உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுரங்கத்தில் பதுக்கிய ரூ.1.4 கோடி இருமல் டானிக் பறிமுதல்

சுரங்கத்தில் பதுக்கிய ரூ.1.4 கோடி இருமல் டானிக் பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: வங்கதேச எல்லையில், சுரங்கம் அமைத்து பதுக்கி வைத்திருந்த ரூ.1.4 கோடி மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட இருமல் டானிக் பாட்டில்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் இந்தியா-வங்கதேச எல்லைக்கு அருகே, கடத்தல் பொருட்களை பதுக்கி வைப்பதற்காக அமைக்கப்பட்ட சுரங்கம் போன்ற நிலத்தடி தொட்டிகளை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர்.அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1.4 கோடி மதிப்புள்ள 62,200 தடைசெய்யப்பட்ட இருமல் டானிக் பென்செடைல் பாட்டில்களைக் கைப்பற்றினர்.இது குறித்து எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறியதாவது:எங்களுக்கு கிடைத்த உளவுத்துறையின் தகவலின்படி,எல்லை புறக்காவல் நிலையமான துங்கியைச் சேர்ந்த பி.எஸ்.எப்., பணியாளர்கள், உள்ளூர் போலீசாருடன் இணைந்து, மஜ்தியா நகருக்கு அருகிலுள்ள நகாட்டா கிராமத்தில் சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினோம்.இந்த நடவடிக்கையின் போது, ​​மூன்று நிலத்தடி சுரங்க அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. அடர்ந்த மரங்களுக்கு அடியில் இத்தகைய சுரங்க அமைப்பு இருந்தது. சுரங்கத்தினுள் ஒளி புகாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கடத்தல்காரர்கள் செய்திருந்தனர்.இருமல் டானிக் பென்செடைல், வங்கதேசத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு அதிக தேவை இருப்பதால் இந்தியாவிலிருந்து கடத்தப்படுகிறது. முழு கடத்தல் வலையமைப்பையும் அகற்ற தொடர் விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

நிக்கோல்தாம்சன்
ஜன 26, 2025 05:25

குருவிகள் நிறைந்த உலகமடா


தமிழன்
ஜன 25, 2025 22:55

இந்த பென்சிடைல் இருமல் டானிக் மிகவும் சக்திவாய்ந்தது ஓவர் டோஸ் எடுத்துக் கொண்டால், உயிருக்கே உலை வைத்துவிடும் இதை எங்கள் ஊரிலுள்ள ஒரு மருத்துவர் அவருக்கு குடி பழக்கமுண்டு சரக்கில் கலந்து அடிப்பார் போதை சும்மா சுர்ரென ஏறும்


Kasimani Baskaran
ஜன 25, 2025 22:40

ஆள்கடத்தல் முதற்கொண்டு எல்லா வேலையும் செய்வார்கள்.. கேடிகள்


Amruta Putran
ஜன 25, 2025 22:12

Peaceful group?


சமீபத்திய செய்தி