வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ரொம்ப சந்தோஷம் எஜமான் நீதியை காட்டிடீங்க. பாவம் கர்நாடக முதலமைச்சர். இ டி ரொம்ப படுத்துறாங்க. ஆனா எஜமான் விசாரணைக்கு வரச்சொன்னா தப்புங்களா?
ஒரு புகாரை விசாரிக்க தடை என்றால் இனி எவரும் புகார் தரக் கூடாது என்று நீதி மன்றம் நினைக்கிறதா? இந்த அளவு கோல் சாமானிய மக்களுக்கு பொருந்துமா? இந்த புகாரில் உண்மை இல்லை என்றால், அமலாக்க துறை மற்றும் புகார் கொடுத்தவர்கள் மேல் நீதி மன்றம் தானாகவே முன்வந்து உரிய தண்டனை கொடுக்கட்டும். குற்றம் சாட்டப் பட்டவர் மீது விசாரணைக்கு தடை விதிப்பது நேர்மையான நீதி அல்ல. .அதிகார வர்கத்திற்கு நீதி மன்றம் அடி பணிவதேன்.
விசாரணைக்குத்தானே ஓலை அனுப்பி இருக்கிறார்கள். விசாரணையில் கலந்து கொண்டு பதில் சொல்ல வேண்டியதுதானே. எதற்கு நீதி மன்றம் தடை விதிக்க வேண்டும் ? அமலாக்கத் துறை எழுப்பும் வினாக்களுக்கு உரிய பதில் அளித்தால் விஷயம் முடிந்து விடும். தாமதத்திற்கு காரணம் நீதி மன்றங்கள் தான்.
நமது நீதித்துறை இப்போது வெகுவாக மாறிவிட்டது. முன்னர் நிரபராதி யாரும் தண்டிக்கப்பட்டுவிட கூடாது என்று இருந்தது. ஆனால் இப்போது குற்றவாளிகள் யாரும் தண்டிக்கப்பட்டு விட கூடாது என்பதில் மிக கவனமாக உள்ளது. அதுவும் பணம் பதவி இருந்தால் அவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்பட்டு விட கூடாது என்பதில் மிக கவனமாக உள்ளது. அதனாலேயே இவர்களுக்கு எல்லாம் ஜாமீன் மற்றும் இவர்கள் மீது உள்ள வழக்குகளுக்கு தடை எல்லாம் கொடுக்கிறார்கள்.