வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மீண்டும் இவ்வாறு நிகழாமல் இருக்கவேண்டும், உயிர் நீத்த அனைவரின் ஆத்மா சாந்தியடையட்டும்
ராஜ்கோட்: குஜராத்தில் நடந்த விமான விபத்தில் சிக்கி பலியானவர்கள் தொடர்பான பலரது நிலை குறித்து நெஞ்சை உருக்கும் தகவல்கள் வெளியாகி வருகிறது.நேற்று (ஜூன்-12)ல் ஆமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி சென்ற விமானம் சில நிமிடங்கிளில் பூமியை நோக்கி விழுந்து தீப்பற்றி எரிந்தது. இதில் 240 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் லண்டன் நோக்கி சென்ற ஒவ்வொரு பயணிகளும் ஒவ்வொரு கனவுகளுடன், பல கடமைகளை சுமந்து சென்றனர். ஆனால் துரதிருஷ்டமாக விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=buzsiour&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முன்னாள் முதல்வரின் லக்கி டேட்
புதிய வாழ்க்கையை நோக்கி புறப்பட்ட பெண் டாக்டர்
இது போல் ஒரு டாக்டர் குடும்பத்தினர் பலியான சோகம். ராஜஸ்தானின் பன்ஸ்வாராவை சேர்ந்த பெண் மருத்துவர் கோமி வியாஸ் . இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மருத்துவமனைக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் 'நான் என் வேலையை விட்டு விலகுகிறேன், நான் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க விரும்புகிறேன்' என்று கூறியிருந்தார். லண்டன் பயணத்தை மேற்கோள் காட்டி இவ்வாறு கூறியிருந்தார். ஆனால் டாக்டரும் அவரது கணவர் பிரதீக் , 3 குழந்தைகள் விமான விபத்தில் சாம்பலானார்கள். புதிய வாழ்க்கை என்று கூறியது அவரது வாழ்வின் இறுதி நாளாக மாறிப்போனது. கனவுகள் நிறைந்த ஒரு முழு குடும்பத்தையும் ஒரே நொடியில் அழித்துவிட்டது.
விபத்துக்கு மத்தியில், ஒரு குறிப்பிடத்தக்க சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. விமானத்தின் இடிபாடுகளில் இருந்து 'பகவத் கீதை' புத்தகம் எவ்வித சேதமும் இல்லாமல் அப்படியே இருந்தது. இது விமானத்தின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டது. விசா மறுப்பால் உயிர் போனது
முதல் பயண கனவு
புது மண தம்பதிகள்
ராஜஸ்தானின் பனஸ்கந்தா மாவட்டத்தின் தானேரா தாலுகாவைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகள் கமலேஷ்பாய், தபுபென் இவர்கள் லண்டனுக்கு சென்று, திரும்பும் கனவில் இருவரும் உயிரிழந்தனர்.
மீண்டும் இவ்வாறு நிகழாமல் இருக்கவேண்டும், உயிர் நீத்த அனைவரின் ஆத்மா சாந்தியடையட்டும்