உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.100 லஞ்சம் வாங்கியதாக வழக்கு: 39 ஆண்டுக்கு பின் முதியவர் விடுதலை

ரூ.100 லஞ்சம் வாங்கியதாக வழக்கு: 39 ஆண்டுக்கு பின் முதியவர் விடுதலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிலாஸ்பூர்: நிலுவைத் தொகை வழங்க 100 ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் இருந்து, மத்திய பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் முன்னாள் உதவியாளரை, சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் 39 ஆண்டுகளுக்கு பின் விடுவித்து உள்ளது. கடந்த 1986ல் மத்திய பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகத்தில் காசாளராக ஜகேஷ்வர் பிரசாத் அவாதியா பணியாற்றினார். நிலுவைத் தொகை வழங்குவதற்காக அவர் தன்னிடம் 100 ரூபாய் லஞ்சம் பெற்றதாக, அசோக் குமார் வர்மா என்பவர் லோக் ஆயுக்தாவில் புகார் அளித்தார். அப்போதைய மத்திய பிரதேசத்தில் இருந்த ராய்ப்பூரில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, 2000ம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் இருந்து சத்தீஸ்கர் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சத்தீஸ்கரில் அமைந்துள்ள ராய்ப்பூர் விசாரணை நீதிமன்றம், 2004ல் ஜகேஷ்வருக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் 1,000 ரூபாய் அபராதம் விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் ஜகேஷ்வர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஜகேஷ்வர் லஞ்சம் வாங்கியது தொடர்பாக அரசு தரப்பில் நிரூபிக்க தவறியதை அடுத்து, அவரை விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்; விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்தார். தற்போது 83 வயதான ஜகேஷ்வர், கடந்த 39 ஆண்டுகளாக போராடி, இந்த வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ள அவர், ''தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்,'' என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Subash BV
செப் 21, 2025 17:17

SHAMELESS INDIAN JUDICIAL SYSTEM. GIFTED BY OUR FAMOUS CONSTITUTION WHICH WAS CREATED BY A GENTLEMEN CALLED AMBEDKAR. CELEBRATE. PUT THE BHARAT FIRST.


krishna
செப் 21, 2025 12:08

SUPER NEEDHI MANDRANGAL.IDHARKKU TORTOISE PEYARIL ORU ULAGA VIRUDHU KODUKKALAAM.


Anantharaman Srinivasan
செப் 21, 2025 12:06

அன்று 100ரூ லஞ்சம் வாங்கியது குற்றம். இன்று ஒரு கோடி வாங்கினாலும் ஜாமீன்.


நிக்கோல்தாம்சன்
செப் 21, 2025 09:45

இந்த கட்டுரை படிக்கையிலேயே தென்காசி நிகழ்வு காட்டப்படுகிறது , திராவிட மாடலில் பணம் காய்ச்சி மரங்களை என்னவென்று சொல்ல


Kalyanaraman
செப் 21, 2025 09:23

இன்று நீதிபதிகளே லஞ்சம் வாங்குகிறார்கள். இவர்களுக்கு என்ன தகுதி இருக்கு லஞ்ச வழக்கை விசாரிக்க? நீதிபதி வீட்டில் கட்டு கட்டாக பணம் எரிந்த வழக்கு இன்னும் மர்மமாக நிலுவையில் உள்ளது. அது எந்த நிலையில் உள்ளது என்று யாருக்குமே தெரியவில்லை.


Kalyanaraman
செப் 21, 2025 09:20

பாஸ்போர்ட் வழங்க தனியாரை ஒப்பந்தம் செய்த பிறகு பாஸ்போர்ட் வழங்குதல் மிக வேகமாக நடைபெறுவதை யாராலும் மறுக்க முடியாது. அது போலவே சிறு சிறு வழக்குகளை தனியார் ஒப்பந்தம் ஏற்படுத்தி அதன் மூலம் தீர்வு கண்டால் 30-40 வருட வழக்குகள் எல்லாம் 2 - 3 வருடங்களில் முடிந்துவிடும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 21, 2025 08:12

இறுதி மூச்சு வரைக்கும் சட்டம் தொட்டுப்பார்க்க முடியல .....


D Natarajan
செப் 21, 2025 06:36

உலகத்திலேயே மிக மோசமானது இந்தியாவின் நீதித்துறை. காரணம் வக்கீல்களும், நீதிபதிகளும் தான். கவர்னருக்கு காலக்கெடு விதித்தது போல, வழக்குகளின் தன்மையை பொறுத்து காலக் கெடு விதிக்க வேண்டும். பிஜேபி அரசு விழிக்குமா,


அப்பாவி
செப் 21, 2025 06:32

39 வருஷம் முன்னாடி என் சம்பளமே 500, 600 தான் இருக்கும். பெரிய எமவுண்ட்டாதான் வாங்கியிருக்காரு. இந்த வழக்கை கெடப்பில் போட்டு நீதிமன்றம், பியூன், டவாலி, எழுத்தர் எல்லோரும் தண்டத்துக்கு சம்பளம் வாங்கிட்டிருந்தாங்க..


அப்பாவி
செப் 21, 2025 06:28

நீதிபதிகளுக்கு பாரத ரத்னா விருது குடுக்கலாம்.


சமீபத்திய செய்தி