ரூ.40 லட்சம் மதிப்புள்ள சிகரெட் பறிமுதல்
புதுடில்லி:டில்லியில், 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். முறையான விகிதத்தில் எச்சரிக்கை படங்கள் இடம்பெறாத, சில வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகளை விற்க, இந்தியாவில் தடை உள்ளது. அந்த வகையில், வடக்கு டில்லியின் காஷ்மீரா கேட் பகுதியில், சஞ்சய் அகர்வால், 51, என்ற நபரை சுற்றி வளைத்த போலீசார், அவர் வைத்திருந்த பையில் இருந்தும், அவரின் வீட்டில் இருந்தும், 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர்.