உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராஜஸ்தானில் சோகம்; மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளர் 4 பேர் பலி; 5 பேர் மாயம்

ராஜஸ்தானில் சோகம்; மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளர் 4 பேர் பலி; 5 பேர் மாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் குழாய் பதிக்கும் பணியின் போது மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் மாயமான 5 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.ராஜஸ்தான் மாநிலம், பரத்பூரில் குழாய் பதிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். சில தொழிலாளர்கள் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட 10 அடி ஆழ பள்ளத்தை நிரப்பிக் கொண்டிருந்தபோது, ​​மண் சரிந்து விழுந்ததில் சிக்கி கொண்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர். தொழிலாளர்கள் 6 பேர் லேசான காயத்துடன் மீட்கப்பட்டு உள்ளனர். மேலும் 5 பேர் மாயம் ஆகி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. மாவட்ட கலெக்டர், எஸ்.பி., உள்ளிட்ட உயர் அதிகாரிகள், சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஜூன் 29, 2025 13:18

விபத்துக்கள், மரணம், பாலியல் வன்கொடுமை, ஊழல், போதைப்பொருள் கடத்தல் செய்திகள் இல்லாமல் ஒரு நாலாவது பொழுது விடியுமா?


முருகன்
ஜூன் 29, 2025 16:54

அதற்கு நீங்கள் இருக்க வேண்டிய இடம் பூமியில் இல்லை வேற்று கிரகத்தில் தான்


புதிய வீடியோ