உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அவதுாறு வழக்கில் குறுக்கு விசாரணை: வந்தார் அண்ணாமலை; வரவில்லை டி.ஆர்.பாலு!

அவதுாறு வழக்கில் குறுக்கு விசாரணை: வந்தார் அண்ணாமலை; வரவில்லை டி.ஆர்.பாலு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அவதுாறு வழக்கில் குறுக்கு விசாரணை செய்வதற்காக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வந்திருந்த நிலையில், டி.ஆர்.பாலு சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு வரவில்லை. இதனால் வழக்கு விசாரணை டிச.,24க்கு ஒத்திவைக்கப்பட்டது.கடந்த, 2023, ஏப்.,14ல், தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை இருந்தபோது, 'டி.எம்.கே., பைல்ஸ்' என்ற பெயரில், திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். ''தி.மு.க., பொருளாளரும், எம்.பி.,யுமான டி.அர். பாலுவுக்கு, 21 நிறுவனங்கள் இருப்பதாகவும், அவருக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும், 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாகவும்' அண்ணாமலை கூறினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=p5xvqn84&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து, அண்ணாமலை மீது, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாலு அவதுாறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் டிஆர்பாலு கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார்.இந்நிலையில், 'வழக்கில் நானே டிஆர்பாலுவிடம் நேரடியாக குறுக்கு விசாரணை செய்யப்போவதாக' அண்ணாமலை அறிவித்தார். அந்த குறுக்கு விசாரணை இன்று நவ.,11ல் நடப்பதாக இருந்தது. டி.ஆர்.பாலுவிடம் அண்ணாமலை நடத்த இருக்கும் குறுக்கு விசாரணையை எதிர்பார்த்து பல்வேறு தரப்பினர் காத்திருந்தனர். இன்று (நவ., 11) அண்ணாமலை குறுக்கு விசாரணைக்காக சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு தயாராக வந்திருந்தார். ஆனால் டி.ஆர்.பாலு கோர்ட்டுக்கு வரவில்லை. நீதிபதிகளிடம், 'டிஆர்பாலு எம்.பி.,யாக இருப்பதால் அதற்கான பணியில்அவர் ஈடுபட்டு இருக்கிறார். இதனால் வழக்கு விசாரணையை வேறு தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும்' என்று அவரது வக்கீல்கள் வேண்டுகோள் விடுத்தனர்.பின்னர் வழக்கு விசாரணை டிச.,24க்கு ஒத்திவைக்கப்பட்டது. அதேநேரத்தில், சென்னை, சுவாமி சிவானந்தா சாலையில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்திற்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் டிஆர்பாலு பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 79 )

MARUTHU PANDIAR
நவ 17, 2025 15:17

இது தான் எங்க திரவிஷ ஸ்டைலு


sankaranarayanan
நவ 14, 2025 03:18

சென்னை, சுவாமி சிவானந்தா சாலையில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்திற்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் டிஆர்பாலு பங்கேற்றார். அன்ரே நீதி மன்றத்தில் வழக்கு இருக்கும்போது அதற்கு வராமல் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு டிஆர் பாலுவந்தாரென்றால், நீதி மன்ற அவமதிப்பு என்றே நீதி அரசர் கருதி மேலும் அவர் இல்லாமலேயே வழக்கை தொடரலாம் இப்படியே சென்றால் திராவிட மாடல் அரசில் யாருமே தங்களது வழக்கு வரும்போது நீதி மன்றம் வராமல் இழுத்தடிப்பார்கள் இது ஓர் உதாரணம் பிறகு நீதி எங்கே கிடைக்கும்


M Ramachandran
நவ 13, 2025 19:27

திருடன் கிட்ட எல்லாம் நேர்மையை எதிர் பார்க்க முடியாது. அண்ணாமலையிடம் மூக்கறு பட்டு மூக்கில் ரத்தம் ஒழுக ஸ்டாலினிடம் முறையீடு. எணக்கே தண்ணி காட்டுபவர் அண்ணாமலை. நீயா போயி மாட்டிக்கிட்டா நான் என்ன செய்ய முடியும். நீதி மன்றத்தில் மன்னிப்பு கேட்டு தப்பிக்க பார் என்று திருடனுக்கு அட்வைஸ் கொடுத்து அனுப்பி விட்டார்.


Matt P
நவ 13, 2025 11:59

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்பவனுக்கு நீதிமன்றத்தின் முக்கியத்துவம் தெரியவில்லை. இவரு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டா தானே ஆர்ப்பாட்டம் கலை கட்டும்.


K V Ramadoss
நவ 16, 2025 07:48

மேலும் அவர் ஒரு எம்.பி. ..ஒருகாலத்தில் மத்திய அரசாங்கத்தில் காபினட் மந்திரியாக இருந்தவர். மடியில் கனம் கூட்டியவர். வழியில் பயம் இருக்கத்தானே செய்யும் அதனால்தான் வரவில்லை


theruvasagan
நவ 12, 2025 09:00

மானநஷ்ட வழக்கின் வாதியை குறுக்கு விசாரணை செய்யும்போது தனக்கு மானம் இருப்பதை அவர் நிரூபிக்க வேண்டுமே. இல்லாத ஒன்றை எப்படி நிரூபிப்பது. அதனால்தான் விசாரணைக்கு ஆஜராகாமல் ஜகா வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதாம்.


கல்யாணராமன் மறைமலை நகர்
நவ 12, 2025 06:02

இவர்களே வழக்கும் போடுவார்களாம், விசாரணைக்கு வரவும் மாட்டார்களாம். அப்போ, இல்லாத மானத்துக்கு நஷ்ட ஈடு கேட்பதுதான் திராவிட மாடலா?


adalarasan
நவ 11, 2025 22:01

சும்மா இருந்த சங்க்கை ஊதி கெடுத்தாராம் என்ற பழமொழிக்கு ஏற்றாப்போல் இவர் போட்ட கேஸுக்கு இவரே போகாமாள் இருக்காரே.//???


Easwar Kamal
நவ 11, 2025 20:50

பாலுவை விட்டுவிடுங்கள் லேட்டஸ்ட் நேருவின் 1000 கோடி ஊழல் அது எப்போது. நீங்கள் தெலுங்கன் அமைச்சருங்களை கை வைத்தால் இவனுங்க மட்டும் எப்படி எஸ்கேப் ஆவுரானுங்க அல்லது நீங்களும் கண்டு கொள்வதும் இல்லை. இந்த நேரு மற்றும் வேலுவை ஒரு பிடி பிடிங்க பார்க்கலாம் அப்போது ஒத்து கொள்கிறோம் உங்கள் வீரத்தை...


VENKATASUBRAMANIAN
நவ 11, 2025 19:52

இதுதான் திராவிட மாடல். பயம்


Barakat Ali
நவ 11, 2025 19:03

திமுக வெத்துவேட்டு கட்சி ..... அட்டைக்கத்தி வீரர்கள் ..... ஆனால் அண்ணாமலை ஆண்மகன் .....