உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுலின் குடியுரிமை வழக்கு: அரசிடம் விளக்கம் கேட்ட கோர்ட்

ராகுலின் குடியுரிமை வழக்கு: அரசிடம் விளக்கம் கேட்ட கோர்ட்

புதுடில்லி, காங்கிரஸ் எம்.பி., ராகுலின் இந்திய குடியுரிமையை ரத்து செய்ய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடக் கோரி பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தொடர்ந்த வழக்கில், மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து தெளிவுப்படுத்துமாறு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான சுப்ரமணிய சுவாமி சார்பில் வழக்கறிஞர் சத்யா சபர்வால், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், 'காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல், தான் ஒரு பிரிட்டன் பிரஜை என்றும், அந்த நாட்டுக்கான பாஸ்போர்ட் உள்ளதாகவும் கூறியுள்ளார்.'இது, இந்திய அரசியல் சாசன சட்டம் 9வது பிரிவிக்கு எதிரானது. இந்திய குடியுரிமை சட்டத்தின்படி, அவர் இந்திய குடிமகன் என்ற தகுதியை இழந்துவிட்டார். விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் ராகுலின் இந்திய குடியுரிமையை ரத்து செய்யும்படி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பினேன். இதற்கு எந்த பதிலும் வரவில்லை.'என் புகார் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுவரை ஆஜரான வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளதால், வேறு ஒருவரை நியமிக்க அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், 'ராகுலின் குடியுரிமை விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு குறித்து விளக்கமளிக்க வேண்டும்' என மத்திய அரசைக் கேட்டுகொண்டது. விசாரணை, அடுத்த மாதம் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

ஆரூர் ரங்
டிச 07, 2024 10:26

அரசே நடவடிக்கையெடுத்தால் ராகுல் காங்கிரசு அனுதாப ஓட்டுகளை அள்ளும். கோர்ட் நடவடிக்கை மூலம் தண்டனை என்றால் ஆளும் கட்சிக்கு பிரச்சனை வராது.


Barakat Ali
டிச 07, 2024 11:04

பிறைசூடிய தலைமை நீதிபதியின் வீட்டுக்கு போய் பூஜையில் கலந்து கொண்டதற்கே கூச்சலிடுபவர்கள் கோர்ட் மூலம் தண்டனை என்றால் மட்டுமா எதற்கும் கூச்சலிடவே செய்வார்கள் .... கோர்ட் கூட எங்களுக்கு / தேசத்துக்கு விரோதம் ன்னு சொல்ல உங்களுக்கெல்லாம் இது ஒரு வாய்ப்பு .....


Balaji Radhakrishnan
டிச 07, 2024 12:46

100% உண்மை


Nagarajan D
டிச 07, 2024 09:45

எப்படியும் இந்நேரம் பேரம் ஆரம்பித்திருப்பானுங்க காந்தி கூட்ட அடிமைகள்...


எவர்கிங்
டிச 07, 2024 09:32

வழக்கம் போல் வாய்தா ஒத்தி வைப்புமேல் முறையீடு தடை..... ஒரு ஆணியும்.....


Barakat Ali
டிச 07, 2024 09:28

ராகுலின் பிரிட்டிஷ் அல்லது இந்திய குடியுரிமை .... இரண்டில் ஏதேனும் ஒரு குடியுரிமையை இழப்பதில் பாஜகவுக்கே சம்மதம் இருக்காது .... இது காங்கிரசை அவ்வப்போது தட்டிவைக்க என்று சொல்லப்படும் கருத்தை நானும் வழிமொழிகிறேன் ... அக்கட்சியின் தலைமையில் உள்ள குழப்பம் நீடிப்பதே பாஜகவுக்கு அனுகூலமானது ...... அதன் தலைமைக்கு ஆபத்து வருவதையோ, தலைமைப்பதவி குடும்பம் அல்லாத வேறொருவரின் கைக்கு போவதையோ பாஜக விரும்பாது ..... ஹிந்துத்வாவை விட காங்கிரஸ் கமிட்டியில் இருக்கும் குழப்பத்தைத்தான் பாஜக நம்பியிருக்கிறது ..... சொல்லப்போனால் சோனியாவின் குடும்பமே இன்னமும் இத்தாலிய குடியுரிமையைத் துறக்கவில்லை என்று துக்ளக் பத்திரிகையில் குருமூர்த்தி எழுதியிருக்கிறார் .....


ஆரூர் ரங்
டிச 07, 2024 14:47

ஒருமுறை இட்டாலி கடவுச்சீட்டை வாங்கிவிட்டால் வாழ்நாள் முழுவதும் அதை கேன்சல் செய்ய முடியாது. போதாததற்கு தான் பிரிட்டிஷ் குடிமகன் என்று வேறு இங்கிலாந்தில் அபிடவிட் தாக்கல் செய்துள்ளார். விஞ்ஞான ஊழல்


sureshpramanathan
டிச 07, 2024 09:23

Very disappointed with both Central Govt and Juditial system Everything is so clear Rahul is guilty Cancel his citizenship and throw him in Bay of Bengal or Indian Ocean Delaying judgement is not acceptable by public of India


sankar
டிச 07, 2024 09:22

சட்டுபுட்டுனு சோலிய முடிச்சு அனுப்புங்கப்பா -


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 07, 2024 08:48

காங்கிரசை ஒடுக்கி மாநிலக்கட்சிகளின் துணையுடன் - அதே சமயத்தில் மாநிலக்கட்சிகளை தலையெடுக்க விடாமல் ஊழல் விசாரணை என்கிற பெயரில் மிரட்டி வைத்து - ஆட்சியில் நீடிக்க வேண்டும் ...... இதுதான் பாஜகவின் அஜெண்டா ....


sankar
டிச 07, 2024 10:26

கொள்ளையடிச்சா விசாரணை செய்வாங்கதானே


Jebamani Mohanraj
டிச 07, 2024 08:16

ராகுல் இந்தியாவின் அடுத்த பிரதமர் என ஒரு பெரும் அடிமை கூட்டம் கனவு காண்கிறது கனவு நனவாகாதோ?


Kalyanaraman
டிச 07, 2024 08:09

வேதப்படுத்த வேண்டிய வழக்கில் மத்திய அரசு என்ன சுணக்கம் காண்பிக்கிறது. ராகல் வின்சி-யின் இஷ்டப்படி நம் இந்தியாவை விட்டு போகட்டும், ச...யன் தொலைந்தது.


VENKATASUBRAMANIAN
டிச 07, 2024 07:52

எந்த நாடு வேண்டும் என்று கேட்டு அந்த நாட்டுக்கே அனுப்பி விடலாம்.அதுதான் இந்தியாவுக்கு நல்லது


சமீபத்திய செய்தி