உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கவர்னர்கள் மூலம் மாநில அரசுகளுக்கு தடை போடும் மத்திய அரசு: ராகுல்

கவர்னர்கள் மூலம் மாநில அரசுகளுக்கு தடை போடும் மத்திய அரசு: ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' கவர்னர்களை தவறாக பயன்படுத்தி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தடை போடுகிறது. இதனை தடுக்க வேண்டும்,'' என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.'மசோதாவுக்கு ஒப்புதல் கொடுப்பதா வேண்டாமா என்று முடிவு எடுக்க கவர்னர் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு அரசியல் சாசனம் அதிகாரம் அளித்துள்ளதா?' என, ஜனாதிபதி திரவுபதி முர்மு கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக 14 கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு பதில் அளிக்கும்படி சுப்ரீம் கோர்ட்டை ஜனாதிபதி கேட்டுள்ளார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ' சுப்ரீம் கோர்ட்டில் விளக்கம் கோரி எழுப்பப்பட்டுள்ள வினாக்கள், அரசியலமைப்பு சட்டம், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே அதிகாரங்களை பகிர்ந்தளித்துள்ளதன் அடிப்படையையே சீர்குலைக்கவும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில சட்டசபைகளை திறனற்றதாக்கவும் நினைக்கும் மத்திய அரசின் தீய எண்ணத்தை வெளிப்படுத்துகிறது.மாநில சுயாட்சிக்கே இது உடனடி ஆபத்தை உருவாக்கியுள்ளது. இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில், பா.ஜ., அல்லாத அனைத்து மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதற்காக, சட்டப் போராட்டத்தில் இணையுமாறு வலியுறுத்துகிறேன். ஒட்டுமொத்த ஆற்றலை ஒருங்கிணைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம்' எனத் தெரிவித்து இருந்தார்.இந்த பதிவை மேற்கோள் காட்டி லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: இந்தியாவின் பலம் என்பது அதன் பன்முகத்தன்மையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் சொந்த குரல் உள்ளது. மத்திய அரசு, கவர்னர்களை தவறாக பயன்படுத்தி, அந்த குரல்களை நசுக்கவும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுகளுக்கு தடையை ஏற்படுத்தவும் முயற்சி செய்கிறது.இது கூட்டாட்சி மீதான தாக்குதல். இதனை எதிர்க்க வேண்டும் என ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Varadarajan Nagarajan
மே 22, 2025 06:45

இவரது ஆத்தா செஞ்சதுயெல்லாம் இப்ப ஞாபகத்துக்கு வருது. கனவுலவந்து சொல்லிருப்பாங்கபோல. இப்ப என்ன செய்ய. கர்மா விடாது. அனுபவித்தே தீரணும்


Rajasekar Jayaraman
மே 22, 2025 00:19

இவனுங்க ஆட்சியில் கவர்னர் வைத்து சட்ட விரோதமான காரியங்களை செய்த பொறம்போக்கு இப்போது முதலை கண்ணீர் வடிக்கிறது.


தாமரை மலர்கிறது
மே 21, 2025 23:51

மும்மொழி கொள்கை போன்ற மத்திய அரசின் சிறந்த கொள்கையை ஏற்றுக் கொள்ளாமல் தன்னிச்சையாக ஆட்டம் போடும் ஸ்டாலின் போன்ற முதல்வருக்கு போடப்படும் மூக்கணாங்கயிறு தான் கவர்னர். அடம் பிடிக்கும் முதல்வர்களை அடக்கி ஆள்வதில் கில்லாடிக்கு கில்லாடி அமித் ஷா.


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 21, 2025 23:35

ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சி சொன்னதை மாநில கட்சிகள் கேட்டு கொண்டு இருந்தது இப்போது மாநில கட்சிகள் சொல்வதை காங்கிரஸ் கட்சி கேட்க வேண்டிய நிலை.


Thiyagarajan S
மே 21, 2025 21:50

பாவம் காங்கிரஸ் கட்சி எத்தனையோ தியாகிகளும் நல்லவர்களும் பங்கு பெற்ற இந்த கட்சியில் இப்பொழுது


கல்யாணராமன்
மே 21, 2025 21:39

ராகுல்காந்தி நீங்கலாக ஒருவரும் ஸ்டாலினுக்கு ஆதரவு தர மாட்டார்கள். அவரும் வேறு வழி இல்லாமல் ஆதரவு கொடுக்கிறார். சட்ட மன்ற தேர்தலில் அதிக சீட் யாசகம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில்.


Rangarajan Cv
மே 21, 2025 20:40

Today madras high court stalled the VC. Appointment by TN state as this is directly contradicting with UGC, which empowers Chancellor ( who happens to be governor of the state). Will they again go to SC


vbs manian
மே 21, 2025 20:03

இவர் தன் கட்சியின் சரித்திரத்தை கொஞ்சம் திரும்பி பார்க்க வேண்டும்.


GMM
மே 21, 2025 18:52

ராகுல் எதிர் கட்சி தலைவர். சரியான கருத்து கூற வேண்டும். தமிழக நிர்வாகம் கவர்னர் பார்வைக்கு அனுப்பிய மொத்த மசோதாக்கள். ஏற்பு அளித்தது. நிறுத்திய மசோதா. அதன் காரணம் தெரியுமா? மசோதாக்கள் தேசிய கொள்கைக்கு எதிராக, தன் மாநில, பிற மாநிலங்களில் பாதிப்பு ஏற்படுத்த கூடாது. மத்திய அரசும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுதான். மாநில அரசு என்றால், நாட்டை பாதுகாக்க வேண்டும். மாநில நிர்வாகம் அல்லது மத்திய அரசின் கூடுதல் நிர்வாக அமைப்பு என்று கூறலாம். மாநில அரசு அரசியல் சாசனத்தில் இருக்காது. கூட்டாட்சியை ஊழல் வழக்கு காரணமாக சிதைக்கும் மாநில நிர்வாகத்தை ஒடுக்குவது அவசியம்.


Haja Kuthubdeen
மே 21, 2025 18:52

இதை காங்கிரஸ் கட்சி சொல்வதுதான் ஆச்சரியம்...எத்தனை எத்தனை மாநிலங்களில் கவர்னரின் பெயரில் ஆட்சியையே கலைத்தார்கள்.