உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இழப்பீடு; லொள்ளு கேள்விகள் கேட்கும் ஏர் இந்தியா

உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இழப்பீடு; லொள்ளு கேள்விகள் கேட்கும் ஏர் இந்தியா

புதுடில்லி: ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் நிதி, ஆதார விபரங்கள் உட்பட பல்வேறு கேள்விகளை கேட்டு, 'ஏர் இந்தியா' நிறுவனம் நெருக்கடி கொடுப்பதாக பிரிட்டனைச் சேர்ந்த சட்ட நிறுவனம் குற்றஞ்சாட்டிஉள்ளது. குஜராத்தின் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனுக்கு, கடந்த மாதம் 12ம் தேதி புறப்பட்ட, 'ஏர் இந்தியா' விமானம் விழுந்து நொறுங்கியது.

சர்ச்சை

இதில், விமானத்தில் பயணித்த 241 பேர் உட்பட, 275 பேர் உயிரிழந்தனர். இதில், பிரிட்டனை சேர்ந்த, 40 பேரும் அடங்குவர்.இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு இழப்பீடாக 1 கோடி ரூபாய் தரப்படும் என, 'ஏர் இந்தியா' அறிவித்தது. இந்நிலையில், உறவு களை இழந்தோர் குடும்பத்தினர் இழப்பீடு தொகையைப் பெற கடுமையான விதிகளை, 'ஏர் இந்தியா' விதித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துஉள்ளது. இறந்தவர்களின் விபரம் குறித்து முழு தகவல்களை பெறும் வகையில், விண்ணப்ப படிவம் ஒன்றை, 'ஏர் இந்தியா' வெளியிட்டுள்ளது. அதில், குடும்பத்தின் நிதி சார்ந்த தகவல்கள் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆமதாபாதை தலைமையிடமாக வைத்து, நானாவதி என்ற நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் பிரிட்டனின் சட்ட நிறுவனமான ஸ்டீவர்ட்ஸ், அந்நாட்டைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட 40 குடும்பங்களின் சார்பாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்தபோது, இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனத்தைச் சேர்ந்த பீட்டர் நீனன் கூறியதாவது:

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் துயரத்தில் இருக்கும் நிலையில், குடும்பத்தின் நிதி சார்ந்த விபரங்களை தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.இறந்தவர் பணியில் இருந்தாரா? அப்படியென்றால், அவர் வேலை செய்த இடம், முகவரி, முதலாளியின் தொடர்பு எண் உள்ளிட்டவை அந்த விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ளன. இழப்பீட்டின் இறுதி தொகை, சமர்ப்பிக்கப்பட்ட விபரங்களின் அடிப்படையில் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. சமர்ப்பிக்கப்படும் தகவல்களால், இழப்பீட்டுத் தொகையை குறைக்கவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து, 'ஏர் இந்தியா'வை தொடர்பு கொண்ட போது, விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்யாவிட்டால் இழப்பீடு கிடையாது எனக் கூறியதுடன், மிரட்டல் விடுத்ததாகவும் ஸ்டீவர்ட்ஸ் நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது.

குற்றச்சாட்டு

இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை, 'ஏர் இந்தியா' மறுத்துள்ளது. 'ஏர் இந்தியா மீது இழப்பீடு தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது மட்டுமின்றி தவறானதும் கூட. 'பாதிக்கப்பட்ட சில குடும்பத்தினரிடம் மட்டுமே அவர்களது உறவு முறைகள் பற்றி அறியவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியாக இழப்பீடு சென்று சேர வேண்டும் என்பதற்காகவும் மட்டுமே தகவல்கள் கேட்கப்படுகின்றன. 'மேலும், நாங்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்' என, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Lakshminarayanan
ஜூலை 05, 2025 14:18

சூப்பர் ஆங்கிம்


ஆரூர் ரங்
ஜூலை 05, 2025 10:30

தப்பித்தவறி வாரிசுதாரர்கள் அல்லாதவர்களுக்கு இழப்பீடு போய்ச் சேர்ந்தால் ஏர்இந்தியாவே சட்டப் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளும். உதாரணமாக உடன் பிறந்தவர்கள் தாய் தந்தையர் போன்றவர்கள் இறந்தவரைப் பிரிந்து வாழும் இணையருக்கு அல்லது LIV IN இணையருக்கு இழப்பீட்டில் பங்கு கிடையாது என்று வாதாடுவர். சம்பந்தமில்லாத நபர்களுக்கு விமான நிறுவனங்கள் இழப்பீடு அளித்தாலும் இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஏற்காது. இதற்கு தீர்வு அரசே உண்மையான வாரிசுகளை அடையாளம் கண்டு இழப்பீடு தந்து விட்டு அதனை விமான இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் வசூலிப்பதுதான். பெரும்பாலான விமான நிறுவனங்கள் நஷ்டத்தில்தான் இயங்குகின்றன.


அப்பாவி
ஜூலை 05, 2025 08:45

ரூபானி குடும்பத்துக்கு செட்டில் பண்ணி முடிச்சிருப்பானுங்க.


Elango S
ஜூலை 05, 2025 12:40

அவர் குடும்பத்துக்கு எதற்கு சென்டில்மென்ட் ஏர் இந்தியாவை விலைக்கு வாங்கும் அளவுக்கு அவர் அரசியலில் சேர்த்து வைத்து இருப்பார்


KRISHNAN R
ஜூலை 05, 2025 08:15

. ஆதார் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அட்டை..அவர்களில்... யாராவது நாமினி என்று சொல்லி உள்ள ஆவணம் ஒன்று போதும்


Varadarajan Nagarajan
ஜூலை 05, 2025 07:28

இறந்தவரின் வங்கிக்கணக்கில் பணமோ அல்லது முதலீடுகளோ இருந்தால் அதை பெறுவதற்கு இருக்கும் நடைமுறைகளை பின்பற்றித்தான் ஆகவேண்டும். தேவையான ஆவணங்கள் இருக்கும்போது வாரிசுதாரர்களிடம் மேற்கூறிய பணத்தை வங்கிகள் கொடுத்தால் புதிதாக இன்னொருவர் தானும் வாரிசுதான் என வந்துநின்று கேட்கின்றார். ஆனால் இறந்தவர் திருப்பிச்செலுத்தவேண்டிய கடன்கள் இருந்தால் தனக்கு எதுவும் தெரியாதுயென மௌனமாக இருந்துவிடுவார்கள். நிலைமை இப்படி இருக்கும்போது காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீட்டை கொடுக்க தேவையான அனைத்து சான்றுகளையும் கொடுக்கவேண்டியது அவசியம் மட்டுமல்ல கடமையும் கூட எல்லாம் சரியாக இருக்கும்பட்சத்தில் தேவையான ஆவணங்களை கொடுப்பதில் எந்த சிரமமும் இருக்கப்போவதில்லை


அப்பாவி
ஜூலை 05, 2025 08:47

இன்சூரன்சு பிரிமியம் வாங்கும்போது மட்டும் ஒரு கேள்வியும்.கேக்காம வாங்கிப் போட்டுப்பாங்களே... இழப்பீடு குடுக்கும்போதுதான் எல்லா புண்ணாக்கு கேள்வியும் கேப்பாங்க. விமான விபத்தில் செத்துப்.போனவன் பேங்க் கணக்கில் யார் நாமினியோ அவிங்களுக்கு குடுக்ககாமே. களவாணிங்க.


அப்பாவி
ஜூலை 05, 2025 06:26

உசிரோட இருக்கிறவனுக்கு டெத் சர்டிபிகேட் கேட்டுச்சு ஒரு இந்திய அமைச்சகம். அவிங்க ஆசீர்வாதத்தோட இயங்குது டாட்டா நிறுவனம். அவ்ளோ ஈசியா கொடுத்திருவாங்களா? விமான விபத்தில் செத்துப் போன துக்கத்தை விட பக மடங்கு டார்ச்சர் இவிங்க இழுத்தடிப்பில் கிடைக்கும்.


இறைவி
ஜூலை 05, 2025 05:19

நமது நாட்டில் இறந்தவருடைய வங்கி கணக்கில் உள்ள பணத்தை, அவர் தன்னுடைய வாரிசுதாரர் என்று மகனையோ மகளையே சான்றளித்திருந்தாலும், வங்கிகள் அவர்களுக்கு கணக்கில் உள்ள பணத்தை கொடுப்பதில்லை. இறந்தவரின் இறப்பு சான்று, வாரிசு சான்று என்று வரிசையாக கேட்பார்கள். அதே போல விபத்தில் இறந்தவருக்கு நம் நாட்டு காப்பீடு கம்பெனிகள் நூறு கேள்வி கேட்டு பின்னர் கொடுக்கும் தொகையில் பேரம் வேறு பேசும். நாம் அதற்கெல்லாம் வாய் மூடி இருப்போம். இதே நடைமுறையைதான் டாடாவும் பின்பற்றுகிறது. இந்தியாவின் பெரும் வளர்ச்சி பொறுக்காத மேலே நாடுகள், வேண்டாத மனைவி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் என்று நம்மை காலை வார காரணம் தேடிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இந்தியாவில்விருக்கும் பெரும் நிறுவனங்களில் டாடா நிறுவனம் அவர்களின் தொழிலாளர்கள், பங்குதாரர்கள் endru அனைவரையும் கசக்கி பிழியாது அரவணைத்து போகும் ஒரு நேர்மையான நிறுவனம். ஒரு டாடா ஊழியரிடம் கேட்டால் உண்மை விளங்கும். பொறாமையில் கருத்து போடக்கூடாது.


r.thiyagarajan
ஜூலை 05, 2025 01:58

Dear air india I am also one of your customer from dubai i saw that london passenger lost their life and family this time you only told 1cr will be given each family we public asking you will you return who last their lives you cant only speaking business and benefit for your part , so better what you committed fulfill your words you will get blessings ..


Lakshminarayanan
ஜூலை 05, 2025 14:21

சூப்பர் ஆங்கிலம். இங்கிலீஷ்காரன் எனக்கு பணமே வேண்டாம், என்னோட மொழிய தயவு செய்து விட்டு விடுங்கன்னு ஓடிடுவான்


M Ramachandran
ஜூலை 05, 2025 01:27

உலகெங்யிலும் உள்ள விமான கம்பெனிகள் எறியும் வீட்டடில் புடுங்கினது ஆதாயம் என்ற வகையில் தான் செயல் படுகின்றன


முக்கிய வீடியோ