வாசகர்கள் கருத்துகள் ( 7 )
கல்வி கற்றவர்கள் தவறு செய்தால் கல்வித் துறையில் உள்ளவர்களுக்கும் கட்டாய கல்வியை வலியுறுத்திய நீதிபதிகளுக்கும் கட்டாயம் தண்டனை தர வேண்டும் - என்று சட்டம் வந்தால் தான்... கல்வி கற்றவர்கள் ஒழுக்கமாக வாழ முடியும் நாட்டில். இது பற்றி சிந்திக்க வேண்டிய காலம் வந்துள்ளது... திருடர்களை உருவாக்க கல்வி தேவையா? அதற்கு கட்டாய கல்வி முறையும் தேவையா... என் பிள்ளையை இந்த கல்வியில் பயில வைக்காமல் வாழ வைக்க எனக்கு உரிமையில்லையா... அப்படி ஒரு பள்ளிக்கூடத்தை நடத்த எனக்கு உரிமை இல்லையா.... ஏன் இல்லை... என்பதை நீதித்துறை விளக்க வேண்டும்...
வெள்ளையனின் கல்வி கொடுத்த நல்ல்ல்ல்லா படித்தவர்களின் லட்சனம்... வாழ்க...
கர்நாடக லோக் ஆயுக்தா போல அனைத்து மாநில ஆயுக்தாக்களும் செயல்படாததால் லஞ்ச ஊழல் வேரூன்றிவிட்டது.மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் ஊழல் மிக்க அதிகார வர்கத்தை காப்பாற்று வதிலேயே குறியாக உள்ளதால் மத்திய அரசு அதிகார வர்க்கமும் ஊழலில் திளைக்கிறது.
pala அதிகாரிகள் இப்போ பண்ணை வீடு , அதில் நீச்சல் குளம் என்று தான் அலைகிறார்கள்
பசையுள்ள பதவிகளுக்கு ஆள் எடுக்கும் பொழுது நேர்மையாக இருந்தால் பல சிக்கல்களை தவிர்க்க முடியும். மாறாக ஏலம் மூலம் பதவியை விற்றால் அவர்கள் போட்டதை விட பல்லாயிரம் மடங்கு பணம் எடுக்கவே முயல்வார்கள்.
இந்த லஞ்சம், வருமானத்தைப்போல் பல மடங்கு சொத்து வழக்குகளில் எல்லா மாநிலங்களும், அதிகாரிகள், அரசியல்வாதிகளும் போட்டிபோட்டுக்கொண்டு முன்னிலையில் நிற்கின்றனர் இவர்களெல்லாம் நாட்டை சுத்தமாக விழுங்கிவிட்டாலும் வியப்பில்லை
அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார்கள் என்றால் ஆட்சியாளர்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.அவர்களுக்கு தெரியாது என்றால் அவர்கள் ஆள தகுதி இல்லாதவர்கள் என்று அர்த்தம்.தமிழ் நாட்டிலும் லோக் ஆயுக்தா அமைப்பு இருக்கின்றது ஆனால் யாருக்கும் தெரியாது.