உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நுாலகங்களாக மாறும் சமூகநலக்கூடங்கள்

நுாலகங்களாக மாறும் சமூகநலக்கூடங்கள்

நேதாஜி நகர்:நகரில் பயன்படுத்தப்படாத சமூகநலக்கூடங்களை நுாலகங்களாக மாற்றும் நடவடிக்கையில் டி.டி.ஏ., எனும் டில்லி மேம்பாட்டு ஆணையம் இறங்கியுள்ளது.இதுகுறித்து டி.டி.ஏ., வெளியிட்ட அறிக்கை:நகரில் பல்வேறு சமூக நலக்கூடங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன. அவற்றை நுாலகங்களாகவும் வாசிப்பு மையங்களாகவும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.முதற்கட்டமாக ராஜேந்திர நகர், அதிசினி, விகாஸ்புரி, துவாரகா செக்டார்-16பி, ரோகிணி ஆகிய இடங்களில் பயன்படுத்தப்படாத ஐந்து சமூக நலக்கூடங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன. தேவையான அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன நுாலகமாகவும், வாசகசாலையாகவும் மாற்றும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி