உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தனிநபர் வாகனங்களுக்கு சுங்க கட்டண பாஸ் திட்டம் மத்திய அரசு ஆலோசனை

தனிநபர் வாகனங்களுக்கு சுங்க கட்டண பாஸ் திட்டம் மத்திய அரசு ஆலோசனை

புதுடில்லி :தனிநபர் வாகனங்கள், சுங்கக் கட்டணம் செலுத்துவதற்காக காத்திருக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், மாதாந்திர அல்லது ஆண்டு பாஸ்கள் வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சருமான நிதின் கட்கரி, நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணங்களில் 74 சதவீதம், வர்த்தக வாகனங்களால் கிடைக்கிறது. அதே நேரத்தில், தனிநபர் வாகனங்கள் வாயிலாக 26 சதவீதம் கிடைக்கிறது.தனிநபர் வாகனங்களுக்கு மாதாந்திர அல்லது ஆண்டு பாஸ்கள் வழங்குவது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது. இதன் வாயிலாக வசூல் இழப்பு ஏற்படுவது தடுக்கப்படுவதுடன், வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதும் தவிர்க்க முடியும். பாஸ்கள் வழங்குவதால், அரசுக்கு பெரிய அளவில் இழப்பும் ஏற்படாது.நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பது, 'பாஸ்டாக்' வாயிலாக செய்யப்பட்ட பின், சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கும் நேரம், எட்டு நிமிடங்களில் இருந்து, 47 வினாடிகளாக குறைந்துள்ளது.அடுத்த கட்டமாக, ஒரு வாகனம் நெடுஞ்சாலையில் இரண்டு சுங்கச் சாவடிகளுக்கு இடையே செல்லும்போது, அதற்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு பதிலாக, வாகனம் புறப்படும் இடத்தில் இருந்து அது சென்றடையும் இடம் வரைக்குமான கட்டணத்தை மட்டும் வசூலிக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.இதன் வாயிலாக, சுங்கச் சாவடிகளில் காத்திருக்கும் நேரம் குறைவதுடன், பயணிக்கும் துாரத்துக்கு மட்டும் கட்டணம் வசூலிக்கப்படுவதால், வாகன ஓட்டிகளுக்கு பலன் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Karthik
ஜன 17, 2025 17:03

அய்யா கட்கரி, ஒருமுறையேனும் சிங்கப்பூர் சென்று அங்குள்ள டோல் // ERP மின்னியல் சாலைக் கட்டணம் // எவ்வாறு வசூலிக்கப்படுகிறது என்று பார்த்து வரவும். அங்கு 90 கி.மீ வேகதிதிலேயே டோலைக்கடக்க முடியும். டோலைக்கடந்த இரண்டு வினாடிக்குள் கட்டணம் செலுத்தியதற்கான அறிவிப்பை பெறுவீர். காலத்திற்கு ஏற்றவாறு நாமும் முன்னோடியாக செயல்படுத்தலாமே கட்கரி.


Rangarajan Cv
ஜன 17, 2025 10:48

Toll plaza problem is mainly due to 2 reasons .1) those who do not hv sufficient money in their fastag or not fastag at all. They keep arguing with counter person


Chennaivaasi
ஜன 17, 2025 10:39

தற்போது புதிதாக விழுப்புரம் நாகப்பட்டினம் இடையே உள்ள நெடுஞ்சாலை பணிகள் முற்று பெறாமலேயே சுங்கம் வசூல் செய்ய படுகிறது. அதுவும் கடலூர் முதல் சிதம்பரம் வரை செல்வதற்கு Rs. 125/- வசூல் செய்யப்படுகிறது. பாலங்கள் சரியாக இல்லை. கேட்பர்தற்கும் யாரும் இல்லை.


தியாகு
ஜன 17, 2025 10:08

உன் பக்கத்துல இருக்கும் கட்டுமர திருட்டு திமுகக்காரன் உன் காரையே ஆட்டையை போடுறான், அதை கேட்க துப்பில்லை, வந்துட்டாரு ஊழலற்ற லஞ்சமற்ற மத்திய அரசை குறை சொல்ல.


அப்பாவி
ஜன 17, 2025 09:14

கார் வெச்சிருந்தாலே சுங்கம் உருவிடுங்க. பொம்மைக் காரா இருந்தாலும் சரி.


GMM
ஜன 17, 2025 08:38

அரசு , அரசு சார்பு, தனியார் மற்றும் பப்ளிக் போக்குவரத்திற்கு மாத, 3 மாத கட்டணம் வசூலிக்கலாம். வர்த்தகம் வாகனங்களுக்கு நிர்ணயிக்கும் கட்டணம் போக்கு வரத்து நெரிசல் நேரங்களில் அதிகம் விதிக்க வேண்டும். முழு இரவு நேரங்களில் கட்டணம் குறைக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் / வாகனம் எண் விவரம் தேசிய அளவில் ஒரு பதிவு தேவை. பயணிக்கு தூரத்திற்க்கு தகுந்த கட்டணம் நல்லது. பாக்கிஸ்தான் , வங்கதேச எல்லை ஓர சாலைகளில் இருமடங்கு வசூலிக்க வேண்டும்.


Ram
ஜன 17, 2025 08:16

எப்படி பார்த்தாலும் அரசு தனக்கு நஷ்டமில்லாமல் பார்த்துக்கொள்ளும் , தனி நபருக்கு நேரம் வேண்டுமானால் மிச்சமாகலாம் அனால் செலவு அதிகமாகத்தான் இருக்கும் …. முதலில் ஒருநாள் சுங்கக்கட்டணம் ருபாய் இரநூறுக்கு மிகாமல் இருக்கவேண்டும்


தமிழன்
ஜன 17, 2025 06:18

மொதல்ல இந்திய நெடுஞ்சாலைகளிலுள்ள 60 கி.மீக்குள் இருக்கும் தேவையில்லாத பகல் கொள்ளையை விட மோசமாக கொள்ளையடிக்கும் டோல்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் நவீன முறை தேவைதான் ஆனால் பல இடங்களில் சாலைகள் பராமரிப்பின்றி டோல் வசூல் மட்டும் ஜோராக நடக்கின்றது இதையெல்லாம் ஒழுங்குபடுத்தாமல் டோல் கட்டணங்களை மட்டும் வருடா வருடம் உயர்த்துவது துளியும் நியாயமில்லை எந்த கேப்மாரி அரசியல்வாதியும் இந்த பகல் கொள்ளையைப் பற்றி நாடாளு மன்றத்தில் பேசுவதில்லை வரி தேவைதான் ஆனால் அது நியாயமான முறையில் வசூலிக்கப்பட வேண்டும்


தாமரை மலர்கிறது
ஜன 17, 2025 02:21

மிகவும் அற்புதமான திட்டம். அனைத்து வளர்ந்த நாடுகளிலும் இந்த திட்டம் ஏற்கனவே உள்ளது. மேலும் இருசக்கர வாகனங்களுக்கும் இந்த திட்டத்தை கொண்டுவரவேண்டும். இந்தியாவின் கட்டுமான வளர்ச்சிக்கு டோல் கேட் பெரிய அளவில் உதவுகிறது.


Natarajan Alagappan
ஜன 17, 2025 06:28

நாம் எவ்வளவு பின்தங்கி உள்ளோம் ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை