உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி சட்டசபை கலைப்பு: கவர்னர் உத்தரவு

டில்லி சட்டசபை கலைப்பு: கவர்னர் உத்தரவு

புதுடில்லி: டில்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்து அதிஷி விலகினார். ராஜினாமா கடிதத்தை அவர் கவர்னர் சக்சேனாவிடம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து சட்டசபையை கலைத்து கவர்னர் உத்தரவிட்டு உள்ளார்.டில்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜ., 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஆம் ஆத்மி 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆட்சி பறிபோனதால், ஆம் ஆத்மி கட்சியினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=i9xq69vf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனையடுத்து, டில்லி முதல்வராக இருக்கும் அதிஷி, கவர்னர் சக்சேனாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது அவர், முதல்வர் பதவியில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை வழங்கினார். பதவி விலகலை கவர்னர் ஏற்றுக் கொண்டார்.

உத்தரவு

இதனைத் தொடர்ந்து டில்லி சட்டசபையை உடனடியாக கலைத்து கவர்னர் சக்சேனா உத்தரவிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

SS
பிப் 09, 2025 18:02

இனி இந்த கவர்னருக்கு அதிக வேலை இருக்காது. பிஜேபி அரசு சொல்வதை ஏற்று கண்ணை மூடிக்கிட்டு கையெழுத்திட்டே ஆக வேண்டும். மறுத்தால் பதவி போய் விடும்


velan iyyangar, Sydney
பிப் 09, 2025 21:42

சுர்ஜித் சிங் பர்னாலா மாதிரி யா 200 ரூவா ஊ ஃபீஸ் அவர்களே?


Makkalal Khouri
பிப் 09, 2025 16:54

இந்த ஆளுநரும் ஓரூ காரணம் பிஜேபி வெற்றிக்கு


ஆரூர் ரங்
பிப் 09, 2025 12:32

தற்காலிக முதல்வர்தான் ன்னு கெஜரிவால் சொன்னது பலித்து விட்டது. ஆனா சொன்ன ஆளு நிரந்தரமா அவுட்.


Laddoo
பிப் 09, 2025 11:56

ஒழிஞ்சா


புதிய வீடியோ