உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்திய ஜிஎஸ்டி சீர்திருத்தம்: பாசிட்டிவ் சுனாமி என்கிறது மாருதி நிறுவனம்

மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்திய ஜிஎஸ்டி சீர்திருத்தம்: பாசிட்டிவ் சுனாமி என்கிறது மாருதி நிறுவனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜிஎஸ்டி சீர்திருத்தம் வாகனத்துறையில் ஒரு பெரிய நேர்மறையான சுனாமியை ஏற்படுத்தி உள்ளது என மாருதி நிறுவனத்தின் உயர் அதிகாரி கூறியுள்ளார்.

30 ஆயிரம் கார்கள் விற்பனை

மத்திய அரசு ஜிஎஸ்டி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளதால் கார்கள், பைக், வீட்டு உபயோக பொருட்கள், உணவு மற்றும் மருந்து பொருட்கள் என அனைத்து பொருட்களின் விலையும் சரிந்துள்ளது. அதிலும் குறிப்பாக வாகனங்களின் விலை, கணிசமாக குறைந்துள்ளது. ஒவ்வொரு கார் உற்பத்தி நிறுவனமும், தங்கள் விலைகுறைப்பு பட்டியலை வெளியிட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றனர். விலை குறிப்பு அமலுக்கு வந்த 22ம் தேதி முதல் டாடா உள்ளிட்ட நிறுவனங்களின் கார்கள் விற்பனை அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலி காரணமாக நவராத்திரிக்கு முதல்நாளான செப்.,22 ம் தேதியன்று மாருதி நிறுவனத்தின் 30 ஆயிரம் கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=b2u14iau&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

சுனாமி

இந்நிலையில் மாருதி சுசூகி நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை பிரிவின் மூத்த நிர்வாக அதிகாரி பார்த்தோ பானர்ஜி ஏஎன்ஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: எங்களது நிதி கூட்டாளிகள் விரைவில் கடன் வழங்கும் பணியை முடிப்பதில் தீவிரமாக உள்ளனர். விநியோக உத்தரவையும் விரைவாக வழங்குகின்றனர். இதன் மூலம் நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக கார்களை வழங்க முடியும். இதற்கு முக்கிய காரணம் ஜிஎஸ்டி சீர்திருத்தம். இந்த நடவடிக்கை நாடு முழுவதும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. நேர்மறையான சுனாமியை உண்டாக்கி உள்ளது கடந்த ஆகஸ்ட் மாதம் ஜிஎஸ்டி குறைப்பு குறித்து தகவல் அறிந்ததும், கார்களை வாங்கும் எண்ணத்தில் இருந்தவர்கள் தங்களது முடிவை ஒத்திவைத்தனர். தற்போது பண்டிகை காலம் நெருங்குவதாலும் கார்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதிகரிப்பு

முன்பு, ஒரு நாளைக்கு 10 ஆயிரம் கார்கள் முன்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது 18 ஆயிரம் கார்கள் முன்பதிவு செய்யப்படுகிறது. சிறிய கார்களிலும் முன்பதிவு அதிகரித்துகாணப்படுகிறது. 100க்கும் மேற்பட்ட நகரங்களில் நல்ல பலன் தெரிகிறது. முன்பதிவு இருமடங்கு அதிகரித்துள்ளது. சிறிய கார்களின் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. மெட்ரோபோலிட்டன் நகரில் சிறிய கார்களின் விற்பனை 35- 40 சதவீதம் அதிகரித்துள்ளது.இப்போது இந்தியாவில் ஆயிரத்தில் 34 பேர் மட்டுமே கார்வைத்துள்ளனர். இன்னும் அதிகம் பேர் கார் வாங்க வேண்டும் என்பதற்காக எளிதாக கடன் வசதி திட்டத்தை கொண்டு வர உள்ளோம். மாதம் ரூ.1,999 மட்டும் இஎம்ஐ செலுத்தும் வகையில் கார் கடன் திட்டத்தை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

M Ramachandran
செப் 26, 2025 19:37

வயித்தெரிச்சல் கேசுகளை கண்டு கொள்ளாதீர்கள்.200–க்கு மார் அடிக்கும் கொள்ளையாடிக்கும் கும்பல் அடிமைகள் .


Ganesan
செப் 26, 2025 19:32

இட்லி தோசை, சாப்பாடுக்கு எல்லாம் ஜி எஸ் டி, சப்பாத்திக்கு இல்லை


ஆரூர் ரங்
செப் 26, 2025 21:18

எல்லா ஒட்டல்களிலும் ஐட்டம் வேறுபாடின்றி எல்லா வகைகளுக்கும் ஜிஎஸ்டி உண்டு. பாக்கெட்களில் அடைத்து கடைகளில் விற்கும் ரெடிமேட் சப்பாத்தி வகைக்கு மட்டுமே வரி விலக்கு. முடிந்தால் இட்லியையும் அப்படி விற்க முயற்சியுங்கள்


M Ramachandran
செப் 26, 2025 19:32

இப்படி சொல்லாதீர்கள்.இங்கு உள்ள கொள்ளை கும்பல் தலைக்கும் அதன் அடி வருடிகளுக்கும் வயிறு எறிஞ்சி புண்ணாய் கிடக்கு.


Ganesan
செப் 26, 2025 19:32

GST வரி குறைப்பால் இரண்டரை லட்சம் கோடி பணம் மக்களுக்கு மிச்சம் என்று கூறுகிறார்கள். அப்படி என்றால் இதுவரை ஜிஎஸ்டி வரி போட்டு இரண்டு லட்சம் கோடி பணம் மக்களிடமிருந்து பிடுங்கி இருக்கிறார்கள். பாவம் மக்கள்.


Ganesan
செப் 26, 2025 19:31

ஜிஎஸ்டி வரிகுறைப்பு சும்மா மக்களை ஏமாற்றுகிற தந்திரம்.விலைகள் குறையாது


Ganesan
செப் 26, 2025 19:31

அப்போ 11 வருட ஆட்சி காலத்தில் வரி கட்டிய மக்களிடம் இவர்கள் வசூலித்த பணம் 27.5 லட்சம் கோடி இவ்வாறு மத்திய அரசு வரியாக வாங்கியதை தவறு என்று தானே தன்னை திருத்தி கொள்ள ஒரு வாய்பாக இரக்க குணம் பொருந்திய பிஜேபி அரசு யாரெல்லாம் வரியை கட்டினார்களே அவர்கள் பணத்தை அவர்களிடத்து திரும்ப கொடுப்பது தான் இரக்க குணம் என்னமோ கேக்குகள் லட்டு பப்ஸ் வறுமையில் இருப்பவனுக்கு எங்கே கிடைக்கும் அவனே வடக்கனுக வரவால் வசதிக்கு வக்கத்து போனான் யார் கையில் எந்த மக்கள் கையில் 2.50லட்சம் கோடி பணம் சேமிக்க முடியும் அத்தியாவசிய பொருட்கள் உணவு பொருள் வரியின்றி தந்தால் நாட்டு மக்கள் ஆனந்தமாக வாழ்வர் என்ன கரணம் போட்டாலும் பிஜேபி தமிழ் நாட்டில் தனித்து நின்று வெற்றி பெறவே இயலாது


Ram pollachi
செப் 26, 2025 19:08

தெருவெல்லாம் கார் மற்றும் பைக்கை நிறுத்தி அட்டகாசம் செய்யும் மக்களுக்கு மேலும் ஒரு பொன்னான வாய்ப்பு.... போக்குவரத்து நெரிசல், ஒலி மாசுக்கு பஞ்சமில்லை.


திகழ்ஓவியன்
செப் 26, 2025 19:00

சிரிப்பு தான் என்னவோ தினமும் ஏழை நடுத்தர வர்க்கம் கார் வாங்கி விட்டு தான் மறுவேலை பார்ப்பது போல , அத்தியாவசிய பொருள் விலை குறைய வில்லை , வியாபாரிகள் பொருளின் basic price ஐ ஏற்றி விட்டனர். இதை யார் கண்காணிப்பது.


RAMESH KUMAR R V
செப் 26, 2025 18:58

ஜி எஸ் ற்றி குறைப்பு ஒரு சுனாமி மேலும் ஏழைகளுக்கு ஒரு வர பிரசாதம்


D.Ambujavalli
செப் 26, 2025 18:47

‘கொச்சியிலே குறுணி மிளகு குழம்புக்காச்சா, சாருக்காச்சா ‘ என்பார்கள் கார் விலை குறைந்துவிட்டால், வீட்டுக்கு எட்டுக்கார் வாங்கி, ஆளுக்கு இரண்டா வைத்து கொள்ள முடியும்? பெட்ரோல் பக்கம் கண் திரும்பவில்லையே சாமானியன் அன்றாடம் வாங்கும் பால், தயிர், எண்ணெய், வெளியில் உண்ணும் இட்லி, தோசை எல்லாவற்றையும் கண்டுக்காமல், சப்பாத்தி பரோட்டா வுக்கு வரி குறைப்பு. நெய் விலை குறைந்ததால் தினம் அரை கிலோவா சாப்பிட முடியும்? கார் விற்பனையாளர்கள் பெருந்தனக்காரர்கள் மேலும் பயனடைவார்கள் அவ்வளவுதான்.


சக்திவேல் கறம்பக்குடி புதுக்கோட்டை
செப் 26, 2025 18:56

ஒரு நாளைக்கு 18000 கார்கள் என்பது ஒரு நிறுவனத்தில் மட்டும் பதிவாகிறது என்றால் மற்ற நிறுவனங்களை கணக்கிட்டால் இது சுனாமிதான். கார் வாங்குபவர்கள் எல்லாம் வீட்டிற்கு நான்கைந்து கார்கள் வாங்க மாட்டார்கள். நடுத்தர குடும்பங்களின் தரம் உயர்வதை இது காட்டுகிறது. 8 முதல் 12 லட்சங்களில் கார் வாங்குபவர்கள் அம்பானியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. புரிந்துகொள்ளுங்கள்.


Venugopal S
செப் 26, 2025 21:16

இந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் அதிக ஜி எஸ் டி வரி செலுத்தி யாருமே கார் வாங்கவில்லை, இருபத்துஇரண்டாம் தேதிக்கு பிறகு தான் வாங்க ஆரம்பித்து உள்ளனர்.ஒவ்வொரு மாதமும் கார் விற்பனை குறித்த அறிக்கை வெளியிடப் படுகிறது. இந்த மாத விற்பனை நிலவரம் அக்டோபர் முதல் வாரத்தில் தெரிந்து விடும்.


சமீபத்திய செய்தி