டில்லி - சீனா நேரடி விமான சேவை துவக்கம்
புதுடில்லி: கொரோனா தொற்று மற்றும் எல்லைப் பிரச் னை காரணமாக, இந்தியா - சீனா இடையிலான விமான சேவை ரத்து செய்யப்பட்டது. தற்போது இரு நாடுகள் இடையே உறவு சீரடைந்து வருவதை அடுத்து, நேரடி விமான சேவை மீண்டும் து வங்கி உள்ளது . அந்தவகையில், கடந்த மாதம், 26ல் மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவில் இருந்து சீனாவின் தொழில் நகரமான குவாங்சோவுக்கு நேரடி விமான சேவை துவக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியா க க டந்த, 9ல், 'சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்' அந்நாட்டின் ஷாங்கா யில் இருந்து டில்லிக்கு நேரடி விமான சே வையை துவக்கியது. இந்நிலையில், 'இண்டிகோ' நிறுவனம், டில்லி - சீனாவின் குவாங்சோ நகருக்கு நவ., 10 முதல், 'ஏ320 நியோ' என்ற இடைநில்லா நேரடி விமான சேவையை துவக்கியுள்ளது. டில்லியில் இரவு, 9:45 மணிக்கு புறப்படும் இந்த விமானம் மறுநாள் அதிகாலை 4:50 மணிக்கு குவாங் சோவை அடையும்.