உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஹல்காமுக்கு சுற்றுலா வருவதை நிறுத்திவிடாதீங்க: கரண் சிங் வேண்டுகோள்

பஹல்காமுக்கு சுற்றுலா வருவதை நிறுத்திவிடாதீங்க: கரண் சிங் வேண்டுகோள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: பயங்கரவாத தாக்குதல் நடந்த பஹல்காமுக்கு சுற்றுலா வருவதை நிறுத்தி விடாதீர்கள் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் கவர்னர் கரண் சிங் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, முன்னாள் கவர்னரும், ஜம்மு காஷ்மீர் மன்னர் பரம்பரையை சேர்ந்தவருமான கரண் சிங் கூறியதாவது: பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மிகவும் துயரமானது. அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட கொடூரம் அனைவரையும், குறிப்பாக காஷ்மீர் மக்களை மிகவும் வருத்தப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு, 3 கோடி மக்கள் பஹல்காமிற்கு சுற்றுலா வருவார்கள் என்று நாங்கள் நம்பினோம். ஆனால் இந்தத் தாக்குதல் அச்சத்தை உருவாக்கி உள்ளது. அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்ற நம்பிக்கையை சீர்குலைத்துள்ளது. பஹல்காமுக்கு சுற்றுலா வருவதை நிறுத்தி விடாதீர்கள். பஹல்காமிற்கு சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வருமாறு அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். மக்கள் எவ்வளவு பயப்படுகிறார்களோ, அவ்வளவு அதிகமாக பயங்கரவாதிகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி விடும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Keshavan.J
மே 04, 2025 22:00

கரண் சிங் எல்லாம் இடத்திலும் துப்பாக்கியோட பாதுகாப்புக்கு நிற்பார் . எல்லோரும் தைரியமாக லைப் இன்சூரன்ஸ் எடுத்துட்டு போங்க.


Ramesh Babu
மே 04, 2025 19:49

உங்கள் முன்னோர்கள் செய்த தாமத முடிவுக்கு இத்தனை விலை கொடுக்க பட வேண்டி வருகிறது. எல்லாம் கால கொடுமை சார்.


பெரிய ராசு
மே 04, 2025 17:47

எனதருமை மக்களே சொந்தங்களே நம் தென்னிந்தியாவில் இல்லாத ஆன்மீக சுற்றுலா தளமா திருச்சி தஞ்சை மதுரை திருநெல்வேலி தென்காசி ராமேஸ்வரம் குருவாயூர் ஊட்டி என்று பரம்பொருள் நீக்கமற நிறைந்திருக்கும் தளத்திற்கு வாருங்கள் மூர்க்கம் இருக்கும் இடத்திற்கு போகாதீர்கள் ...வாருங்கள் நம் இன்னுயிரை பாதுகாத்து கொள்ளுங்கள்


VSMani
மே 04, 2025 17:20

உயிருக்கு உத்தரவாதம் இல்லாத இடத்திற்கு மக்கள் எப்படி சுற்றுலா வருவார்கள்?


ராமகிருஷ்ணன்
மே 04, 2025 17:10

காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள், உதவும் அதி தீவிரவாதிகள் எல்லாரையும் அழித்து விட்டு அழைக்கவும்.


K V Ramadoss
மே 04, 2025 16:56

காஷ்மீர் அரசு இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு, அதை தீவிரப்படுத்த மக்களையும் ஈடுபடுத்தி, அவர்களுக்கு இதனாலேற்படும் நன்மைகளையும் தெரியப்படுத்தி, அவர்கள் வேலை வாய்ப்பையும் மேன்மை படுத்தி, பாதுகாப்பையும் பலப்படுத்தி, நல்ல திட்டங்களையும் திட்டி, அமல்படுத்தி, உள்ளூர் மக்களுக்கும் , வரும் சுற்றுலா பயணிகளுக்கும் நம்பிக்கை வளரும்படி செயல் படுத்தினால், இது கட்டாயமாக முடியும். உலகின் தலை இருந்த சுற்றுலா தளமாக பஹல்காம் அமையும்.


Ayyasamy
மே 04, 2025 15:57

No way man.for sure it will be scary to come for next few months. Government can increase safety and then advertise tourist then one can consider to come.


K V Ramadoss
மே 04, 2025 16:58

Be positive. Nothing is impossible , if Kashmir Govt. sincerely tries with the help of Central Govt.


புதிய வீடியோ