உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்த மருந்தெல்லாம் சாப்பிட்டா உடம்புக்கு பாதிப்பு: தடை விதித்து பட்டியல் வெளியீடு

இந்த மருந்தெல்லாம் சாப்பிட்டா உடம்புக்கு பாதிப்பு: தடை விதித்து பட்டியல் வெளியீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 156 வகையான எப்.டி.சி., வகை மருந்துகள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை விதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.எப்.டி.சி., என்பது, சில மூலப் பொருட்களின் கலவையாகும்.அதாவது, சில மூலப் பொருட்கள் இணைந்து தயாரிக்கப்படும் மருந்தாகும். இந்த மருந்துகளுக்கு ஏற்கனவே மத்திய அரசு தடை விதித்து கடந்தாண்டு அரசாணை வெளியிட்டுள்ளது.இந்நிலையில் இன்று (ஆக.,23) வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், காய்ச்சல், ஜலதோசம், அலர்ஜி மற்றும் வலி நிவாரணி மற்றும் பாக்டீரிய எதிர்ப்பு மருந்துகள் குறித்து டி.டி.ஏ.பி. எனப்படும் மருந்து தொழில்நுட்ப வாரியம் நிபுணர் குழுவினர் நடத்திய ஆய்வில் இவை உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என 156 வகையான மருந்துகள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Sundararaman Subramanian
ஆக 24, 2024 10:19

எந்த மருந்துகள் என்ற பட்டியலை வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும். நன்றி


sugumar s
ஆக 27, 2024 14:23

They should publish list medicines and compositions. otherwise these types of news are useless.


Tetra
ஆக 24, 2024 06:22

என்ன பாதிப்பு என்று தெரிவித்தால் நன்றாக இருக்கும். மருந்து தயாரிப்பாளர்களின் தனிப்பட்ட போட்டிகள் நம் வருமானத்தைதான் கரைக்கிறன. எந்த மருந்தும் எவருக்கும் பாதிப்பு ஏற்படுத்ததான் செய்யும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை