உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நெறிமுறைகளை நீதிபதிகள் மீறியிருந்தால்...: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பேச்சு

நெறிமுறைகளை நீதிபதிகள் மீறியிருந்தால்...: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவியேற்ற பிறகு மஹாராஷ்டிராவில் நடந்த பாராட்டு விழாவில், தலைமைச் செயலர், டிஜிபி மற்றும் மும்பை போலீஸ் கமிஷனர் பங்கேற்கவில்லை எனக்கூறிய பி.ஆர்.கவாய், '' நெறிமுறைகளை(Protocals) நீதிபதிகள் மீறியிருந்தால், சுப்ரீம் கோர்ட்டுக்கு அரசியல் சாசனத்தின் 142வது பிரிவு வழங்கியுள்ள சிறப்பு அதிகாரம் குறித்து விவாதம் எழுந்திருக்கும்'' எனக்கூறியுள்ளார். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவியேற்ற பிறகு பிஆர் கவாய் முதல்முறையாக சொந்த மாநிலமான மஹாராஷ்டிரா வந்தார். மும்பையில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்றார். மஹாராஷ்டிரா மற்றும் கோவா மாநில வழக்கறிஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் மாநில தலைமைச் செயலர், டிஜிபி மற்றும் மும்பை போலீஸ் கமிஷனர் வரவில்லை.இதனைத் தொடர்ந்து, அக்கூட்டத்தில் தலைமை நீதிபதி பேசியதாவது: ஜனநாயகத்தின் மூன்று தூண்களான நீதித்துறை , சட்டம் இயற்றும் மன்றங்கள், நிர்வாகத்துறை ஆகியன சமம். ஒவ்வொரு அமைப்பும் ஒன்றை ஒன்று மதித்து நடக்க வேண்டும். மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவின் தலைமை நீதிபதியாக பதவியேற்று முதன்முறையாக மஹாராஷ்டிராவிற்கு வந்தால், மாநில தலைமைச் செயலர், டிஜிபி, அல்லது மும்பை போலீஸ் கமிஷனர் அங்கு இருப்பது பொருத்தமானது அல்ல என்று அவர்கள் நினைத்தால், அதைப் பற்றி அவர்கள் சிந்திக்க வேண்டும்.நெறிமுறைகள் புதிய ஒன்றல்ல. ஒரு அரசியலமைப்பு மற்றொரு அமைப்புக்கு அளிக்கும் மரியாதையைப் பற்றியது. ஒரு அரசியலமைப்பின் தலைவர் முதல்முறையாக மாநிலத்திற்கு வரும் போது, அவர்கள் நடத்தப்படும் விதத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த நெறிமுறைகளை நீதிபதிகளில் ஒருவர் மீறியிருந்தால், அரசியல்சாசனப்பிரிவு 142 பற்றிய விவாதம் எழுந்திருக்கும். இவை சிறிய விஷயங்களாக தோன்றலாம். ஆனால், அது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இதனைத் தொடர்ந்து, அம்பேத்கர் நினைவிடத்திற்கு சென்றார். பாராட்டு விழாவில் அதிருப்தி தெரிவித்து பேசியது குறித்து அறிந்த உடன் தலைமைச் செயலர் சுஜாதா சவுனிக், டிஜிபி ராஷ்மி சுக்லா மற்றும் மும்பை போலீஸ் கமிஷனர் தேவன் பாரதி ஆகியோர் இங்கு வந்து தலைமை நீதிபதியை சந்தித்தனர்.

142 வது சட்டப்பிரிவு

தமிழக அரசு இயற்றிய சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமலும், திருப்பி அனுப்பாமலும் வைத்துள்ளதாக கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட்டுக்கு அரசியல் சாசனத்தின் 142வது பிரிவு வழங்கியுள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, தமிழக கவர்னர் மற்றும் ஜனாதிபதியிடம் கிடப்பில் இருந்த 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதாக அறிவித்தனர்.. இவ்வாறு நடப்பது இதுவே முதல் முறை என்பதால், நாடு முழுதும் அரசியல் அதிர்வை உண்டாக்கியது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டிற்கு 14 கேள்விகளை எழுப்பியுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு அதற்கு பதிலளிக்கும்படி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Vijay Elangovann
மே 20, 2025 20:06

இந்திய தலைமை நீதிபதி தெரிவித்த கருத்துகள் வரவேற்கத்தக்கதே. ப்ரோடோல் முறையாக பின்பற்ற வேண்டும் என்பது விதியல்ல மாறாக மரபு. விதியை மீறினால் தண்டனை. ஆனால் மரபை மீறினால் கண்டனம். இதுவே நடைமுறை யாரும்


Palanivelu Manickam
மே 19, 2025 15:12

உங்களது கருத்து மிகவும் சரி


Senthilkumar
மே 19, 2025 08:02

நீங்கள் அரசியல் சாசனம் சட்டத்தை படி க்கவில்லை என தெரிகிறது


Senthilkumar
மே 19, 2025 07:54

அரசியல் சாசனம் உச்சநீதி மன்றத்தின் முடிவே இறுதியானது என்று சொல்கிறது


MUTHU
மே 19, 2025 09:25

உண்மையே. பைபிளினை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் அர்த்தம் கொள்வதினாலேயே இத்தனை பிரிவுகள் தோன்றின. அதனை போன்றது தான் ஒவ்வொரு அரசியல் சாசனமும்.


A Govi!daraj
மே 19, 2025 10:45

பாராளுமன்றம் நீதித்துறை ஆகிய இந்த இரண்டைவிட அரசியல் சாசனம் மிக உயர்ந்தது


rengaraju sourirajalu
மே 19, 2025 07:39

No,The chief Justice has emphasized in his statement that all the three Pillars of Democracy should respect each other as they are equal to one another.Also he said that such functioning of respecting one another alone will deliver fruits of Democracy.


DHANASEKARAN DEVAN
மே 19, 2025 04:32

ஒரு சட்டமன்ற உறுப்பினர் வெற்றி பெற்றதை ஆட்சேபித்து தொடர்ந்த வழக்கில் அவர் பதவிக் காலம் முடியும் வரை தீர்ப்பளிக்காமல் இருந்ததை எதிர்த்து நீதித்துறை மீது சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி..... குடியரசு தலைவருக்கான சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அவர் அந்த வழக்கில் தீர்ப்பை அளித்திருந்தால்? மேலும் கீழமை மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு வழக்கை விசாரிப்பதற்கான கால வரம்பை சொல்லி உத்தரவிட்டு இருந்தால்....? இலட்சுமன கோட்டை நீதிமன்றம் மீறுகிறதோ?


mohan govindarajalu
மே 19, 2025 06:32

Time frame is required for judiciary also.


rengaraju sourirajalu
மே 19, 2025 07:41

The concerned judge should be taken in to task definitely...


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 18, 2025 22:31

வக்கீல் சங்கம் நடத்தும் விழாவில் அரசு உயரதிகாரிகள் கலந்து கொள்வது மரபல்ல... முறையுமல்ல... ஆக பதவியேற்ற பிறகு நடந்த முதல் கூட்டத்திலேயே அரசியல் பேசியிருக்கிறார் தலைமை நீதிபதி. நீதி பரிபாலனத்தைவிட நிதி பரிபாலனத்தைச் செய்ய முன்னுரிமை கொடுப்பார் என்று நம்பலாம்.. நிதி குடும்பத்துக்கு நிச்சயம் முட்டுக்கொடுப்பார் ....


மீனவ நண்பன்
மே 18, 2025 22:28

Supreme Court Bar Association, hosts farewell party on the eve of retirement of every judge or CJI. This has been the traditions ever since SCBA was established. There has never been an exception, But yesterday, SCBA , d a history. It did not give farewell to Justice Bela Trivedi. Her mistake. Had been law secretary of Gujarat under Modi, Before becoming a high court judge, SCBA, president who else Kapil sibal. Such is the intolerance of Kapil sibal and the ideology he believes.


ஆரூர் ரங்
மே 18, 2025 21:58

நீதிபதிகள் கூடியவரை பொதுவிழாக்களில் கலந்து கொள்வதைத் தவிப்பது நலம். பதவி என்பது நாட்டுக்கான கடமை. ஊர் கூடி மாலையிட வேண்டும் என்னவெல்லாம் எதிர்பார்க்கக்கூடாது. பிற்காலத்தில் நடுநிலையை சந்தேகிக்கும் நிலை ஏற்படலாம்.


ஆரூர் ரங்
மே 18, 2025 21:54

அரசு விழா இல்லை எனும் போது தலைமைச் செயலாளர், டிஜிபி கலந்து கொள்வது சரியாக இருக்காது. வக்கீல்கள் சங்கம் ஏற்பாடு செய்ததும் சுய நலத்திற்காக இருக்கலாமே.


சுந்தரம் விஸ்வநாதன்
மே 18, 2025 22:08

வக்கீல்கள் சங்கம் ஒரு நீதிபதிக்கு விழா எடுப்பதற்கும் அரசு ஊழியர் சங்கங்கள் முதலமைச்சருக்கோ அல்லது துறை அமைச்சருக்கோ விழா எடுப்பதற்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா கோப்பால்?


முக்கிய வீடியோ