உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விஜய் துர்க் ஆனது வில்லியம் கோட்டை: இந்திய ராணுவத்தின் கிழக்கு பிராந்திய தலைமையகத்தின் பெயர் மாற்றம்

விஜய் துர்க் ஆனது வில்லியம் கோட்டை: இந்திய ராணுவத்தின் கிழக்கு பிராந்திய தலைமையகத்தின் பெயர் மாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: காலனித்துவ மரபுக்கு முடிவு கட்டும் வகையில், கிழக்கு பிராந்திய ராணுவ தலைமையகத்தின் பெயர் விஜய் துர்க் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.இந்திய ராணுவத்தின் கிழக்கு பிராந்தியத்தின் தலைமையகம் மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் உள்ளது. தலைமையகத்திற்கு வில்லியம் கோட்டை என பெயர் சூட்டப்பட்டு இருந்தது. இந்த கோட்டையானது கடந்த 1781ம் ஆண்டு கிழக்கு இந்திய கம்பெனி ஆட்சிக் காலத்தில் ஹூக்ளி நதிக்கரையில் கட்டப்பட்டது. 170 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த தலைமையகத்தில், பல கட்டடங்கள் உள்ளன. இங்கு ஆறு நுழைவு வாயில்கள் உள்ளன. அவற்றிற்கு சவுரிங்கி, பிளாசி, கல்கத்தா, வாட்டர் கேட், புனித ஜார்ஜ் மற்றும் டிரசரி கேட் என பெயர் சூட்டப்பட்டு இருந்தது. 1962ம் ஆண்டு இந்தியா சீனா இடையே ஏற்பட்ட போரைத் தொடர்ந்து, 1963ம் ஆண்டு இந்த கோட்டை, இந்திய ராணுவத்தின் தலைமையகமாக மாறியது. அதற்கு முன்னர் உ.பி., மாநிலம் லக்னோவில் தலைமையகம் செயல்பட்டு வந்தது.இந்நிலையில் காலனித்துவ மரபிற்கு முடிவு கட்டும் வகையில், கோல்கட்டாவில் உள்ள கிழக்கு பிராந்திய தலைமைகமான வில்லியம் கோட்டை என்ற பெயரை விஜய் துர்க் பெயர் சூட்டப்பட்டு உள்ளதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது.மேலும், இங்குள்ள புனித ஜார்ஜ் கேட் பெயரையும் சிவாஜி கேட் எனவும், கிச்னர் ஹவுசை மானேக்சா ஹவுஸ் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. கோட்டை உள்ளே இருந்த ரசல் பிளாக்கிற்கு பக்கா ஜதின் பிளாக் ( பக்கா ஜதின் என்று அழைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் ஜதிந்திரநாத் முகர்ஜி நினைவாக)எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

J.V. Iyer
பிப் 06, 2025 03:05

இருளகத்திலும் பெயர்மாற்றம் செய்யும் நேரம் நெருங்கிவிட்டது. முதலில் வழிபாட்டு தலங்களுக்கு எதிரே உள்ள தேவையற்ற வெங்காய நாற்றங்களை அகற்றவேண்டும்.


தமிழ்வேள்
பிப் 05, 2025 22:18

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை, கடலூர் செயின்ட் டேவிட் கோட்டைகளின் பெயரையும் மாற்ற வேண்டும்.... பரங்கி மலை தாமஸ் மலை என்ற பெயரை பிருங்கி மலை எனவும் சாந்தோம் ஞான சம்பந்தர் புரம் எனவும் மாற்றப்படல் வேண்டும்


SS
பிப் 05, 2025 21:41

இந்து என்ற வார்த்தையும் வெள்ளைக்காரன் கொடுத்ததுதான்..........


Ranjani
பிப் 05, 2025 21:40

வாழ்த்துக்கள்


Karthik
பிப் 05, 2025 21:05

அப்படியே மேற்கு வங்க முதல்வரையும் மாத்திடுங்கய்யா.. அப்பதான் நாடு உருப்படும்.


ant
பிப் 05, 2025 20:28

அப்படியே INRஐ USDன்னும் USDஐ INRன்னும் மாத்துங்க ஐயா.


Indhuindian
பிப் 05, 2025 19:30

A reader has opined that the matters relating to muslim rule etal should be removed. That would be incorrect. Generations should know how India was looted and Hindus subjected to undescribable torture by the muslim invasion. So also colonisation by the europeans in general and in particular the British. Indians should take pride of their past legacies and try to go back to the past glory. The history book of students should in particular mention how the British shipped the food supplies for its armies leaving millions of Indians to die due to famine.


Indhuindian
பிப் 05, 2025 19:17

one more great move to get of slave mentality and glorifying colonisation and associated brutalities and swindle


Laddoo
பிப் 05, 2025 17:58

பெரியாரிஸ்ட் அர்பன் நக்சல் கான் கிராஸ்களுக்கு இச்செய்தி கேட்டவுடன் பின்னாலே பிச்சுக்குமே


Kundalakesi
பிப் 05, 2025 17:52

அப்படியே முகலாய பெயர்கள் மற்றும் சரித்திரங்களையும் பாட புத்தகங்களிலிருந்து அகற்ற வேண்டும்


MUTHU
பிப் 05, 2025 20:26

இந்திய சரித்திரம் என்பது சுமார் எழுநூறு ஆண்டுகள் சுல்தானியர்களும் முகலாயர்களும் பிந்தைய முன்னூறு ஆண்டுகள் ஆங்கிலேயர்களும் அவர்களின் தத்தம் moral value படியே எழுதப்பட்டது. தாங்கள் செய்தது எல்லாம் சரி என்பதாகவே அது இருக்கும். காங்கிரஸ் காலத்தில் அவை பெரும்பான்மை மக்களிடம் மனக்கசப்பு உண்டுபண்ணும் என்பதால் மறைக்கப்பட்டது.


புதிய வீடியோ