உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தீபாவளியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த சதிக்காரர்கள்; டில்லி குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையில் திடுக்

தீபாவளியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த சதிக்காரர்கள்; டில்லி குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையில் திடுக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் கார் குண்டுவெடிப்பை நிகழ்த்திய சதிக்காரர்கள் தீபாவளி பண்டிகைக்கு தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தனர் என விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.டில்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியுள்ளது. 'ஆப்பரேஷன் சிந்துார்' ராணுவ நடவடிக்கைக்கு பழிதீர்க்கும் விதமாக, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள் அனைவரும் நன்கு படித்த டாக்டர்கள் என தெரியவந்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=joovduw2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0போலீசாரின் சந்தேக பார்வை, டாக்டர் போன்ற பெரிய பதவிகளில் இருப்பவர்கள் மீது விழாது என்பதால், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அவர்களை மூளைச்சலவை செய்திருப்பதும் அம்பலமாகி உள்ளது. இதுவரை, 6 கொடூர டாக்டர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். புல்வாமாவைச் சேர்ந்த முஸம்மில் கனி, உ.பி.,யின் லக்னோவைச் சேர்ந்த ஷஹீன் சயீத், ஜம்மு - காஷ்மீரின் குல்காமை சேர்ந்த அதீல், புல்வாமாவைச் சேர்ந்த உமர் நபி, தெலுங்கானாவின் ஹைதராபாதைச் சேர்ந்த அகமது மொஹியுதீன், ஸ்ரீநகரில் செயல்பட்டு வரும் மஹாராஷா ஹரிசிங் மருத்துவமனையில் பணியாற்றி வந்த டாக்டர் தஜமுல் கைது செய்யப்பட்டனர்.முக்கிய குற்றவாளியாக கருதப்படும், புல்வாமாவைச் சேர்ந்த முஸம்மில் இடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முஸம்மிலிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவரது தொலைபேசியை போலீசார் ஆய்வு செய்தனர். விசாரணையின் போது, ​​அடுத்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி தாக்குதல் திட்டம் இருப்பதாகவும், அதன் ஒரு பகுதியாக செங்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதியை நோட்டமிட்டு வந்ததாக கூறினார். தீபாவளிக்கு மக்கள் நெரிசலான இடத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அதை செயல்படுத்த முடியவில்லை என்றும் முஸம்மில் போலீசாரிடம் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Venugopal S
நவ 12, 2025 21:45

அசம்பாவிதம் நடந்த பிறகு காட்டும் வேகத்தையும் ,சுறுசுறுப்பையும் மத்திய பாஜக அரசும் மற்ற மத்திய உளவுத்துறைகளும் மற்ற சமயங்களிலும் காண்பித்தால் இது போன்ற சம்பவங்களைத் தடுக்க முடியும்!


என்னத்த சொல்ல
நவ 12, 2025 18:33

யாரை பொறுப்பேற்க சொல்லலாம்


theruvasagan
நவ 12, 2025 13:18

இந்த நாசகார கூட்டத்தின் வாக்குரிமையை அநியாயமாக பறிக்க தேர்தல் ஆணையம் முயலுவதாக உள்ளூர் தேசத்துரோகிகள் கூப்பாடு போடுகிறார்கள். மக்களே விழித்துக் கொள்ளுங்கள். கண்ணுக்கு தெரிந்தோ தெரியாமலோ இருக்கும் விரோதிகளைவிட நம் கண் முன்னேயே நடமாடும் நம்மிடையே இருக்கும் துரோகிகள் ஆபத்தானவர்கள்.


திகழ்ஓவியன்
நவ 12, 2025 13:15

திட்டமே ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் மக்களை CONVINCE பண்ண பார்க்கணும் இல்லை CONFUSE பண்ணி விடணும் இது தான்


Raman
நவ 12, 2025 15:23

Are you an Indian, ? Your comments did.not reflect that...be a true indian or else go to pak


Thiagarajan
நவ 12, 2025 12:44

140 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் உன்னை மாதிரி ஆட்கள் இருக்கும் வரை உளவுத்துறையால் ஒன்றும் செய்ய முடியாது


திகழ்ஓவியன்
நவ 12, 2025 12:34

இந்த செயல் செய்த கூட்டம் கோழை கூட்டம் என்றும் இதை ஆதரிக்க கூடாது இதை இனி செய்யவே யோசிக்கணும் அப்படி தண்டனை உள்ள சட்டம் கொண்டு வரணும்


kjpkh
நவ 12, 2025 14:09

அப்படி ஒரு சட்டம் கொண்டு வந்தாலும் அதை எதிர்க்க ஒரு கூட்டம் இந்தியாவில் ஓட்டுக்காக இருந்து கொண்டு தான் இருக்கிறது.


Vasan
நவ 12, 2025 15:19

பாருங்கள், அதற்குள்ளாகவே அந்த சட்டத்தை எதிர்க்க ஒருவர் கிளம்பி விட்டார்.


karthik
நவ 12, 2025 12:23

இனிமேல் எந்த பதவியில் பொறுப்பில் இருந்தாலும் ரகசிய கண்கணிப்பு என்பது அவசியம்


திகழ்ஓவியன்
நவ 12, 2025 12:16

இன்னும் புது புது ஸ்டோரி எல்லாம் வரும், ஒரு படமே எடுக்கலாம், ஏண் உளவு துறை என்ன செய்தது அதற்கு பதில் சொல்ல சொன்னால் புது புது கதை எல்லாம் சொல்லி கொண்டு இதை மறக்க மறைக்க பார்க்கிறார்கள், மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்


Arul
நவ 12, 2025 12:58

என் நீதான் சொல்லேன் உன்னோட நண்பர்கள் தேனே யார் இவர்கள் என்று


krishna
நவ 12, 2025 13:27

INDHA MANNIN SAABA KEDU.


kjpkh
நவ 12, 2025 14:10

மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.


சத்யநாராயணன்
நவ 12, 2025 15:05

தேசத் துரோகிகளை இவ்வளவு வெளிப்படையாக ஆதரித்துக் கொண்டிருக்கிறாயே இப்படி பிழைப்பதற்கு தான் வெட்கமாக இல்லையா


Raman
நவ 12, 2025 15:27

Your comment looks like a non Indian comment...better go to Pakistan


duruvasar
நவ 12, 2025 12:12

இவர்களுடைய திட்டங்களே பஹல்காமில் நதத்தியது போல் மத கலவரத்தை தூண்டுவதாகவே இருக்கிறது. கோவையிலும் தீபாவளி போதே நடத்த திட்டம் தீட்டியிருந்தார்கள். ரம்ஜான் போதோ, கிறிஸ்துமஸ் போதோ நடத்த திட்டம் போடதாக இதுவரை எந்த தகவலும் வரவில்லை. அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்குதல் உட்பட நாம் தான் ஒற்றுமையுடன் இதை முறியடிக்கவேண்டும்.


ponssasi
நவ 12, 2025 12:04

தீவிரவாதிகள் மற்றும் அவர்கள் தொடர்புடையவர்கள் அனைவரது ஓட்டுரிமை மற்றும் இந்திய குடிமகன் எனும் தகுதியை பறிக்கவேண்டும். அப்போதுதான் சில அரசியல் இயக்கங்கள் ஓட்டுக்காக இவர்களை ஆதரிப்பதை கைவிடுவார்கள். இவர்களுக்கு ஒட்டு மற்றும் இல்லையென்றால் இன்று நான்தான் சிறுபான்மையினர் காவலன் என கூறுபவர்கள் முகத்திரை சிறுபான்மையினர்க்கு தெரியவரும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை