உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரள எம்பிக்கள் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு; சென்னையில் பெரும் விபத்து தவிர்ப்பு

கேரள எம்பிக்கள் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு; சென்னையில் பெரும் விபத்து தவிர்ப்பு

சென்னை: திருவனந்தபுரத்தில் இருந்து கேரள எம்பிக்கள் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0hr9dcms&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திருநெல்வேலி காங்கிரஸ் எம்பி ராபர் ப்ரூஸ், கேரள எம்பிக்கள் கேசி வேணுகோபால், கொடிக்குனில் சுரேஷ், அதூர் பிரகாஷ், கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் திருவனந்தபுரத்தில் இருந்து ஏர் இந்தியா விமானத்தின் மூலம் டில்லி புறப்பட்டனர். அப்போது, விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கடுமையான காற்றழுத்தம் ஏற்பட்டது. இதனால், விமானத்தை சென்னைக்கு திருப்புவதாக விமானி அறிவித்தார். சுமார் 2 மணிநேரம் வானில் வட்டமடித்த நிலையில், விமானம் தரையிறக்க அனுமதி கேட்கப்பட்டது. விமானத்தை தரையிறக்க முயன்ற போது, அதே ஓடுபாதையில் மற்றொரு விமானம் இருந்ததாக அறிவிக்கப்பட்டது. பிறகு, சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி, விமானத்தை மீண்டும் மேலே எழுப்பி, பிறகு 2வது முயற்சியில் பாதுகாப்பாக தரையிறக்கினார். இதனால், விமானத்தில் இருந்த எம்பிக்கள் உள்ளிட்ட பயணிகள் பீதியடைந்தனர். இது குறித்து காங்கிரஸ் எம்பி கேசி. வேணுகோபால்வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், 'பயங்கரமான அனுபவம். விமானியின் தைரியமான முடிவு பலரின் உயிரைக் காப்பாற்றியது,' எனக் குறிப்பிட்டுள்ளார்.

புகாரும்... மறுப்பும்...

திருவனந்தபுரத்தில் இருந்து டில்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த நாங்கள், பெரும் துயரத்தை சந்திக்கும் நிலைக்கு ஆளானோம். விமானம் குலுங்கியது. பயணம் அச்சமூட்டக்கூடியதாக இருந்தது. மாற்று ஏற்பாடாக சென்னையில் தரை இறங்க சென்றபோதும், அனுமதி கிடைக்காமல் வானில் 2 மணி நேரம் விமானம் வட்டமிட்டது. தரை இறங்கும்போது, அதே ஓடுபாதையில் இன்னொரு விமானமும் வந்து விட்டது. விமானியின் திறமையும், அதிர்ஷ்டமும் தான் எங்களை காப்பாற்றின: காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் புகார் மோசமான வானிலை, தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விமானம், சென்னைக்கு மாற்றி விடப்பட்டது. இன்னொரு விமானம் ஓடுபாதையில் வரவில்லை. எங்கள் விமானிகள், அனைத்து சூழ்நிலைகளையும் கையாள்வதற்கு ஏற்ற பயிற்சி அளிக்கப்பட்ட திறமைசாலிகள் என்று ஏர் இந்தியா விளக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Rathna
ஆக 11, 2025 18:49

அவசரம் மற்றும் உயிருக்கு ஆபத்து என்று சொல்லும் போது அந்த விமானத்திற்கு முன்னூட்டு இறங்கும் அனுமதி கொடுப்பது தான் முறை. அரசாங்க நிறுவனம் நடத்தும் விமான கட்டுப்பட்டு அறை, அதை செய்ய தவறியது மிக பெரிய தவறு.


Anantharaman Srinivasan
ஆக 11, 2025 11:55

கேரள எம்பிக்கள் சென்ற விமானத்தில் திடீர் கோளாறு..உயிர் போய் திரும்பி வந்த இந்த நேரத்தில் MP பதலியில் மக்களுக்கு செய்த துரோகங்கள் கண்முன் தோன்றி மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். இனியாகிலும் நேர்மையாக பணியாற்றவும்.


Sudha
ஆக 11, 2025 11:13

விமானத்தில் கோளாறு இல்லை, வானிலை மற்றும் 2 மணி நேரத்திற்கு பிறகும் ஓடுபாதை கோளாறு உண்டாக்கிய கட்டுப்பாட்டு அறை இவையே காரணம்.


Jack
ஆக 11, 2025 11:09

இனி எம்பிக்கள் விமானத்தில் பறக்க வேண்டாம் ..ரெயில் பயணம் செய்யலாம்


Ramesh Sargam
ஆக 11, 2025 11:49

மாட்டு வண்டியில் பயணம் செய்வது மிகவும் பாதுகாப்பானது.


ஆரூர் ரங்
ஆக 11, 2025 10:50

இதே இத்துப் போன ஏர் இந்தியா விமானங்களை தனியாருக்கு விற்கக்கூடாது என போராட்டம் நடத்தியது இதே கம்யூனிஸ்டு கட்சிதான்.


தமிழ் மைந்தன்
ஆக 11, 2025 09:27

அந்த விமானி செய்தது சரியே ஆனால் மீண்டும் பாதிக்கப்படுவது மக்கள்


chennai sivakumar
ஆக 11, 2025 09:25

ஏர் இந்தியா விற்கு போதாத காலம்


Svs Yaadum oore
ஆக 11, 2025 09:11

இந்த கேரளா எம்பிக்களுடன் கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி யும் இருந்தாராம். கன்யாகுமரியில் மலையை வெட்டி கேரளாவுக்கு ஏற்றுமதி. கேரளா மாநிலத்து மருத்துவ கழிவை 25 வருடங்களாக கேரளா மலையாளி தமிழ் நாட்டில் கொண்டு வந்து கொட்டுவது .. இதற்கெல்லாம் இந்த கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி கேரளா எம்பிக்களை கேள்வி கேட்க மாட்டாரா ??....


Svs Yaadum oore
ஆக 11, 2025 09:08

இந்த கேரளா எம்பிக்கள் இல்லாத பிரச்னையை சேர்த்து புரளி கிளப்ப வேண்டாம் ... ஏர் இந்தியா நிறுவனம் அளித்த விளக்கத்திற்கு இந்த எம்பிக்கள் பதில் கூறட்டும் ....


Svs Yaadum oore
ஆக 11, 2025 09:05

கேரளா எம்பிக்கள் புரளி கிளப்ப வேண்டாம். மோசமான வானிலை காரணமாக விமானம் சென்னைக்கு திருப்ப பட்டது. விமானத்தை தரையிறக்க முயன்ற போது, சென்னை விமான கட்டுப்பாடு அறை மீண்டும் சுற்று வட்ட பாதையில் சென்று திரும்புமாறு கேட்டு கொண்டது. அதற்கு காரணம் அதே ஓடுபாதையில் மற்றொரு விமானம் இருந்ததாக கூறுவது தவறு என்று ஏர் இந்தியா நிறுவனம் பதில் ...


முக்கிய வீடியோ