உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கு: விரைந்து விசாரிக்க தமிழக அரசு முறையீடு

அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கு: விரைந்து விசாரிக்க தமிழக அரசு முறையீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : தமிழகத்தில், டாஸ்மாக் தலைமை அலுவலகம், அதிகாரிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில், அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை, விரைந்து பட்டியல் இடும்படி பதிவாளரிடம், தமிழக அரசு தரப்பில் முறையிடப்பட்டுள்ளது.

ஏற்க முடியாது

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சென்னை எழும்பூரில் உள்ள 'டாஸ்மாக்' தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலை அதிபர்களின் வீடுகளில், கடந்த மார்ச்சில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி பல ஆவணங்களை கைப்பற்றினர். 'டாஸ்மாக்' தலைமை அலுவலகத்தில், மாநில அரசின் அனுமதி பெறாமல் அமலாக்கத்துறை நடத்திய இந்த சோதனை செல்லாது என அறிவிக்க கோரி தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இதை விசாரித்த உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:

சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றம் என்பது, நாட்டு மக்களுக்கு எதிரானது. எந்த வழக்குகளின் அடிப்படையில் சோதனை நடத்துகிறோம் என்பதை, டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தெரிவிக்க அவசியம் இல்லை. அதிகாரிகளிடம் கட்டாயப்படுத்தி, கையெழுத்து வாங்கியதாக அரசு சொல்வதை ஏற்க முடியாது.டாஸ்மாக் நிறுவன பெண் அதிகாரிகள், ஊழியர்களை கேடயமாக பயன்படுத்தி, அமலாக்கத்துறை விசாரணையை தடுக்க அரசே முயற்சிப்பது துரதிருஷ்டமானது. அரசுக்கு சொந்தமான நிறுவனத்தில் சோதனை நடத்த, அரசிடமே அனுமதி பெற வேண்டும் என்பது அபத்தமான வாதம். இது, குற்றவியல் நீதி அமைப்பின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிரானது.எனவே, தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் தாக்கல் செய்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தலாம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

விடுமுறை

இதற்கிடையே, வரும், 23ம் தேதியிலிருந்து உச்ச நீதிமன்றத்துக்கு கோடைக்கால விடுமுறை துவங்குகிறது. அதற்கு முன்பாக, இந்த வழக்கை எப்படியாவது விசாரணைக்கு பட்டியலிட வைக்க, தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.இதையடுத்து, வழக்கை விரைந்து பட்டியலிடும்படி உச்ச நீதிமன்ற பதிவாளரிடம், நேற்று தமிழக அரசு தரப்பில் முறையிடப்பட்டது. இதையடுத்து இந்த மனு, வரும் 22ல் விசாரணைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Gopalan
மே 21, 2025 17:29

சொல்லப் போனால் அனைத்து அரசு துறைகளிலும் என்போர்சு அதிகாரிகள் லஞ்ச ஒழிப்பு செய்ய வேண்டும். அரசு அதிகாரிகளின் சொத்துக்களை முடக்கினால் தான் உண்மைகள் தெரிய வரும். முதலில் அனைத்து அதிகாரிகளுக்கு சம்மன் கொடுக்க வேண்டும்.


Ragupathi
மே 21, 2025 15:41

எவன் காசுல ஊழலை விசாரிக்க கூடாதுன்னு வழக்கு மேல் வழக்காக போட்டுகொண்டு இருக்கிறது தமிழக அரசு. மடியில் கனமில்லையென்றால் வழியில் பயமெதற்கு. வழக்கு விசாரனையை எதிர் கொண்டு தான் குற்றமற்றவன்னு நீதிமன்றத்தில் நிருபித்து மத்திய அரசு முகத்தில் கரிபூச வேண்டியது தானே.


lana
மே 21, 2025 11:42

ஏம்பா இது அண்ணா திமுக கால ஊழல் ன்னு உருட்டி விளையாட்டு செய்து விட்டு எதுக்குடா இந்த மனு.


Sundar R
மே 21, 2025 11:03

How ridiculous the DMK people are? This is the question from our people all over Tamil Nadu, because upright people dont do this type of things.


Sathya Kaliyamoorthy
மே 21, 2025 07:44

இது போன்ற வழக்குகளை விசாரிக்க கூடாது என்று நான் ஒரு வழக்கு போட்டு, அதை விரைந்து விசாரிக்க வேண்ட போகிறேன்


ramani
மே 21, 2025 07:42

இதிலிருந்தே தெரியவில்லையா திமுக அரசு ஊழல் புரிந்திருக்கிறது என்று. கோபாலபுர குடும்பம் மாட்டிக் கொள்ளும் என்று அதை தடுக்க எப்படி எல்லாம் முயற்சி செய்கிறார்கள்


GMM
மே 21, 2025 07:39

வழக்கை விரைந்து பட்டியலிடும்படி உச்ச நீதிமன்ற பதிவாளரிடம், நேற்று தமிழக அரசு தரப்பில் முறையிடப்பட்டது என்ற போது, வழக்கை விரைவில் பட்டியல் இட கூடாது என்று நிலுவையில் உள்ள பிற மனுதாரர்கள் தங்களுக்கு கால தாமதம் ஆகும் என்று குறுக்கீட்டு மனு தாக்கல் செய்தால் உச்ச நீதிமன்ற முடிவு எப்படி இருக்கும்? காரணம் தெரியாத கோரிக்கையை ஏற்றால், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் உச்ச மன்றத்தை ஏல மன்றமாக மாற்றிவிடுவர். அபராதம், தள்ளுபடி, கண்டனம் தான் தீர்வு.


Barakat Ali
மே 21, 2025 07:24

அதிமுக-பாஜக கூட்டணி 2026 ல ஜெயிச்சுட்டா பிரச்னை ஆயிடும் ....... அதான் முந்திக்கிறோம் ....


சிட்டுக்குருவி
மே 21, 2025 06:55

இதுபோன்ற பெட்டிஷன்களையெல்லாம் அனுமதிக்கவே கூடாது.சமர்ப்பிக்கும்போதே நிராகரிக்கப்படவேண்டும் . உச்சநீதிமன்ற நேரங்களையெல்லாம் அரசியல்வாதிகளுக்குகே தகாத காரணங்களுக்காக செலவிடப்படுகின்றது .


ராமகிருஷ்ணன்
மே 21, 2025 05:46

புகழ்பெற்ற விஞ்ஞான ஊழல் அரசை காப்பாற்ற வேற வழி தெரியவில்லை. அடுத்து உதைநிதியை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் சுழ்நிலை வந்து விட்டது, பிறகு போர்ஜ்ரி கெஜ்ரிவால் நிலை தனக்கு வந்துவிடும். அதனால் நீதிமன்றத்தில் கதறல். இதைபோன்ற தேச விரோத வழக்கு போட்டதற்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். வழக்கு போட்ட வக்கீல் தகுதி பறிக்க பட வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை