உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெமல் தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை

பெமல் தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை

தங்கவயல் ; தங்கவயல் பெமல் தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தங்கவயல், கோரமண்டல் ஹென்றீஸ் மாடல் ஹவுஸ் பகுதியில் வசித்து வந்தவர் கமலரசன், 42. நேற்று காலை, இவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது உடலை ராபர்ட்சன்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யாமல், 30 கி.மீ., துாரத்தில் உள்ள கோலார் மாவட்ட எஸ்.என்.ஆர்., மருத்துவமனைக்கு போலீசார் எடுத்துச் சென்றனர்.இவருக்கு மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். தங்கவயல் உரிகம் ஐந்து விளக்கு பகுதியில் பெமல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 10வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், ஒப்பந்த தொழிலாளர் கமலரசன் தற்கொலையால், அவர்கள் வேதனை அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ