உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நவ., 9 முதல் டில்லி - சீனாவுக்கு மீண்டும் நேரடி விமான சேவை

நவ., 9 முதல் டில்லி - சீனாவுக்கு மீண்டும் நேரடி விமான சேவை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'தலைநகர் டில்லி - சீனாவின் ஷாங்காய் இடையே அடுத்த மாதம் 9ம் தேதி முதல் மீண்டும் நேரடி விமான சேவை துவக்கப்படும்' என, சீனாவின் 'ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்' நிறுவனம் அறிவித்துள்ளது. நம் நாட்டுக்கும் அண்டை நாடான சீனாவுக்கும் இடையே கடந்த 2002 முதல் நேரடி விமான போக்குவரத்து சேவையை, சீன 'ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்' நிறுவனம் அளித்து வந்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த 2020ல் இரு நாடுகள் இடையேயான விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து லடாக் எல்லை பிரச்னையால் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், 'இந்தியா - சீனா இடையே இந்த மாத இறுதியில் மீண்டும் நேரடி விமான சேவை துவங்கும்' என, கடந்த 2ல் நம் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்திருந்தது. அதன்படி, வரும் 26 முதல், மேற்கு வங்கத்தின் கொல்கட்டா மற்றும் சீனாவின் குவாங்ஷோ இடையே நேரடி விமான சேவையை, 'இண்டிகோ' விமான நிறுவனம் இயக்க உள்ளது. இதை தொடர்ந்து, சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் நவ., 9 முதல், ஷாங்காய் - டில்லி இடையே விமான சேவையை துவக்க உள்ளது. இந்த சேவை புதன், சனி, ஞாயிறு என வாரத்தில் மூன்று நாட்கள் கிடைக்கும். 'இதன் மூலம் இரு நாடுகள் இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக உறவு விரிவடையும்' என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

KOVAIKARAN
அக் 24, 2025 07:20

மிகவும் நல்ல முயற்சி, மாற்றம். இந்தியா - சீனா இடையில் வலுவான உறவுகள் தொடரட்டும். இரண்டு நாடுகளும் சேர்ந்து அமெரிக்காவின் டிரம்ப் அவர்களின் வரிவிதிக்கும் தான்தோன்றித்தனமான போக்கினை முறியடிக்கட்டும். பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படவுள்ள அனைத்து நாடுகளும் நிம்மதியாக உலக வர்த்தகம் செய்யட்டும்.


Ramesh Sargam
அக் 24, 2025 06:47

டிரம்புக்கு தெரிய வந்தால், மீண்டும் அந்த மனிதர் அதிக கோபம் அடைந்து இரண்டு நாடுகள் மீதும் மேலும் அதிக வரி விதிப்பார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை