உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஊழல் வழக்கில் சிக்கியுள்ள மாஜி கவர்னர் மருத்துவமனையில் கவலைக்கிடம்

ஊழல் வழக்கில் சிக்கியுள்ள மாஜி கவர்னர் மருத்துவமனையில் கவலைக்கிடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ரூ. 2,200 கோடி நீர்மின்திட்ட ஊழல் வழக்கில் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் மீது சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ள நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பா.ஜ. மூத்த தலைவரான சத்யபால் மாலிக் பல்வேறு மாநிலங்களில் கவர்னராக பதவி வகித்துள்ளார். கடந்த 2018-19-ம் ஆண்டுகளில் ஜம்மு - காஷ்மீர் கவர்னராக, பதவி வகித்த போது, கிஷ்த்வார் மாவட்டத்தில் பாயும் செனாப் நதியில், பெரிய நீர் மின் உற்பத்தி திட்டத்துக்கு டெண்டர் விடப்பட்டது. அதில், விதிமுறைகளை பின்பற்றவில்லை எனவும் ரூ. 2,200 கோடி ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது.இதில் 'இரண்டு கோப்புகளில் கையெழுத்து போட, எனக்கு 300 கோடி ரூபாய் வரை சிலர் லஞ்சம் தர முயன்றனர்' என்றும் அப்போது தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த விவகாரத்தில் சி.பி.ஐ,, வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து 2024 பிப்ரவரி யில் சத்யபால் மாலிக்கிற்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடந்தது.இந்ந வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சி.பி.,ஐ. திட்டமிட்டுள்ளது.இந்நிலையில் கடந்த மே.11ம் தேதி சத்யபால் மாலிக்கிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து டில்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.நேற்று மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், சத்யபால் மாலிக்கின் இரு சிறுநீரங்களும் செயல் இழந்துவிட்டன. ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

venugopal s
மே 23, 2025 16:17

கடந்த பத்தாண்டுகளில் நியமிக்கப்பட்ட ஆளுநர்களில் ஒன்றிரண்டு மோசம் என்றால் பரவாயில்லை, எல்லாமே இப்படித்தான் உள்ளது என்றால் தவறு மத்திய பாஜக அரசிடம் தான் உள்ளது!


Kulandai kannan
மே 23, 2025 13:25

எதிர்கட்சிகளின் ஸ்லீப்பர் செல்லாக செயல்பட்டவர்.


R.P.Anand
மே 23, 2025 12:03

குற்றாச்சாட்டு உள்ள பிஜேபி எவனும் கோர்ட் போவது கிடையாது


Barakat Ali
மே 23, 2025 09:13

லாலுவைப்போலத்தான் இவரும்... இதே நாடகத்தைக் கழக அரசியல்வாதிகளும் நடத்துவதுண்டு, நடத்தியிருக்கிறார்கள் .... இந்நிலையில் நாம் சீனாவுடன் போட்டியிடுகிறோம் ..... அதில் தவறில்லை ..... ஆனால் ஊழலுக்கெதிராக கடுமையான சட்டங்கள், அவற்றைச் செயல்படுத்தும் பங்கு இவையே ஒரு அல்லரசைத் தீர்மானிக்கின்றன ....


Barakat Ali
மே 23, 2025 10:48

பாங்கு , வல்லரசை .....


V RAMASWAMY
மே 23, 2025 08:30

Whomosoever it be if a criminal ge is initiated, unless effective immediate action is taken, such difficulties will definitely arise resulting in huge losses to the respective Governments. In our country court cases are delayed beyond tolerable limits to the extent of petitioners and defendants entire life span. Justice delayed is justice denied.


R.RAMACHANDRAN
மே 23, 2025 07:28

இந்த நாட்டில் நேர்மையானவர்களை ஒடுக்க எதையும் செய்வர்.பொது விநியோக திட்டத்தில் மொத்த சப்ளையில் நடக்கும் கூட்டு கொள்ளைக்கு உடந்தையாக இருந்து பொது மக்களுக்கு எடை குறைத்து வழங்கி அந்த கூட்டு கொள்ளையால் ஏற்பாடு இழப்பை சரிகட்டிக் கொள்ள வேண்டும் கூட்டு கொள்ளையர்களை எதிர்த்து போராடக் கூடாது என அந்த கொள்ளையில் பங்கு பெறும் அரசு அலுவலர்களை எதிர்த்து போராடியதால் பழி வாங்கும் விதத்தில் பனி நீக்கம் செய்ததோடு மேலும் பல குற்றங்களை செய்து கொண்டு என்னை உயிருடன் கொல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்களுக்கு நீதிபதிகளும் உடந்தை.மொத்தத்தில் இந்நாட்டில் நேர்மையானவர்களுக்கு இடம் இல்லை.இப்படிப்பட்ட நிலையில் இந்தியா 2047 ல் எங்கிருந்து வளர்ந்த நாடாக ஆவது.எல்லாம் பித்தலாட்டம்.


J.Isaac
மே 23, 2025 21:14

ரத்த நாளம் துடிக்கிறது


venugopal s
மே 23, 2025 07:18

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்!


Keshavan.J
மே 23, 2025 13:22

நீங்களோ ஒரு சுண்ட சோறு


Oviya Vijay
மே 23, 2025 06:43

ஐயகோ... கவர்னர் மீது எப்படி வழக்கு தொடரலாம். அவருக்கு இருக்கிற வானளாவிய அதிகாரம் முன்னே யாரும் அவரை கேள்வி கேட்க முடியாது அப்படின்னு ஒரு குரூப்பு இங்கே கெளம்பி வருமே... கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம...


Naga Subramanian
மே 23, 2025 06:19

மக்களில் திராவிடப் பதர் விரவியுள்ளது.


மீனவ நண்பன்
மே 23, 2025 05:32

காஷ்மீரில் கவர்னராக ஆட்டம் போட்டார்


J.Isaac
மே 23, 2025 21:11

அண்ணாமலைக்கு தெரியுமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை