடந்தது என்பதை எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. மேலும் கடவுள் மீது நம்பிக்கை வைத்து பிரார்த்தனை செய்யுங்கள் என்று தொடர்ந்து சொன்னார்கள்.டாக்டர்கள் தான் நமக்கு கடவுள். அவர்கள் என் மகனின் உயிரைக் காப்பாற்றினர், ”என்று சுபகந்த் தாயார் மினாட்டி சாஹூ கூறினார். இப்போது, சுபகந்த் அறுவை சிகிச்சைக்குப் பின் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வெளியேறியுள்ளார். அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.எய்ம்ஸ் நிர்வாக இயக்குனர் டாக்டர் அசுதோஷ் பிஸ்வாஸ் கூறுகையில், இது ஒரு மைல்கல். நோயாளியின் இதயம் துடிப்பு நின்று, 120 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவது நாட்டில் அரிதான நிகழ்வுகளில் ஒன்றாகும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

MUTHU
நவ 19, 2024 19:01

மருத்துவ பயிற்சி எடுத்துக்கொள்வது என்பது எய்ம்ஸ், ராணுவ மருத்துவ கல்லூரி போன்றவற்றில் இதை போன்ற மருத்துவர்களால் கொடுக்கப்படும். மிகவும் சிறப்பாக இருக்கும்.


என்றும் இந்தியன்
நவ 19, 2024 17:59

நம்ப முடியவில்லை. மிக மிக அருமை எய்ம்ஸ் மருத்துவமனை


Loganathan Kuttuva
நவ 19, 2024 15:52

பாராட்டுக்கள்


Ms Mahadevan Mahadevan
நவ 19, 2024 12:49

நல்ல மனிதர்.அதனால் எல்லாம் நல்லதாக முடிந்து உள்ளது. மருத்துவ குழுவ்க்கு நன்றி பாராட்டு


Ramesh Sargam
நவ 19, 2024 12:29

நெஞ்சுவலி என்று நாடகம் போடும் அரசியல்வாதிகளை இப்படி காப்பாற்றாதீர்கள்.


Anantharaman Srinivasan
நவ 19, 2024 11:35

ராணுவ வீரர் சுபகந்த் வயது என்ன..? கண்டதும் குற்றம் கேட்டதும் குற்றமென்று எல்லா டாக்டர்களையும் எடைபோடக்கூடாது. Service minded உள்ள டாக்டர்களும் பணியிலிருக்கிறார்கள். அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மருத்துவமும் மருத்துவரும் அமைவர். தலைவிதியென்று ஒன்றுயிருக்கிறதே. அது சும்மா விடுமா..?


Rasheel
நவ 19, 2024 11:19

நமக்கு மேலே உள்ள சக்தி உத்தரவு இல்லாமல் ஒரு உயிரும் போகாது. எல்லாம் அவன் செயல். நல்ல மனிதத்துவம் உள்ள டாக்டர்களுக்கு நன்றி.


Barakat Ali
நவ 19, 2024 11:02

இலவச சிகிச்சை செய்யாமல் ரூபாய் 95000 பிடுங்கும் மருத்துவர்கள் இல்லையா அவங்க? நான் டாக்டரா நீயி டாக்டரா ன்னு கேக்கலையா ???? அருவருப்பா பேசலையா ???? அப்போ அங்கே திராவிட மாடல் பரவலை ....


R Hariharan
நவ 19, 2024 10:50

மிக்க நன்றி. இது போன்ற சில டொக்டர்களால் நமக்கு இன்னும் அவர்கள் மேல் நம்பிக்கை ஏற்படுகிறது.


Bala Iyer
நவ 19, 2024 10:34

அரசு மருத்துவமனைகள் பலவும் நன்றாகவே உள்ளன .டாக்டர்களும் அர்ப்பணிப்புடன் சேவை செய்கிறார்கள் .எங்கயோ எதோ ஒரு சில மருத்துவர்கள் தவறு செய்வதால், எல்லோரையும் தவறாக பார்த்தால் அது சரியல்ல. வாழ்க அரசு மருத்துவர்கள். மேலும் சிறக்கட்டும் பணி.


Dharmavaan
நவ 19, 2024 12:01

aims வேறு தமிழக அரசு மருத்துவமநை வேறு


SUBRAMANIAN P
நவ 19, 2024 12:07

எங்கேயோ இல்ல நம்ம தமிழ்நாட்டுல நிறைய இருக்கு.. எத்தனை சினிமா பார்த்திருப்போம்..


முக்கிய வீடியோ