உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போர் நிறுத்தம் தொடர்பாக பார்லி சிறப்பு கூட்டம்: காங்கிரஸ் வலியுறுத்தல்

போர் நிறுத்தம் தொடர்பாக பார்லி சிறப்பு கூட்டம்: காங்கிரஸ் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியா, பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பாக, அனைத்துக் கட்சி கூட்டம், பார்லி சிறப்புக் கூட்டம் ஆகியவற்றை பிரதமர் மோடி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சமூகவலைதள பதிவில் கூறியதாவது:போர் நிறுத்தம் குறித்து முன்னெப்போதும் இல்லாத வகையில் அமெரிக்கா அறிவிப்பு வெளியிட்டது. ஆகவே, இப்போது முன்பை விட அதிகமாக, பிரதமர் அனைத்துக் கட்சி கூட்டத்திற்குத் தலைமை தாங்கி அரசியல் கட்சிகளின் நம்பிக்கையை பெற வேண்டும்போர் நிறுத்தத்தின் மூலம் தேசிய பாதுகாப்பு விளைவுகளை விவாதிக்கவும், எல்லைப் பகுதிகளில் மக்களின் பாதுகாப்பு நிலை குறித்து தெளிவுபடுத்தவும், தற்போதைய நிலை குறித்து அரசு விளக்கமளிக்கவும் சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் அந்த பதிவில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ராஜ்
மே 11, 2025 10:13

ஏன் போர் நின்று விட்டது என்று கவலையா. நீங்கள் பத்திரமாக பாதுகாப்பாக ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டுள்ளீர்கள். அங்கே நமது வீரர்கள் உயிரை தியாகம் செய்து கொண்டுள்ளனர். எல்லை மாநிலங்களில் கொளுத்தும் வெயிலில் மக்கள் இருட்டில் புமுங்கி கொண்டுள்ளனர். குழந்தைகள் நோயாளிகள் அவதிப்பட்டு கொண்டுள்ளனர். எனவே போர் நின்று விட்டதே என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள்.


K V Ramadoss
மே 10, 2025 22:01

ஜெய்ராம் ரமேஷ் உங்களுக்கு அரசு எந்த முடிவு எடுத்தாலும், அதில் ஏதாவது குற்றம் கண்டுபிடித்தால்தான் நீங்கள் உண்மையான காங்கிரஸ்வாதி என்ற நினைப்பா? மோதியையோ, அரசையோ அல்லது நம் படை வீரர்களையோ பாராட்டினால் சோனியா கோபித்துக் கொள்வார் என்ற பயமா ? சசி தாரூர் அவர்களின் மேன்மைத்தனம் உங்களுக்கு வராதா? காங்கிரசின் மிக புத்திசாலி என்று நினைப்பா?


Venkatesh
மே 10, 2025 21:54

இந்த மானங்கெட்ட கூட்டத்துக்கு கொஞ்சம் கூட கூச்சமே இல்லையா? இந்த ஜெய்ராம் ரமேஷ் எல்லாம்....


vbs manian
மே 10, 2025 21:03

பாக்கிற்கு ஆதரவாக கோஷம் போட்ட இந்த கட்சியின் கோரிக்கையை ஏற்கக்கூடாது.


Rajan
மே 10, 2025 20:49

this cheap politician


N Srinivasan
மே 10, 2025 20:39

வந்துட்டான்யா ...... வந்துட்டான்யா .....இனி நமது உள்நாட்டு அரசியல் போரை பாப்போம். எங்க அப்பா தேசிய கொடியுடன் இன்று மாலை பேரணி போனதால்தான் பாக்கிஸ்தான் பயந்து போரை வேண்டாம் என்று சொல்லிவிட்டது


மீனவ நண்பன்
மே 10, 2025 20:25

ராணுவ செய்தி தொடர்பாளரின் அறிக்கை போதுமே ..


ஆரூர் ரங்
மே 10, 2025 19:58

விவாதத்தை மும்பைத் தாக்குதலிலிருந்து துவங்கலாம் என்றால் சரி.


புதிய வீடியோ