உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் குறித்து ராகுலின் கருத்தால் காங்கிரஸ் பின்னடைவை சந்திக்கிறது; கிரண் ரிஜிஜூ

பிரதமர் குறித்து ராகுலின் கருத்தால் காங்கிரஸ் பின்னடைவை சந்திக்கிறது; கிரண் ரிஜிஜூ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் மோடி குறித்து ராகுலின் கருத்தால் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்து வருகிறது என பார்லி விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.பீஹாரில் தேர்தல் பிரசாரத்தில், சாத் பண்டிகை மற்றும் பிரதமர் மோடியை ராகுல் கடுமையாக சாடினார். அவர் 'ஓட்டுகளுக்காக பிரதமர் மோடி எதையும் செய்வார். பீஹாரில் நிதிஷ் குமார் அரசு பாஜ ரிமோட் கண்ட்ரோல் மூலம் நடக்கிறது என குற்றம் சாட்டினார். பிரதமர் மோடி குறித்து ராகுல் கூறிய கருத்துக்களுக்கு பார்லி விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ எதிர்ப்பு தெரிவித்தார்.அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி குறித்து ராகுலின் கருத்தால் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியில் உள்ள சிறந்த தலைவர்கள் கூட ராகுலின் கருத்துகளால் வெட்கப்படுகிறார்கள். ராகுலில் கருத்துக்களால் காங்கிரஸ் கட்சி பாதிக்கப்பட்டுள்ளது. எந்தத் தலைவரும் அத்தகைய மொழியில் பேச முடியாது. ராகுல் தொடர்ந்து இப்படிப் பேசினால், இந்த நாட்டு மக்கள் காங்கிரஸை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர மாட்டார்கள். ராகுல் ஒவ்வொரு முறை அவதூறு கருத்துக்களை பேசும் போதும், பின்னடைவை சந்திப்பதால், காங்கிரஸ் கட்சியினர் கவலைப்படுகிறார்கள். நாடு முன்னேறி வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பின்னடைவுகளைச் சந்தித்து வருகிறது. இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

மனிதன்
அக் 30, 2025 20:21

"ராகுல்"மேல் பீகார் மக்களுக்கு வெறுப்பு வரவழைக்க நீங்களெல்லாம் சேர்ந்து என்னென்னமோ முயற்சிக்கிறீர்கள் இருந்தாலும் இம்முறை தோல்வி உறுதி...


என்றும் இந்தியன்
அக் 30, 2025 17:16

நான் பிரதமராக / ஜனாதிபதியாக இருந்திருந்தால் இந்த மாதிரி சட்டம் கொண்டு வந்திருப்பேன் 1 இந்தியாவை தவிர்த்து வேறு தேசத்திற்கும் பிரஜையாக இருந்தால் அவன் இந்தியன் அல்ல அவனது இந்திய குடியுரிமை பறிக்கப்பட வேண்டும். ராகுல் இத்தாலி இங்கிலாந்து இந்திய பிரஜை. 2 தவறு கண்டேன் சுட்டேன். ஒரு சிலர் இதனால் இறக்கலாம் தவறுதலாக ஆனால் 143.2 கோடி மக்கள் நன்மையை அனுபவிப்பார்கள். தவறு செய்பவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் என்பதினால்.


RAMESH KUMAR R V
அக் 30, 2025 14:17

மோடியை குறை கூறுபவர்களை கடவுள் கூட மன்னிக்க மாட்டார். இந்தியாவின் பொக்கிஷம்.


மனிதன்
அக் 30, 2025 20:23

அய்யா யாருய்யா நீ? இவ்வளவு அப்பாவியா இருக்க???...


SUBBU,MADURAI
அக் 30, 2025 14:03

Biharis have no future in Bihar Rahul Gandhi. Why? Look within before mocking Biharis. Bihar was once a rich state, but your family pushed it into a condition where mere survival became an achievement. Btw, youve no future in India either. Better go back


P.M.E.Raj
அக் 30, 2025 13:49

காங்கிரஸுக்கும் இந்தியாவுக்கும் அவமானமே தவிர வேறொன்றும் இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை