உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  முன்ஜாமினுக்கு நேரடியாக ஐகோர்ட்டை அணுகலாமா?: 3 நீதிபதிகள் அமர்வுக்கு விசாரணை மாற்றம்

 முன்ஜாமினுக்கு நேரடியாக ஐகோர்ட்டை அணுகலாமா?: 3 நீதிபதிகள் அமர்வுக்கு விசாரணை மாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: முன்ஜாமின் பெற, முதலில் செஷன்ஸ் நீதிமன்றங்களை அணுக வேண்டும் என்பது கட்டாயமா அல்லது விருப்பத்தின் பேரில் நேரடியாக உயர் நீதிமன்றங்களில் முறையிடலாமா என்பது குறித்த வழக்கு விசாரணையை, மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு பரிந்துரைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் முன் ஜாமின் பெற, முதலில் செஷன்ஸ் நீதிமன்றங்களை அணுகாமல் நேரடியாக உயர் நீதிமன்றங்களை அணுகும் போக்கு சமீப காலங்களாக அதிகரித்தது. இந்த மனுக்களை தள்ளுபடி செய்யாமல் கேரள உயர் நீதிமன்றமும் தொடர்ந்து விசாரணைக்கு ஏற்று வந்தது. கடந்த செப்., 8ம் தேதி, கேரள உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கை, உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுகாமல் நேரடியாக வரும் முன்ஜாமின் மனுக்களை கேரள உயர் நீதிமன்றம் விசாரிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது. 'இது உச்ச நீதிமன்றத்தை கவலை அடைய வைத்துள்ளது. மற்ற எந்த மாநிலங்களிலும் இப்படி நடப்பதில்லை. கேரள உயர் நீதிமன்றம் மட்டுமே நேரடியாக வரும் முன்ஜாமின் மனுக்களை விசாரித்து வருகிறது. இதற்கு என்ன காரணம்' என, கேள்வி எழுப்பியது. மேலும், 'முன்ஜாமின் பெற முதலில் செஷன்ஸ் நீதிமன்றங்களை அணுக வேண்டும் என்பது கட்டாயமா அல்லது விருப்பத்தின் பேரில் நேரடியாக உயர் நீதிமன்றங்களில் அதற்காக முறையிடலாமா என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்' என தெரிவித்தது. இதில் உச்ச நீதிமன்றத்திற்கு உதவ மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா நியமிக்கப்பட்டார். கேரள உயர் நீதிமன்றமும் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையை மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு பரிந்துரைத்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ganapathy Subramanian
நவ 13, 2025 09:41

கீழமை கோர்ட் மற்றும் உயர் நீதிமன்றங்களில் மறுக்கப்பட்ட ஜாமீனை உச்ச நீதிமன்றம் வழங்கவில்லையா? எப்படியும் உங்களிடம்தான் நீதி வாங்கப்படும் என்றால் எதற்கு கீழமை மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு செலவு செய்யவேண்டும் என்ற எண்ணம்தான்.


duruvasar
நவ 13, 2025 08:06

சட்ட பூர்வ நடவடிக்கைகளுக்கு 77 ஆண்டுகளாக இவர்களுக்கே தெளிவில்லை. இவர்களுக்கு உதவ ஒரு கமிஷனர். இந்த அழகில் கடை கோடி மனிதனுக்கும் நீதி சென்றடையவேண்டும் என கைத்தட்டு வாங்கும் அரசியல் பேச்சு வேறு. இவர்களை யார் தடுக்கிறாரகள். முதலில் உங்கள் வீட்டில் ஒட்டடை அடித்து, பெருக்கி சுத்தம் செய்ய முயற்சிசெய்யுங்கள். வருடத்திற்கு 140 நாட்கள் மற்றும் வேலை செய்து விட்டு, வாய்தாக்களை வாரி வழங்கிவிட்டு தேங்கி கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை கவலை தருகிறது என கூட சேர்ந்து ஒப்பாரி வைப்பதை நிறுத்தங்கள்.


Sun
நவ 13, 2025 05:49

ஆளுக்கொரு நீதி, மாநிலத்திற்கு ஒரு சட்டம். எந்த மாநிலத்திற்கும் இல்லாத சிறப்பு அதிகாரம் ஏதும் கேரள உயர் நீதி மன்றத்திற்கு உள்ளதா என்ன?


Kasimani Baskaran
நவ 13, 2025 04:08

ஒரே இடத்தில் சரியான முகவர்களை வைத்து விசாரித்து வசூல் செய்து பணத்தை எளிதாக மூட்டை கட்டி வீட்டுக்குள் பூட்டி வைக்கலாம். முன்னேறும் நிதித்துறைக்கு பாராட்டுகள்.


முக்கிய வீடியோ