வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இஷ்டத்துக்கு டிக்கெட் விற்று காசு பார்க்கும் ரயில்வே துறை. ஒரு ரயிலில் எத்தனை பேர் செல்லலாம் என்று ரிசர்வேஷன் செய்யப்படும் போது தெரியும். அதேபோல ஓபன் டிக்கெட்டுக்கும் ஒரு செக்லிஸ்ட் மற்றும் லிமிட் வைத்தால் இந்த கூட்டம் கூடுவதை சமாளிக்கலாம்.
அருமையான கருத்து
மக்களிடத்தில் சுய ஒழுக்கம் வராமல் வேறுதுவும் கட்டுப்படுத்தாது
யாராவது மண்டைய போட்டாதான், கவர்மெண்டுக்கு பல்பு எரியுது.. . அட அப்ரெசெண்ட்டுகளா ...
முதலில் ஜனதொகையை கட்டு படுத்துங்க.மற்றதெல்லாம் அப்புறம். ஹி ஹி ஹி
என்ன செய்வது. ஐயோ பாவம். சில நேரங்களில் மக்களின் தராதாரம் மற்றும் அடிமட்ட மக்கள் இப்படித்தான் பயணிக்க வேண்டும் என்ற சூழல் அரசாங்கத்தின் கைகளிலே உள்ளது. ரயில்வே மந்திரி மற்றும் ரயில்வே உயர்மட்ட அதிகாரிகளை பொது வகுப்பு பெட்டியில் மூன்று நாட்களுக்கு தொலைதூர பயண செய்முறை சோதனைக்கு அனுப்பி வைத்தால் ஒருவேளை அடிமட்ட மக்களின் பயண சூழல் சுதரிக்கப்படலாம்
சொல்லாதீங்க. செய்யுங்க. இந்த ரயில்நிலையங்களில் ரயில் வருவது பற்றி சரியான அறிவிப்பு கிடையாது. இருந்தாலும் ஒலியில் கோளாறு. சரியாக கேட்காது. வந்தவுடன் சொல்லுவாராகள். ஒரு பத்து நிமிடம் முன்னதாதா சொல்லக்கூடாதா? எல்லா சாமான்களையும் படிகளில் தூக்கிக்கொண்டு ஏறுவதற்கு எப்படி முடியும். அந்த ப்ளோட்பாரத்தில் நின்றாலும் எந்த பேட்டி எங்கு நிற்கும் என்று யாருக்கும் தெரியாது. நிற்பதோ ஓரிரு நிமிடம். எவ்வளவு முறை அந்த கோடியில் இருந்து இந்த கோடிக்கு ரிசர்வேஷன் பெட்டியைத்தேடி ஓடி இருக்கிறோம்? கூட்டத்தைப்பார்த்து அதிக நேரம் நிறுத்தக்கூடாதோ? இவர்கள் என்னவோ சரியான நேரத்திற்கு வருவதாக நினைப்பு. ரயில்வே பணியாளர்களுக்கு நிறைய பொறுப்பு வேண்டும், பயிற்சி வேண்டும். ஏனோ, தானோ என்று வேலை செய்கிறார்கள். கடுப்பாகத்தான் வருகிறது. எல்லா பெரிய ரயில்நிலையங்களிலும் முதலில் எஸ்குலேட்டர் வையுங்கள்.
ரயில் நிலையங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த ஏ.ஐ - மேலிருந்து கீழ் வரை அறிவற்ற கும்பல். கூட்டத்தை கட்டுப்படுத்த அறிவில்லையாம், இவனுங்க செயற்கை அறிவை புரிஞ்சிக்க போறாங்களாம்.
AI என்ன மந்திரக் கோலா? எல்லாம் வெட்டி வேலை! ஆடத்தெரியாதவள் மேடை கோணல் என்று சொல்லும் கதைதான்! நாடு திருந்தாது! அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் புத்தி கெட்ட கூட்டம்!