உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் மீண்டும் தேஜ ஆட்சி: கருத்துக்கணிப்புகளில் தகவல்

பீஹாரில் மீண்டும் தேஜ ஆட்சி: கருத்துக்கணிப்புகளில் தகவல்

பாட்னா: பீஹாரில் மீண்டும் தேஜ கூட்டணி ஆட்சி அமையும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.பீஹாரில் மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு நவ.,6 மற்றும் இன்று( நவ.,11) இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது. 121 தொகுதிகளுக்கு நடந்த முதற்கட்ட தேர்தலில் 65 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. இரண்டாம் கட்ட தேர்தலில் 5 மணி நிலவரப்படி 67.14 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6h497l7s&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த தேர்தலில் பாஜ, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேஜ கூட்டணிக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணிக்கும் கடுமையான போட்டி நிலவியது. இத்துடன் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஜன் சுராஜ் என்ற கட்சியை துவக்கி 3வதாக களமிறங்கியுள்ளார். இரண்டு கட்ட தேர்தல் முடிந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ன.இந்த கருத்துக்கணிப்புகளில் மீண்டும் தேஜ கூட்டணியே ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகளில் கூறப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் களமிறங்கியுள்ள தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரால் எந்த தாக்கமும் ஏற்படாது எனவும் , அவரது கட்சி சொற்ப தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் எனவும் இந்த கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.கருத்துக்கணிப்பு முடிவுகள்

டைம்ஸ் நவ்

தேஜ கூட்டணி: 142மகாகத்பந்தன்: 95ஜன் சுராஜ்: 1மற்றவர்கள்: 5

ஜேவிசி கருத்துக்கணிப்பு

தேஜ கூட்டணி :135- 150 மகாகத்பந்தன் :88 - 103ஜன் சுராஜ் : 0-1மற்றவர்கள் :3-6

மாட்ரிஸ்

தேஜ கூட்டணி :147-167மகாகத்பந்தன் :70 - 90ஜன் சுராஜ் : 0-2மற்றவர்கள் :2-8

பீப்பிள்ஸ் இன்சைட்

தேஜ கூட்டணி :133- 148மகாகத்பந்தன் :87 - 102ஜன் சுராஜ் : 0-2மற்றவர்கள் :3-6

போல்ஸ் ஆப் போல்ஸ்

தேஜ கூட்டணி : 138 -148மகாகத்பந்தன்: 82 - 98ஜன் சுராஜ் :0 -2மற்றவர்கள்: 3- 7

பீப்பிள்ஸ் பல்ஸ்

தேஜ கூட்டணி : 133 -159மகாகத்பந்தன் :75 -101ஜன் சுராஜ் :0-1மற்றவர்கள்:0-2

டைனிக் பாஸ்கர்

தேஜ கூட்டணி: 145 - 160மகாகத்பந்தன் : 73 - 91ஜன்சுராஜ்: 0 - 3மற்றவர்கள் 5 - 7


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

Madras Madra
நவ 12, 2025 11:36

மத சார்பின்மை இனி இந்தியாவில் தொடர்ந்து தோற்கும்


KR india
நவ 12, 2025 11:01

கடந்த முறை பீகார் சட்டமன்ற தேர்தலில், மறைந்த திரு.ராம் விலாஸ் பஸ்வான் மகன் திரு. சிராக் பாஸ்வான் அவர்கள், பி.ஜெ.பி தலைமையிலான தே.ஜ.க. கூட்டணியில் ஏற்பட்ட சீட்டு எண்ணிக்கை பிரச்சினை மற்றும், திரு.நிதிஷ்குமாரிடம் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, பா.ஜ.க கூட்டணியில் இருந்து விலகி தனியாக போட்டியிட்டார். எனினும், பிரதமர் மோடி அவர்கள் மீதான அன்பு மற்றும் மரியாதை காரணமாக பா.ஜ.க போட்டியிட்ட தொகுதிகளில் மட்டும், அவர் கட்சி வேட்பாளர்களை, பி.ஜெ.பிக்கு எதிராக நிறுத்தாமல், மிக நாகரிகமாக நடந்து கொண்டார் தேர்தல் முடிவில், திரு.நிதிஷ்குமார் கட்சி குறைவான இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பா.ஜ.க. கட்சி நிதிஷ் குமார் கட்சியை காட்டிலும் அதிக தொகுதிகளில் வென்று அசத்தியது. எனினும், முதல்வர் பதவியை திரு. நிதிஷ் குமார் அவர்களுக்கே, பி.ஜே.பி பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்தது. அது போல், இந்த முறை, திரு.நிதிஷ்குமார் அவர்கள், முதல்வர் பதவியை பா.ஜ.க. கட்சிக்கு, விட்டுக் கொடுக்க வேண்டும். இந்த முறை திரு. சிராக் பாஸ்வான் அவர்கள், பி.ஜெ.பி தலைமையிலான தே.ஜ.க. கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதும் கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. திரு. லல்லு மகன், RJD தேஜஸ்வி யாதவ் அவர்கள், இந்த முறை, தேர்தல் வாக்குறுதியில், பீஹாரிகளுக்கு, வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை என்ற மிகப் பெரிய கவர்ச்சி பிரம்மாஸ்திரத்தை வீசினார். பாரதீய ஜனதா கூட்டணியினர் கதி கலங்கி போயினர் ஏனெனில், அது உண்மையிலேயே, பெரும்பாலான மக்களை கவரக் கூடிய வகையில் இருந்தது. எனினும், அது சாத்தியமில்லை என்று, தே.ஜ.க கூட்டணி, தொடர்ந்து பிரச்சாரம் செய்தது. இதில், யார் கூறியதை மக்கள் ஏற்றனர் என்பது வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும், Election Result-ல் தெரிய வரும் அதுவரை பொறுத்திருப்போம்.


CHELLAKRISHNAN S
நவ 12, 2025 08:14

Mr. dmk, kindly note: when compared to 1967, use of Hindi increased manifold in Tamillnadu. only due to private schools run by dmk leaders. only poor people who cannot afford private school fees n compelled to study in govt schools denied to learn Hindi. if Hindi is taught in govt schools, dmk big heads including cm family will lose heavily.


Kasimani Baskaran
நவ 12, 2025 04:03

தீம்க்காதானே ஜெயிக்கும் என்று சொன்னார்கள்... உடன்பிறப்புக்கள் பீதி.


Raman
நவ 11, 2025 22:16

Tonight tickets booked to Thailand..return journey after a month when massive defeat debates subside...after that more rubbish utterances till another blow..no end to that..


Nathansamwi
நவ 11, 2025 21:57

போச்சுடா ...அப்போ எல்லா பீஹாரியும் தென் மாநிலத்துக்கு தான் வேலைக்கு வருவானுங்க ...


vadivelu
நவ 12, 2025 07:07

அப்படியா, நமக்கு டாஸ்மாக் வியாபாரம் அதிகமாகும், எல்லா வேலைகளுக்கும் மலிவான கூலிக்கு ஆட்கள் கிடைக்கும், உற்பத்தி பெருகி, உற்பத்தி விலை கணிசமாக குறையும்.


எஸ் எஸ்
நவ 11, 2025 21:27

முதலில் EVM மூலம் பிஜேபி வெற்றி பெறுகிறது என்று பிரச்சாரம் செய்தார்கள். இப்போது ஓட்டு திருட்டு மூலம் வெற்றி என்று பிரச்சாரம் செய்வார்கள். கர்நாடகாவிலும் ஹிமாசலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது எப்படி என்றால் பதில் சொல்ல மாட்டார்கள்


பேசும் தமிழன்
நவ 12, 2025 07:46

அட அதை விடுங்க.. தமிழ் நாட்டில் இந்தி கூட்டணி எப்படி வெற்றி பெற்றார்கள் என்று கேட்டால்.. 200 ஊவா உ.பி கூட வாயை திறக்க மாட்டார்கள்.


Sivakumar
நவ 12, 2025 07:59

மக்களின் மிக அதிகமான ஓட்டுக்கள் காங்கிரஸ்க்கும் விழுகும்பொது உங்களின் ப்ராடு வேலைகளையும் தாண்டி காங்கிரஸ் ஜெயிக்கிறது. குறிகிய வாக்கு வித்தியாசத்தில் பாராடுவேலை உங்களுக்கு கைகொடுக்கிறது . இது புரியாதமாதிரி நடிச்சி இன்னும் கேலி கிண்டல் பதில் பதிவிடுவீர்கள்


Venkatasubramanian krishnamurthy
நவ 11, 2025 21:01

இதன்மூலம் தெரிய வருவது யாதெனில் பிரசாந்த் கிஷோர் நேரிடையாக அரசியல் கட்சிக்கு செயல்படாமல் களமிறங்கி வாக்குகளைப் பிரித்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருந்தார் எனக் கொள்ளலாம்.


Priyan Vadanad
நவ 11, 2025 20:25

இதுதான் தேர்தல் நடக்குமுன் உறுதி செய்யப்பட்ட சங்கதியாச்சுதே. முன்பு மெஷின் இப்போது கமெஷின். அவ்வளவுதான்.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
நவ 11, 2025 21:32

அதாவது திராவிட மாடல்


Venkat esh
நவ 11, 2025 22:08

வந்துட்டாங்க... குனிந்து கும்பிடு போட.... தோத்தாங்கோளிகளின் புலம்பல் நாடெங்கும் கேட்கட்டும்..


Raman
நவ 11, 2025 22:12

Rs 200 max..no use shouting


vadivelu
நவ 12, 2025 07:09

இவ்வளவு விவரமா இருக்கீங்க, இனி தேர்தலில் எதிர்கட்சிகள் போட்டி இட வேண்டாம் என்று சொல்கிறீர்கள். கையாலாகதவன் கூடம் கோணல் என்றுதான் கதறுவான்


duruvasar
நவ 12, 2025 09:20

நீங்கள் அங்கலாய்ப்பதை பார்த்தால் இந்த விஷயத்தில் ட்ராவிடனை பின்னுக்கு தள்ளிவிட்டார்கள் என்ற கவலைதான் தெரிகிறது


Narasimhan
நவ 11, 2025 20:23

கொஞ்சம் மண்டையை யூஸ் பண்ணுங்க. எக்ஸிட் போல் என்பது வோட்டு போட்டுவிட்டு வெளியேவந்தவர்களிடம் கேட்பது. இதற்கும் சாருக்கும் என்ன சம்பந்தம்


புதிய வீடியோ