உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிவேக இன்டர்நெட் சேவை: ஏர்டெல் - ஸ்டார்லிங்க் ஒப்பந்தம்

அதிவேக இன்டர்நெட் சேவை: ஏர்டெல் - ஸ்டார்லிங்க் ஒப்பந்தம்

புதுடில்லி: இந்தியாவில் தனது பயனர்களுக்கு அதிவேக இன்டர்நெட் சேவை கிடைப்பதற்காக ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் ஏர்டெல் ஒப்பந்தம் போட்டு உள்ளது.உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். அதில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் கீழ் ஸ்டார்லிங்க் இயங்கி வருகிறது. மொபைல்போன் சிக்னல் இல்லாத இடங்களுக்கும் சாட்டிலைட் மூலம் இன்டர்நெட் சேவை கிடைக்க வேண்டும் என்பதே ஸ்டார்லிங்க்கின் திட்டம். ஸ்டார்லிங்கின் சேவை இதுவரை இந்தியாவில் கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில், தனது பயனர்களுக்கு அதிவேக இன்டர்நெட் சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக ஏர்டெல் நிறுவனமானது, ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு உள்ளது.வணிக நுகர்வோர்களுக்காக ஏர்டெல் வாயிலாக ஸ்டார்லிங்க் சேவை கிடைப்பதால், இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள், சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றை இணைக்க ஏதுவாக இருக்கும் என ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ளது. மேலும், ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் சாதனங்களை ஏர்டெல் நடத்தும் நிறுவனங்களில் கிடைக்க செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு உள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

saravan
மார் 11, 2025 19:33

ஏர்டெல் சேவை மிகவும் மோசம். 5g என காட்டினாலும் 4g data கழிந்து விடுகிறது. அதிகமான 5g tower illai...Plan rate அதிகம். Jio எவ்வளவோ மேல்...


சிவம்
மார் 11, 2025 19:04

மத்தியில் 2014 இல் பிஜேபி பதவி ஏற்ற பிறகு இணையதள டேட்டா சேவைக்கு வசூலிக்கப்படும் கட்டணம் பெருமளவு குறைக்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் மிக அதிக கட்டணம் வசூலிக்க படுகிறது. TRAI ஏதாவது செய்து கட்டணத்தை குறைத்தால் நல்லது. இல்லையெனில், இணையதள வேகம் என்ன அதிகமாக செய்தாலும் நுகர்வோருக்கு பயன் இல்லை.


Naresh Kumar
மார் 11, 2025 18:14

இது முதலில் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம் இப்பொழுது பணம் மற்றும் பதவி விளையாடி இருக்கிறது போல.


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 12, 2025 09:43

என்ன தான் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஊக்கப் படுத்தி நிதி கொடுத்தாலும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஒத்துழைப்பது இல்லை. அவர்கள் சுக ஜீவனவாசிகள் ஆகிவிடுவார்கள். அதுவே போஸ்ட் ஆஃபீஸ் பாருங்கள் அழிந்து இழுத்து மூட வேண்டிய நிலையில் இருந்தது தற்போது மத்திய அரசோடு அந்நிறுவன ஊழியர்கள் பெருமளவு ஒத்துழைப்பு கொடுத்து புதிய கிளைகள் கூட திறக்க வேண்டிய அளவிற்கு வளர்ந்து விட்டது. பிஎஸ்என்எல் ஊழியர்கள் தலை முதல் கால் வரை மத்திய அரசின் நிர்வாகத்தோடு ஒத்துழைக்கா விட்டால் பீபிஎல் ஏர்செல் போல இழுத்து மூட வேண்டியதுதான்.


சமீபத்திய செய்தி