உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் கூட்டத்தில் பங்கேற்றது மகிழ்ச்சி: சசி தரூரால் கடுப்பாகும் காங்கிரஸ்

பிரதமர் கூட்டத்தில் பங்கேற்றது மகிழ்ச்சி: சசி தரூரால் கடுப்பாகும் காங்கிரஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் நேற்று (நவ.,17) பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக கூறி அவரை பாராட்டி காங்கிரஸ் எம்பி சசி தரூர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் தலைமை, அக்கட்சியின் திருவனந்தபுரம் தொகுதி எம்பி சசி தரூர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் அவர் பிரதமர் மோடியை பாராட்டி வருகிறார். இது காங்கிரஸ் கட்சிக்கும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க காங்கிரசின் எதிர்ப்பையும் மீறி வெளிநாடுகளுக்கு செல்லும் அனைத்து கட்சி குழு கூட்டத்தில் சசி தரூர் இடம்பெற்றார்.இதனைத் தொடர்ந்து அவர் அடிக்கடி பிரதமர் மோடியை பாராட்டி வருகிறார். இதனால், சசி தரூரை காங்கிரஸ் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பிரதமர் மோடியை பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்தப் பதிவில் சசி தரூர் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடி பங்கேற்ற கருத்தரங்கம் ஒன்றில் நானும் பங்கேற்றேன். இந்தியா வளர்ச்சி பெறுவதற்கான நேர்மறையான மாற்றங்கள் குறித்தும், காலனித்துவத்துக்கு பிந்தைய மனநிலை பற்றியும் பேசினார்.பிரதமர் தனது உரையில், துடிப்பான பொருளாதாரம் காரணமாக, இந்தியா வெறும் வளரும் சந்தையல்ல. உலகத்துக்கான வளரும் மாடல் எனக்கூறியதுடன், எப்போதும் நான்( பிரதமர் மோடி) தேர்தல் மனநிலையில் இருப்பதாக பலரும் விமர்சிக்கின்றனர். ஆனால், மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் உணர்ச்சிகரமான மனநிலையில் இருக்கிறேன் எனக்குறிப்பிட்டார்.மேலும் பிரதமர் தனது பேச்சில் முக்கிய அம்சமாக, மெக்காலேயின் 200 ஆண்டுகால அடிமை மனநிலை முறியடிப்பது பற்றிய கருத்து அமைந்தது. இந்தியாவின் பாரம்பரியம், மொழிகள் மற்றும் அறிவு அமைப்புகளில் பெருமையை மீட்டெடுக்க 10 ஆண்டு தேசிய இயக்கத்துக்கு அழைப்பு விடுத்தார். அவரின் உரை பொருளாதார கண்ணோட்டமாகவும், நடவடிக்கைக்கான கலாச்சார அழைப்பாகவும் அமைந்தது. முன்னேற்றத்துக்காக தேசம் துடிப்புடன் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இந்த கூட்டத்தில் பங்கேற்றது மகிழ்ச்சி. இவ்வாறு அந்தப் பதிவில் சசி தரூர் கூறியுள்ளார்.பீஹார் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில் பிரதமர் மோடியை சசி தரூர் மீண்டும் பாராட்டியிருப்பது அக்கட்சியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Vijay D Ratnam
நவ 18, 2025 23:37

மெத்த படித்த சசிதரூர் போன்ற ஒருவர் இவ்வளவு காலம் காங்கிரசில் இருப்பதே பெரிய விஷயம். க்ராஸில் அமெரிக்காவில் படித்த சசிதரூர் என்ன சாதித்து விட முடியும். மல்லிகார்ஜுனா கார்கேக்களும், சிதம்பரங்களும், அசோக் கெலாட்டுகளும் இருக்குற இடத்துல இவருக்கு வேலை இருக்காது.


Perumal Pillai
நவ 18, 2025 21:25

He is still sticking to the Congress only to dodge the anti-defection law. For all practical purposes, he has ceased to be a Congress member and is functioning as an unofficial BJP MP. The Congress once had self-respecting stalwarts like Devaraj Urs and Brahmananda Reddy, but sadly, the party has now become a colony of parasites.


Anu Sekhar
நவ 18, 2025 21:17

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய் பொருள் காண்பது ? எங்கேயோ கேட்டமாதிரி இருக்கா?


M Ramachandran
நவ 18, 2025 20:11

தேர்தலுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. தேசிய நீரோட்டம் என்பது எல்லா கட்சிகளுக்கும் பிராந்திய கட்சிகளுக்கு அதில் உடன்பாடில்லை. காங்கிரஸின் நிலையய்ப்பாடும் அப்படி தான் இருக்க வேண்டும். சசி தரூர் கான்க்ரீஸ்க்காரக இருந்தாலும் மக்களின் நலம் என்று வரும் போது குடும்ப சுய நலத்தைய்ய மட்டும் புகுத்தி அந்த பார்வையில் பார்க்க கூடாது. சசி கரூர் மனநிலை ஸ்டாலினுக்கு இல்லை. வாய்க்கு வந்த படி மற்ற மாநில மக்களை கேவல படுத்திய பேசுவதால் அவர் பேசுவதால் குட்டி இரட்டை நோக்குள்ள தலைகளும் பெண் பேய்களும் தலை விருச்சி ஆட்டம் போடுது போடுகிறது.


KRISHNAN R
நவ 18, 2025 19:01

நல்லது


Sivasankaran Kannan
நவ 18, 2025 18:42

where are u.


ஜெகதீசன்
நவ 18, 2025 18:05

நேர்மறையான தேசியவாதி. இன்னும் காங்கிரஸ் தேசிய இயக்கம் என்ற மாயை உணர்வில் இருக்கும் பலர் போல, இவரும் அங்கு இருக்கிறார். அடுத்த தேர்தலில் திருவனந்தபுரம் பாஜக MP இவர் தான்.


vadivelu
நவ 18, 2025 17:59

பெரிய துரதிர்ஷ்டம் 50 கோடி நபர்கள் இந்தியாவை வெறுக்கும் கூட்டத்தில் இருப்பது.


Priyan Vadanad
நவ 18, 2025 17:48

சசி சார் ஆதாயத்துக்கு காங்கிரஸ். பணிவிடைக்கு பாவக்கா. இவர் வெளிப்படையாய் அந்த கட்சியில் சேர்ந்துவிடலாம். ஆனால் சேரமாட்டார். சேர்ந்துவிட்டால் அரசியல் அனாதையாகி விடுவார். அல்லது எதிர்க்கட்சிகளுக்கு இன்னொரு ரவி கிடைப்பார்.


Suppan
நவ 18, 2025 20:59

தைரியமிருந்தால் காங்கிரஸ் இவரை கட்சியிலிருந்து நீக்கலாமே


அப்பாவி
நவ 18, 2025 17:29

காங்கிரசை ஊத்தி மூட அசைன்மெண்ட் வந்திருக்கு.


சமீபத்திய செய்தி