உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹாராஷ்டிராவில் தொழிற்சாலையில் தீ: பெண்கள், குழந்தை உட்பட 8 பேர் உயிரிழப்பு

மஹாராஷ்டிராவில் தொழிற்சாலையில் தீ: பெண்கள், குழந்தை உட்பட 8 பேர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிராவில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 பெண்கள், ஒரு குழந்தை உட்பட எட்டு பேர் உயிரிழந்தனர்.மஹாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தின் அகால்கோட் சாலையில் ஜவுளி தொழிற்சாலை ஒன்று உள்ளது. இன்று ( மே 18) அதிகாலை 3:45 மணிக்கு இந்த தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டது. இதற்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.இந்த விபத்தில் தொழிற்சாலையின் உரிமையாளர் ஹாஜி உஸ்மான் மன்சுரி மற்றும் அவரது 3 குடும்ப உறுப்பினர்கள் உயிரிழந்தனர். அதில் 1.5 வயது குழந்தையும் அடக்கம். மேலும் 3 பெண்கள் உட்பட 4 தொழிலாளர்களும் பலியாகினர். தகவல் அறிந்து வந்த மீட்புப்படையினர், சுமார் 5 முதல் 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kulandai kannan
மே 18, 2025 21:55

உலகில் விபத்துகளின் தலைநகரம் இந்தியாதான். இதைப்பற்றி யாருமே கவலைப்படாதது ஆச்சரிமளிக்கிறது.


முக்கிய வீடியோ