உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எச் 1 பி விசா விதிகள் கடுமையாகலாம்: நிபுணர்கள் கணிப்பு

எச் 1 பி விசா விதிகள் கடுமையாகலாம்: நிபுணர்கள் கணிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அமெரிக்க அதிபராக பொறுப்பு ஏற்க உள்ள டிரம்ப்பின், 'அமெரிக்காவே முதன்மை' என்ற கொள்கை காரணமாக எச்1 பி விசா விதிகள் கடுமையாக்கப்படலாம் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரிவிதிப்பதாக பிரசாரத்தின் போது இந்தியா மீது டிரம்ப் குற்றம்சாட்டி இருந்தார். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்போம் எனவும் கூறியிருந்தார்.இந்நிலையில், டிரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில், 'அமெரிக்காவே முதன்மை ' என்ற கொள்கையை அமல்படுத்த முனைந்தால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் ஆட்டோமொபைல், ஜவுளி மற்றும் மருந்து பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும் பொறியாளர்கள் பெரிதும் பயன்பெற்று வந்த எச்1 பி விசாவிற்கான விதிகளை அவர் கடுமையாக்கலாம் எனக்கூறும் அவர்கள் இதனால் இந்தியர்களுக்கு அதிக செலவு ஏற்படும் எனவும், இதனால் 80 சதவீதம் பேர் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறுகின்றனர்.இந்தியா - அமெரிக்கா இடையே 190 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு வர்த்தகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
நவ 07, 2024 18:03

இந்தியாவுல ட்ரம்ப் ஓட்டல்ஸ் கட்ட அனுமதி குடுப்பாங்க. விசா ப்ராப்ளம் ஓடியே போயிரும். ட்ரம்ப் ஒரு திறமையான வணிகர்.


அப்பாவி
நவ 07, 2024 18:03

இந்தியாவுல ட்ரம்ப் ஓட்டல்ஸ் கட்ட அனுமதி குடுப்பாங்க. விசா ப்ராப்ளம் ஓடியே போயிரும். ட்ரம்ப் ஒரு திறமையான வணிகர்.


Kasimani Baskaran
நவ 07, 2024 05:58

சாதக பாதகங்கள் பைடன் ஆட்சியை விட அதிகமாகவே இருக்கும். இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் மாற்றம் வரும். எச்1பி விசா வைத்து விளையாட்டுக்காட்ட முடியாது.


Rpalnivelu
நவ 07, 2024 02:51

H 1பி விசா மட்டுமல்ல கணவர் H 1பி விசாவில் அமெரிக்காவில் இருந்தால் மனைவியும் அங்கு பணி புரியலாம் என்ற விதியும் பிரச்சனைதான்


spr
நவ 07, 2024 01:15

"இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் ஆட்டோமொபைல், ஜவுளி மற்றும் மருந்து பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படலாம்" என்றொரு நிலை வந்தால், இந்தியாவிலேயே தயாராகும் ஜவுளி மற்றும் சித்த மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்யும் சிறு குறு வணிகர்களுக்கு மத்திய மாநில அரசுகள் தங்கள் பங்கு வரிகளைக் குறைத்து ஏற்றுமதியைப் பெருக்க முயற்சிக்க வேண்டும் . பிற நாட்டார் இங்கு வந்து தொடங்கும் தொழில் அவர்களுக்கு ஆதாயம் தருவதால்தான் இங்கு தொடங்கப்பட்டுள்ளது என்பதால் அதற்கு வரிவிலக்கு அவசியமல்ல ஆனால் அவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறுமுன் நாமே அவற்றை இங்கே தயாரிக்க ஏற்ற சூழலை அரசுகள் உருவாக்க வேண்டும்


முக்கிய வீடியோ