உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்களின் வாழ்க்கை, வர்த்தகத்தை எளிதாக்கும் முயற்சி; ஜெய்சங்கர் நம்பிக்கை

மக்களின் வாழ்க்கை, வர்த்தகத்தை எளிதாக்கும் முயற்சி; ஜெய்சங்கர் நம்பிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கை மக்களின் வாழ்க்கை மற்றும் வர்த்தகத்தை எளிதாக்கும் முயற்சி என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டில்லியில் நேற்று 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஜிஎஸ்டி அடுக்குகளை, நான்கிலிருந்து இரண்டாக குறைத்து, செப்., 22ம் முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சாமானிய மக்களின் அன்றாட பயன்பாட்டு பொருட்களின் விலைக்கான வரி விகிதம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், உப்பு முதல் கார் வரை பெரும்பாலான பொருட்களின் விலை குறையவுள்ளது. அதேபோல, விவசாயிகளும், விவசாயத் துறையும் பயன்பெறுவர். நாட்டின் பொருளாதாரத்தில் சுகாதாரத்துக்கு முன்னுரிமை வழங்கும் விதமாக, காப்பீடு மற்றும் உயிர் காக்கும் மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அந்த வகையில், ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில்; பிரதமர் மோடியின் சுதந்திர தின அறிவிப்பை நிறைவேற்றும் வகையில், அடுத்த தலைமுறை ஜிஎஸ்டியை ஏற்கும் ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த முடிவு, இந்திய மக்களின் வாழ்க்கை மற்றும் வர்த்தகத்தை செய்வதை எளிதாக்குவதற்கான அரசின் முயற்சியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.இந்த வரலாற்று சாதனைக்கு பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை வாழ்த்துகிறேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

A.Gomathinayagam
செப் 04, 2025 14:05

மக்கள் இதுவரை துன்பங்களுடன் நிம்மதியற்று தான் வாழ்ந்தார்கள் ,வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் என்பதெற்க்கு ஒப்புதல் வாக்குமூலம்


P. SRINIVASAN
செப் 04, 2025 09:39

அப்போ 10 வருஷம் கொள்ள அடிச்சது ஒதிக்கிறாங்க


vivek
செப் 04, 2025 11:37

நாலு வருஷம் திமுக அடிச்சது எவளோ


வரிக்குதிரை
செப் 04, 2025 09:31

ஜெர்மனியில் என்ன வரி போடறாங்க கேட்டீங்களா ஆப்பீசர்?


அப்பாவி
செப் 04, 2025 09:30

அப்போ இத்தனை நாள் இவிங்களும் குழம்பி, மக்களையும் குழப்பி, பன், பட்டர், ஜாம் வரி போட்டுக்கிட்டிருந்தாங்க.


SANKAR
செப் 04, 2025 17:02

sir you missed THREE rate taxation for popcorn!


ஜெய்ஹிந்த்புரம்
செப் 04, 2025 08:51

நிர்மலாவை வீட்டுக்கு அனுப்பி விட்டு ஜெய்சங்கர் வரி அமைச்சர் ஆகப் போகிறார?


vivek
செப் 04, 2025 09:58

திமுகவை வீட்டுக்கு அனுப்பி உன் இருநூறுக்கு ஆப்பு வைக்க போறோம்


Rameshmoorthy
செப் 04, 2025 08:45

Government should monitor that the benefits are passed onto to public and ensure no anti profiteering by vendors , knowing this already coffee and tea prices are increased in TN


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை