உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கல்லுாரி மாணவி மாரடைப்பால் பலி

கல்லுாரி மாணவி மாரடைப்பால் பலி

ஒஸ்மனாபாத்: மஹாராஷ்டிராவில் மேடையில் பேசிக் கொண்டிருந்த போதே, 20 வயது கல்லுாரி மாணவி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மஹாராஷ்டிராவின் ஒஸ்மனாபாத் மாவட்டத்தில் தாராசிவ் நகரம் உள்ளது. இங்குள்ள தனியார் கல்லுாரியில் சமீபத்தில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், வர்ஷா கரத், 20, என்ற இளம்பெண் பேச்சு போட்டியில் பங்கேற்றார். பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் பேசிக் கொண்டிருந்த அந்தப் பெண் திடீரென மேடையிலேயே மயங்கினார். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக வர்ஷாவை சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.வர்ஷாவுக்கு, சில ஆண்டுகளுக்கு முன் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அதற்கான மருந்துகளை முறையாக அவர் எடுத்துக்கொள்ளாதது தான் இறப்புக்கு காரணம் எனவும், டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ashanmugam
ஏப் 07, 2025 13:19

இந்த வயதில் பல அறிய பல சாதனைகளை புரிந்து வாழ வேண்டிய வயதில் எதிர்பாரத விதமாக திடீரென மயங்கி விழுந்து இறந்தது ஓர் ஜீரணிக்க முடியாத மனநிலையில் அம்மணியின் பனித்தன ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாறகுக. ஓம் சாந்தி.


mohan
ஏப் 07, 2025 18:44

இன்றைய உணவு முறைகள் சரி இல்லை...


முக்கிய வீடியோ