வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இங்கே ஒரு அரசியல் கட்சித் தலைவர் தன் பலத்தை உணராமல் ஒரு சில சீட்டுகளுக்காக தன் அரசியல் எஜமானர்களுக்கு ஓவர் விசுவாசமாக இருக்கிறார். அவர்கள் சிம்மாசனம் போன்ற இருக்கைகளில் அமர்ந்து கொண்டு இவரை பிளாஸ்டிக் சேரில் அமரச் செய்தாலும் அதையும் தனது பாக்கியம் என நினைக்கிறார். பீகார் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவில் தனிப்பட்ட முறையில் இவரை நீங்கள் அழைத்து தன்மானம், சுய மரியாதை, அரசியல் சாதுர்யம் இவைகளை இவருக்கு நன்குபுரியும் படி பாடம் எடுத்து தமிழ்நாட்டிற்கு அனுப்பி வையுங்கள்.
பாரதீய ஜனதா கட்சி, தனி பெரும்பான்மையாக பீகாரில் 150 சீட் போட்டியிட்டு, 123 சீட் வெற்றி பெற்றிருந்தால், அல்லது தேர்தல் கூட்டணியில் , நிதிஷ் குமார் வெறும் 22 சீட் வெற்றி பெற்றிருந்து, பி.ஜெ.பி. 101 சீட்- டிலும் வெற்றி பெற்றிருந்தால், பி.ஜெ.பி. க்கு முதல்வர் பதவி என்பது சரியாக இருந்திருக்கும். ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில், திரு. நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக அனுமதிப்பது தான் சரியாக இருக்கும். இல்லையேல், அவர் மனது மாற வாய்ப்புண்டு. அதற்கு, இடம் கொடுக்கக் கூடாது. ஏனெனில், நிதிஷ் கட்சி எதிரணிக்கு சென்றால், நிதிஷ் கட்சி 85 + RJD தேஜஸ்வி யாதவ் 25 + காங்கிரஸ் 6 + வலது, இடது, லெனின் கம்யூனிஸ்ட் 3 + AIMIM ஒவைசி 5 + மாயாவதி 1 + பிறர் 1 எல்லாம் சேர்த்தால் அரசமைக்க தேவையான 126 சீட் வந்து விடுகிறது. ஒருவேளை, மேற்கு வங்காளம், தமிழகம், கேரளா தேர்தல் முடிந்தவுடன், அனைவருக்கும், அனைத்து சாதி, மதத்தினருக்கும் ஒரே சமமான நீதி என்ற அடிப்படையில், தீண்டாமை ஒழிப்பு சட்டத்தை நீக்கினாலோ அல்லது அனைத்து சாதிக்கும் விரிவுபடுத்தினாலோ திரு. சிராக் பஸ்வான் கட்சியும் கூட, கோபித்துக் கொண்டு, அந்தப் பக்கம் செல்லக் கூடும். அப்படி பார்த்தால், அவரது L.J.P 19 சீட்டையும் கூட்டினால், மொத்தம் 126 + 19 == 145 பேர் எதிரணிக்கு சென்றால், பி.ஜெ.பி பாடு திண்டாட்டமாகி விடும். அது மத்திய ஆட்சியிலும் எதிரொலிக்கும். எனவே, அதற்கு கிஞ்சித்தும் இடம் கொடாமல், பிஹார் முதல்வர் பதவியை திரு.நிதிஷ் குமார் தொடரவே அனுமதிக்க வேண்டும். முக்கிய மந்திரி பதவிகளை மட்டும், பி.ஜே.பி எடுத்துக் கொள்ளலாம். நன்றி
தேவையில்லாமல் சிராக் பஸ்வானை பெரிய ஆள் ஆக்கீட்டங்க! அலப்பறையை தாங்க முடியாது?
பதவி ஏற்பு என்பது ஒரு சடங்கு. இதை விழாவாக நடத்துவது புது அரசின் முதல் அனாவசிய செலவு .... இது தேவை இல்லை என்று ஏன் யாரும் நினைப்பதில்லை ?