வாசகர்கள் கருத்துகள் ( 8 )
நோய் நாடி நோய் முதல் நாடி என்ற தமிழ் பழமொழுக்கு ஏற்ப வேறுங்கும் வராத அந்த மாசு டெல்லிக்கு மட்டும் எப்படி வருதுன்னு எங்கிருந்து வருதுன்னு கொஞ்சம் யோசிச்சாங்கன்னா பிரச்சனை எப்பவோ தீர்த்திருக்கும். எப்போ வோட்டு அரசியல் உள்ள வந்ததோ, அன்னைக்கே நல்ல விஷயங்கள் நடப்பது நின்னுடுச்சு. இதுல எல்லா கட்சிகளும் ஒரே மாதிரிதான்
பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் கோதுமை விவசாய கழிவை வயலில் நெருப்பூட்டுவதே அதற்கு காரணம். விவசாயி என்ற பெயரில் பல நூறு ஏக்கர்கள் உரிமையுள்ள பணக்காரர்கள் செய்யும் வேலையை அரசாங்கமோ, நீதிமன்றோமோ அடக்க தைரியம் இல்லாத நிலைமை உள்ளது. AAP கட்சி டெல்லி பிஜேபி அரசை, அரசியல் பழிவாங்கும் நோக்கில் இதை பஞ்சாபில் செய்கிறது. இதனால் அப்பாவி மக்களின் உயிர் வாழும் காலம் 20 ஆண்டுகளை வரை டெல்லியில் குறையலாம்.
தேவையான நிதி ஒரு பொருட்டே அல்ல .... காற்று மாசைக் குறைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல ..... பழைய வாகனங்களைத் தடை செய்வது, நச்சுப்புகையை, ஆபத்தான வேதியியல் நச்சுக்களை, வாயுக்களை வெளியிடும் தொழிற்சாலைகளை மூடுவது போன்ற அம்சங்களும் கவனிக்கப்பட வேண்டும் .செய்தால் வேலைவாய்ப்பு பறிபோகும் .... ஆகவே சொல்வது எளிது ..... செய்வது கடினம் ....
இதற்கு தேவை இல்லாத காரணங்களை சொல்வதை விட்டு தேவையான நடவடிக்கையை மத்திய மாநில அரசுகள் உடனடியாக எடுக்க வேண்டும்
காற்று மாசு இன்றைய இயந்திர உலகின் கட்டாயம். இப்போதுள்ள இயற்கை நிகழ்வு. திரும்ப முடியாது. டோக்கியோ நியூயார்க் peaking போன்ற நகரங்களில் பயங்கர காற்று மாசு. ஒன்றும் செய்ய முடியவில்லை. வாழ பழகி விட்டார்கள். வளர்ச்சி க்கு கொடுக்கும் விலை.
நான்கு நாட்கள் பட்டாசு வெடித்ததற்கே காற்று இந்த அளவுக்கு மாசு அடைந்து இருக்கிறது என்றால் இஸ்ரேல் - ஹமாஸ் போரிலும், ரஷ்யா - உக்ரைன் போரிலும் எவ்வளவு மாசு ஏற்பட்டிருக்கும் / ஏற்பட்டுக் கொண்டிருக்கும். உண்மையிலேயே மாசு பற்றிய அக்கறை இருந்தால் ஐரோப்பிய நாடுகள் சண்டையை உடனடியாக நிறுத்தலாமே. எல்லா சட்டமும் இந்தியாவுக்கு மட்டும்தானா??¿?
ரஷிய உக்ரைன் போர், காசா குண்டுவீச்சு இதனால் மாசு தீங்கு, ஐரோப்பாவை விட அமெரிக்க கனடா நாடுகளுக்கு தான் பாதிப்பு, அண்மையில் பணிக்கட்டி கனடாவில் கொட்டும்போது சாம்பல் நிறத்தில் கொட்டியிருக்கு, குண்டு வீச்சு புகை மண்டலம் மேகங்களில் படர்ந்து குளிர்காலத்தில் பனிக்கட்டியாக விழுந்ததுதான் காரணமாம், அடுத்து டிரம்ப் ஐயாவின் மாளிகையில் விழுந்தால்தான் எதாவது பண்ணுவார்.
29 கோடி என்பது ஓரிரு வாகனங்களுக்கு கூட போதாது. சீனா போல பல காற்று வடிகட்டிகளை நிறுவ வேண்டும். நிறைய மரங்களை நட வேண்டும். மரங்கள் நீண்ட கால அடிப்படையில் நல்ல பலன்களை கொடுக்கும்.