உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  பிறப்பிட அட்டை மசோதா கேரள சட்டசபையில் அறிமுகம்

 பிறப்பிட அட்டை மசோதா கேரள சட்டசபையில் அறிமுகம்

திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் பிறப்பிட அட்டை மசோதாவை, வருவாய் துறை அமைச்சர் கே.ராஜன் நேற்று அறிமுகம் செய்தார். அவர் கூறுகையில், ''குடியுரிமை, பிறப்பிடம் ஆகியவை வெவ்வேறு கருத்துகள். அரசியலமைப்பின் கீழ் குடியுரிமை உறுதி செய்யப் படுவது போல, ஒருவரை முறைப்படி கேரளத்தவர் என அங்கீகரிக்கும் சட்டப்பூர்வ ஆவண மாக இந்த மசோதா இருக்கும். ''மத்திய பா.ஜ., அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒருதலைபட்சமாக அமல்படுத்தியதே, இந்த மசோதாவை கொண்டு வருவதற்கு காரணம்,'' என்றார். இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.ஜ., 'இது ஆபத்தான பிரிவினைவாத அரசியல்' என விமர்சித்துள்ளது. ''அடையாளத்தை நிரூபிக்க மக்கள் சிரமப்படுவதை தவிர்க்கவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது,'' என, முதல்வர் பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார்.

நோக்கம்

 பிறப்பிட அட்டை மசோதா சட்டமானால், கேரளாவைச் சேர்ந்தவர்கள் தங்களை அதிகாரப்பூர்வமாக, 'கேரளத்தவர்' என அறிவிக்கலாம்  கல்வி அல்லது வேலைவாய்ப்பு தேவைகளுக்காக இந்த அட்டையை பயன்படுத்தலாம்  கேரள அரசின் பல்வேறு சமூக நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகள் உண்மையான பயனாளிகளை சென்றடைவதை உறுதிசெய்ய இந்த அட்டை உதவும்  குறிப்பாக, வெளி நாடுகளுக்கு புலம்பெயர்ந்த கேரளத்தவர்கள் மற்றும் உள்நாட்டிற்குள் இடம் பெயர்ந்தவர்களை கண்டறிய பயன்படும்  மலையாள மொழி மற்றும் கலாசார அடையாளத்தை ஒரு சட்டப்பூர்வ ஆவணமாக மாற்றுவதன் மூலம், கேரளாவின் பெருமிதத்தை நிலைநாட்டுவதும் இந்த மசோதாவின் முக்கிய நோக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

GMM
பிப் 24, 2026 11:02

இந்திய குடிமகனுக்கு தகுதி இல்லாத அந்நிய சிறுபான்மை மக்களை இந்திய குடிமக்கள் ஆக்கும் முயற்சி. பிறப்பு சான்று பிரிட்டிஷ் ஆட்சி முதல் இருக்கும் போது பிறப்பிட அட்டை எதற்கு உதவும்? கேரளா ஆட்சி டிஸ்மிஸ், விஜயன் கைது. தேர்தலில் போட்டியிட ஆயுள் தடை. இந்திய ராணுவம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் அந்நிய சக்திகள் ஊடுருவல் இல்லை. நீதிமன்றத்தில் வக்கீல் மூலம் கணிசமாக ஊடுருவி விட்டனர். கவர்னர் ஆட்சியை டிஸ்மிஸ் செய்து இது போன்ற மாநிலங்கள் யூனியன் பிரதேச நிலைக்கு கொண்டுவர வேண்டும். மதம் மாறியவர்கள் வாக்குரிமை நிறுத்த வேண்டும்.


GMM
பிப் 24, 2026 10:24

பிறப்பு சான்று உள்ளாட்சி அமைப்புகள் கொடுத்து வருகின்றன. இருப்பிட சான்று மாநில வருவாய் துறை. தற்போதைய முகவரி அந்த பகுதி போஸ்ட் மாஸ்டர் வழங்க முடியும். குடியுரிமை சான்று மத்திய அரசு. பிறப்பிட அட்டை வழங்க யாருக்கும் அரசியல் சாசனம் அதிகாரம் வழங்கவில்லை? கவர்னர் மசோதாவை நிராகரிக்க வேண்டும். தவறான மசோதா தயாரித்த அதிகாரி பணி நீக்கம் செய்ய வேண்டும். கேரளா தம்பதி குழந்தை தமிழகத்தில் பிறந்தால், பிறப்பிட அட்டை யார் வழங்க வேண்டும். Governrment of Kerela என்பதை தடை செய்து kerela State என்று ஆவண படுத்த வேண்டும். மாநில மக்களுக்கும் முதலில் பிறப்பு இறப்பு திருமண பதிவு போன்ற அத்தியாவசிய சான்று வழங்க வேண்டும். தற்போத தொழில் நுட்ப உதவி மூலம் மாநிலம் தேவையில்லை. இரட்டை நிர்வாக செலவு, அதிகாரம் ஆபத்து.


ரவீந்திரன்
பிப் 24, 2026 07:53

கேரள அரசு உடனடியாக கலைக்கப் படவேண்டும்