உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்கு முழு பாதுகாப்பு: முதல்வர் உமர் அப்துல்லா உறுதி

அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்கு முழு பாதுகாப்பு: முதல்வர் உமர் அப்துல்லா உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகளின் வருகை மிகவும் குறைந்து விட்டதாக முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும், அமர்நாத் யாத்திரையில் எந்த அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க கவனம் செலுத்தப் போவதாக அவர் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது: பஹல்காம் தாக்குதல் காரணமாக, இந்த கோடை சீசனில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, நாங்கள் அமர்நாத் யாத்திரையில் முழு கவனம் செலுத்த போகிறோம். எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த யாத்திரைக்குப் பிறகு சுற்றுலாவை மேம்படுத்த தேவையான முயற்சிகள் எடுக்கப்படும், இவ்வாறு கூறினார். 52 நாட்கள் கொண்ட அமர்நாத் யாத்திரை வரும் ஜூலை 3ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதுவரையில் இந்த யாத்திரையில் பங்கேற்க நாடு முழுவதும் 3.5 லட்சம் பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Gnana Subramani
மே 18, 2025 22:48

காஷ்மீர் மாநிலத்தின் காவல் துறையும் மொத்த பாதுகாக்கும் பொறுப்பும் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில அரசுக்கு இல்லை


என்றும் இந்தியன்
மே 18, 2025 19:13

உமர் அப்துல்லா நீ இந்தியனாகி விட்டாயா பேஷ் பேஷ்


Rathna
மே 18, 2025 14:16

ஆர்டிகிள் 370 மற்றும் 35 மாற்றத்திற்கு பின்னால் பேச்சின் தன்மை மாறியுள்ளது. ஆனாலும் இவனுக பேச்சை நம்பி பணத்தை இவங்களுக்காக செலவு பண்ணி, இவனுக ஒரு பாயசத்தை போட்டுட்டா?


KRISHNAN R
மே 18, 2025 12:44

இவர்கள் எந்த வகையில் இருந்தார்கள் இருப்பார்கள்... எல்லாம் தெரியும்


Yes your honor
மே 18, 2025 10:49

இதற்கு முன்பெல்லாம் பாகிஸ்தானுக்கு ஜால்ரா போட்டு காலத்தை ஓட்டி வந்தவர்கள்தான் இந்த உமர் அப்துல்லா போன்ற பேர்வழிகள். காஷ்மீர் மக்கள் அமைதியையே விரும்புகிறார்கள், முன்னேற்றத்தை விரும்புகிறார்கள், 370யை அகற்றியபிறகு ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தெளிவாக புரிந்துகொண்டுவிட்டதால், எப்படி திமுகவின் உருட்டுகள் இனிமேல் தமிழகத்தில் செல்லுபடியாகாதோ, அதேபோன்று உமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி, சஜத் லோன், மற்றும் சில உள்நாட்டு பாக்கிஸ்தான் லவ்வர்ஸ் உருட்டும் உருட்டுகள் இப்பொழுதெல்லாம் காஷ்மீர் மக்களிடம் செல்லுபடி ஆவதில்லை. அதிலும் குறிப்பாக பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, மக்கள் தங்கள் ஆதரவை மோடிஜி அவர்களுக்குத் தெரிவித்து விட்டதால், மக்களின் மனநிலையை உமர் அப்துல்லாவும் புரிந்துகொண்டு விட்டதால், இனி அமர்நாத் யாத்திரை என்ன இதுபோன்ற எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் வாலை சுருட்டிக்கொண்டு பாரத் மாதா கீ ஜே போட்டே ஆகவேண்டும். இல்லையேல் மக்கள் ஒத்துக்கொள்ளமாட்டார்கள் என்னும் நிலை காஷ்மீரில் ஏற்பட்டுள்ளது. வெகுவிரைவில் இந்த நிலை தமிழகத்திலும் வரத்தான் போகிறது, ஊரும் உருப்படப் போகிறது.


A1Suresh
மே 18, 2025 09:51

என்ன இன்னமும் ஜம்முகாஷ்மீர் அரசு கலைக்கப்படவில்லையா - காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்கு லெப்டினென்ட் கவர்னர் ஆட்சியே சரியானது


மீனவ நண்பன்
மே 18, 2025 08:32

அப்துல்லா குடும்பம் ஸ்ரீநகரில் பயணிக்கும்போது பாதுகாப்புக்கு அரைடஜனுக்கும் அதிகமான வாகனங்கள் புடைசூழ பயணிப்பார்கள் .அமர்நாத் யாத்திரையில் ராணுவ வீரர்களும் BSF RR மற்றும் cRPF ஜவான்கள் தான் சாலை அமைப்பது மருத்துவ சேவை எல்லாமே ..ஜம்மு கேஷ்மீர் போலீஸ் எங்குமே தென்பட மாட்டார்கள்


Suresh sridharan
மே 18, 2025 08:30

உமர் அப்துல்லா வந்ததுக்கு அப்புறம்தான் ஊருக்குள்ள ஊடுருவி வந்தாங்க இல்லையென்றால் ஐபிஎஸ் ஐஏஎஸ் ஆபீஸர் மாற்றிய விவரம் எல்லாம் தீவிரவாதிகளுக்கு எப்படி தெரியும் நீங்க பாதுகாப்பு கொடுக்கிறேன்னு சொல்லும் பொழுதே பயமே வருது ஏன்னா உங்களுடைய ஷேப் அப்படி


Kasimani Baskaran
மே 18, 2025 07:55

உள்ளூரில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகள் முழுவதுமாக ஒழித்துக்கட்டப்பட வேண்டும். இல்லை என்றால் அதிகமாக ஒருவரும் வரமாட்டார்கள்.


Minimole P C
மே 18, 2025 07:46

We see a sea of change in his attitude after assuming office this time. Let us welcome it. If he feels tourism is that much important, he can a local force, to safeguard the tourists. Apartfrom providing security, they can guide tourist on many things like sharing information to ensure the comfor stay at Kashmir.


சமீபத்திய செய்தி