உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தண்டவாளத்தில் கார் ஓட்டிய குடிமகன்: ஊழியர்கள் உஷாரால் விபத்து தவிர்ப்பு

தண்டவாளத்தில் கார் ஓட்டிய குடிமகன்: ஊழியர்கள் உஷாரால் விபத்து தவிர்ப்பு

அம்ரோஹா; உத்தர பிரதேசத்தில், சாலை என நினைத்து, குடிபோதையில் ரயில் தண்டவாளத்தில் காரை ஓட்டி வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. ரயில்வே ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டதால், மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.உ.பி.,யின் அம்ரோஹா மாவட்டம், பிம்புர் ரயில்வே கேட்டை, கடந்த 7ம் தேதி அதிகாலை, சொகுசு கார் ஒன்று கடந்தது. காரை ஆண் ஒருவர் ஓட்டி வந்தார். அருகில் பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். மேலும் சிலர் அந்த காரில் இருந்தனர். அவர்கள் அனைவரும் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அதிக வேகம்

ரயில்வே கேட்டை கடந்த கார், சாலையில் ஏறுவதற்கு பதிலாக ரயில் தண்டவாளத்திலேயே 50 மீட்டர் பயணித்தது. அதிக வேகம் காரணமாக, கார் வழியில் நின்றது. தண்டவாளத்தில் கார் நிற்பதை பார்த்து பதறிப்போன ரயில்வே ஊழியர்கள், உடனடியாக ஓடிச்சென்று காரில் இருந்தவர்களை எச்சரித்தனர். காரை ஓட்டி வந்தவர் குடிபோதையில் இருப்பது தெரிந்தது.அப்போது தான் கார் தண்டவாளத்தில் நிற்பதை டிரைவர் உணர்ந்தார். காரில் இருந்தவர்கள் பதறியடித்து இறங்கி ஓடினர். ரயில் தண்டவாளத்தில் கார் சிக்கிக் கொண்டது. உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, டில்லியில் இருந்து வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் வழியில் நிறுத்தப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் போராடி காரை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். 35 நிமிடங்களுக்கு பின் அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கியது.

வழக்குப்பதிவு

ரயில் தண்டவாளத்தில் கார் நிற்பதை சரியான நேரத்தில் ரயில்வே ஊழியர்கள் பார்த்ததால், மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. காரை ஓட்டி வந்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Columbus
பிப் 10, 2025 10:54

Reminds me of James Bond film "Octopussy"


அப்பாவி
பிப் 10, 2025 08:42

கூகுள் மேப்பை பாத்து சரியாத்தான் ஓட்டியிருக்காரு.


Kasimani Baskaran
பிப் 10, 2025 05:29

எதற்கும் மர்ம நபர் புது உத்தி மூலம் நாசவேலை செய்யமுயலவில்லை என்பதை உறுதி செய்து கொள்வது நல்லது.


J.V. Iyer
பிப் 10, 2025 04:52

நல்லவேளை தமிழகமாம் இருளகத்தில் உள்ள மதுப்பிரியர்களுக்கு கார் ஓட்டும் அளவுக்கு மாடல் அரசு வசதி செய்து கொடுக்கவில்லை. தப்பித்தார்கள். நன்றி மாடல் அரசே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை